“அப்படி என்னதான் அப்பா சொல்லித் தொலைந்தார்.”
“அன்னிக்கு நாம கோயிலுக்குப் போறதுக்கு முன்னாடி அவர் என்னவோ செய்துட்டார்னு அவ திட்டுனாள்ல. அன்னிக்குதான் அந்த மனுசன் என்கிட்ட வந்து குதிச்சாரு. அவளுக்கு இருக்கிற திமிருக்கு அவளை யாருக்கும் பிடிக்காதாம். அப்படியே பிடிச்சு கல்யாணம் பண்ணாலும் ரெண்டே நாள்ல அவ புருசன் அவளை வீட்டை விட்டு துரத்திருவானாம். அவ காலம் முழுக்க வாழாவெட்டியாதான் வாழனுமாம். அதுக்குதான் நான் கோயிலுக்கு போகனும்னு அடம் பிடிச்சு கிளம்பினேன்.”
சொல்லிவிட்டு பொங்கி பொங்கி அழுதாள்.
“அம்மா! அவர் சொல்லிட்டா அது அப்படியே நடந்துடுமா?”
“பெத்த பொண்ணைப் பத்தி அப்பாவே தப்பா சொன்னா அதை இந்த ஊரு உலகம் நம்பத்தான் செய்யும். பெத்த அப்பாவா அவர் உங்களுக்கு எந்த நல்லதையும் செய்யலை. ஆனால் உங்க வாழ
...
This story is now available on Chillzee KiMo.
...
ா வச்சுக்கோ.”
அவர்கள் பேசியபடியே எழுந்து வெளியில் சென்றனர்.
என்னவோ அவளுக்காகவே சொன்னது போல் இருந்தது.
மனம் ஓரளவிற்கு சமாதானம் அடைய வீட்டிற்கு கிளம்பினாள்.
அவர்கள் வீட்டு முன்னே ஒரு விலையுயர்ந்த கார் நின்றிருந்தது.
உள்ளே அமர்க்கலமாய் அவனது குரல் கேட்டது.