“ஏன்டி! உனக்கு போன்தான் இப்ப பெரிசா போச்சா? அதைவிட முக்கியமா எத்தனையோ இருக்கு?”
”போம்மா! எனக்கு போன்தான் முக்கியம்.”
“ஏழைக்கேத்த எள்ளுருண்டைதான் வேணும்.”
“இதையே எத்தனை நாள் சொல்லிக்கிட்டு இருக்கப் போறே?”
“உன்னைப் போய் அழைச்சுட்டு வந்தேன் பாரு புள்ளைப்பூச்சியை வயித்தில் கட்டிக்கிட்டு வந்தமாதிரி.”
ஜெயசுதா தன்னையே நொந்துகொண்டாள்.
‘ஐயய்யோ! அத்தான் அதை எல்லாம் கேட்டுட்டாரா?’
கேள்வியுடன் பார்க்க அவனது சிரிப்பே அதை உண்மையென்று சொன்னது.
“ஆமா! மலர். புள்ளைப்பூச்சியை வயித்தில் கட்டுனா என்ன பண்ணும்?”
“ம்ம். எனக்கும் தெரியாது அத்தான். கொஞ்சம் இருங்க. போய் தோட்டத்தில் புள்ளைப்பூச்சி இருக்கான்னு பார்க்கிறேன். அப்படி இருந்தா உங்க வயித்தில் கட்டிவிடறேன். நீங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
உன்கிட்ட ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் போலிருக்கே?”
“புரிஞ்சுக்கிட்டா சரி.”
அவர்கள் வழக்கடித்துக்கொண்டிருக்கும் போதே சமையல் அறையில் இருந்து ஜெயசுதா வந்தாள்.
செய்தவற்றை பரிமாறி அவனிடம் நீட்டினாள்.
அவன் வாங்கி சுவைத்து சாப்பிடுவதை அன்புடன் பார்த்திருந்தாள்.