(Reading time: 9 - 17 minutes)

"தினமும் இவங்கக் கூட போராட்டமா போச்சு!என்னை கத்த வைக்காதீங்க!என்னால முடியலை!"-சற்றே மேடிட்டு இருந்த தனது அடிவயிற்றை தாங்கியப்படி அவள் கூற,சட்டென எழுந்து அமர்ந்தான் விஷ்வா.திருதிருவென சில நிமிடங்கள் தன் தாயின் முகத்தினையே உற்றுப் பார்த்தவன்,பின்,தந்தையின் பக்கம் திரும்பி,

"அப்பா!எழுந்திரிங்கப்பா!"என்றான்.

ஒரு புன்னகையோடு அவனருகே அமர்ந்தாள் பார்வதி.

"அம்மா!"

"என்னடா கண்ணா?"

"நான் தங்கச்சிக்கிட்ட பேசணும்!"

"அப்படியா?வாங்க..!"-தன் தாயின் வயிற்றில் செவிகளை வைத்தவன்,

"குட் மார்னிங்!"என்றான் வாஞ்சையோடு!!கர்ப்பத்தில் இருக்கும் போது ஒரு சிசுவிற்கு  கிட்டும் அன்பானது வலியது!அதிலும்,தமையனின் அன்பை குறித்து கேள்வி எழுப்ப தான் வேண்டுமா?ஆயிரம் சண்டைகள்,யுத்தங்கள் மூளட்டும்,ஒரு தமையனை காட்டிலும் ஒரு ஸ்திரியின் மேல் நேசத்தினை யாராவது பொழிய இயலுமா?ஈன்ற தாயாலும் இயலாது!!

"நான் இன்னிக்கு லீவு போட்டுவிடட்டா?"

"எதுக்கு சார்?"

"நான் என் தங்கச்சி கூட இருக்க போறேன்மா!"-பிறப்பதன் முன்பே கருவில் வளரும் சிசுவை தங்கை என்று உறுதி செய்தவன்,அவள் மேல் பொழியும் அன்பு பல சமயங்களில் பார்வதியையே திகைக்க வைக்கும்!!

"இப்போ லீவு எடுத்தா,அப்பறம் உன் தங்கச்சி வந்தப் பிறகு என்ன பண்ணுவ?"

"ஆமா..."

"ஆமா தானே!அதனால,இப்போ நல்லப்பிள்ளையா ஸ்கூலுக்கு போ!அப்பறம்,லீவு போட்டுக்கலாம்!"

"ஹையா!நான் போய் பிரஷ் பண்ணிட்டு வரேன்!"-என்று தன் தாயின் வயிற்றிலும்,நெற்றியிலும் முத்தமிட்டு ஓடினான் விஷ்வா.மனம் முழுதும் பூரிப்போடு அமர்ந்திருந்தவளின் கரத்தினை சட்டென பற்றி இழுத்தான் ருத்ரா.நிலை தடுமாறியவள்,அலறியப்படி அவன் மீது சாய்ந்தாள்.

"ஆ...என்னங்க நீங்க?விடுங்க!"

"நானும் என் பொண்ணுக் கூட பேசணும்!"

"அப்போ இவ்வளவு நேரம் முழிச்சிட்டு தான் இருந்தீங்களா?"

"ஆமா!விஷ்வா மட்டும் பேசினான் நான் என் பொண்ணுக் கூட பேச கூடாதா?"

"என்ன பேசணும்?"

"அதெல்லாம் எங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும்!"

"அவ்வளவு நேரம் எல்லாம் இல்லை!நான் விஷ்வாவுக்கு டிபன் ரெடி பண்ணணும்!"

"போ!என்னை கண்டுக்கவே மாட்டுற?"

"சரி...வந்து பேசுங்க!"-புன்னகையுடன் கூறினாள் அவள்.

அவளது வயிற்றில் செவிகளை வைத்தவன் நீண்ட நேரமாக மௌனமாய் இருந்தான்.

பின்,ஏதும் பேசாமல் மௌனமாய் இருந்தவன் தன் மகள் வசிக்கும் புண்ணிய ஸ்தலத்தை தன் இதழ்களால் ஒற்றி எடுத்தான்.

"நீங்க கூட தான்!உங்க பொண்ணை மட்டும் தான் கவனிக்கிறீங்க!என்னை கண்டுக்கறதே இல்லை!"-எங்கோ நோட்டமிட்டப்படி கூறினாள் அவள்.

"திருடி!"-என்றவன்,மீண்டும் தன்னை நோக்கி அவளை இழுத்தான்.

"விடுங்க..விஷ்வா வந்துடப் போறான்!"-என்று பதறியப்படி விலகினாள் பார்வதி.

இனிய இல்லறம் இனிதே தொடங்கி,தனது ஆட்சியை அங்கு ஆழமாய் ஸ்தாபித்துக் கொண்டிருந்தது.

தொடரும்

Episode # 17

Episode # 19

{kunena_discuss:1070}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.