(Reading time: 11 - 22 minutes)

கோபத்தின் உச்சியில் இருந்தவளை பார்ப்பதற்கே கொஞ்சம் பயமாக இருந்தது வைஷ்ணவிற்கு!!

"பொம்மு ப்ளீஸ் காம் டவுன்" என்று மித்ரன் அவள் தோள் பற்றி அவளை நகர்த்தி செல்ல முயன்றான். அவன் பரிதாப பார்வை வைஷ்ணவி தழுவி சென்றது..

"விடு என்னை" கத்திக்கொண்டே  வைஷ்ணவை பார்த்து முறைத்தவள்,

"இனி எதுக்கு டா நீ அதை படிக்கணும்.. இன்னும் என்ன பண்ணனும்ன்னு இதை படிக்கிற.. நாய் குட்டி மாதிரி உன் பின்னாடி வந்தேனே கண்டுக்கிட்டயா .. இல்லை தானே.. இப்போ என்ன? எனக்கு இன்னும் என்ன பெயர் வாங்கி கொடுக்க போற.. இப்போவே எல்லாருக்கும் என்னை பத்தி தெரிஞ்சுருச்சு தானே.. நினைச்சதை பண்ணிட்ட தானே பணத்திமிர்.!! என் அம்மா உன்னால.. ச்சை.. உங்கிட்ட எல்லாம் நின்னு பேச கூட கூடாது.. இனி எப்படி எதை படிச்சு நீ தெரிஞ்சுக்கறன்னு நான் பார்க்கிறேன்"

கோபத்திலும் அழுகையிலும் வாய்க்கு வந்த வார்த்தைகளை திட்டியவள் நேராக சென்று மித்ரனின் காரில் ஏறி கொண்டாள். மித்ரனும் சென்று காரை ஸ்டார்ட் செய்து கிளம்பிவிட்டான்!!

சற்று நேரம் பித்துபிடித்தவன் போல அமர்ந்திருந்தான் வைஷ்ணவ்.. சட்டென்று ஞாபகம் வர, அவள் கிழித்து கசக்கி போட்ட பக்கங்களை எடுத்து அதை சரி செய்து மீண்டும் டைரிக்குள் வைத்தான்.

நல்ல வேளை எந்த பக்கமும் அவள் துண்டு துண்டாக கிழிக்காமல் அவசரத்தில் டைரியிலிருந்து மட்டும் கொத்தாக கிழித்து கசக்கி போட்டிருந்தாள்.

கசங்கிய பக்கங்களின் முதல் பக்கத்தில் கபேயில் அவள் அருகில் அமர்ந்து அவள் கைகளை பற்றிக் கொண்டிருந்தான் வைஷ்ணவ்!!!! இல்லை நவிரன்!!!

உயிர் தேடல் தொடரும்

Episode # 09

Next episode will be published as soon as the writer shares her next episode.

{kunena_discuss:1037}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.