16. நீதான் என் சந்தோசம் - ராசு
வீட்டிற்குள் நுழைந்த போதே அந்த வித்தியாசத்தை உணர்ந்தாள் நேசமலர்.
அவளது வீடு கலகலப்பாய் இருந்தது.
சற்று முன் வந்து சென்ற போது அவர்கள் வீட்டு சூழலும் சரியில்லை. அவள் மனமும் சரியில்லை.
ஆனால் இப்போது? எல்லாமே தலைகீழாய் மாறிவிட்டது.
எல்லாவற்றையும் மாற்றியவன் அவன்.
அவளது அன்னையை இந்த அளவிற்கு மகிழ்ச்சியாய் பார்த்ததேயில்லை. எப்போதும் ஏதாவது சிந்தனையில் கவலையோடே இருப்பாள்.
எல்லாவற்றையும் மாற்றிவிட்டு ஏதுமறியாமல் அமர்ந்திருக்கும் அவனைப
...
This story is now available on Chillzee KiMo.
...
p>“வேணும்னா நீயும் வாயேன். அத்தான்கிட்ட பேசிக்கிட்டு இருக்கலாம்.”
“இன்னும் கல்யாணம் ஆகலை. அதுக்குள்ளே என்ன அத்தான் பொத்தானுக்கிட்டு. ஒழுங்கா பேச மாட்டியா?”
“அதுதான் நீ கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டியே. வீட்டிலும் எல்லாருக்கும் பிடிச்சிருக்கு. இனிமே அவர் எனக்கு அத்தான்தானே?”