அவர்களது தாய் இப்படியெல்லாம் சமைத்து அன்புடன் பரிமாறியதில்லை.
சமையல் செய்வதற்கு ஆள் இருக்கிறது.
அதை எடுத்து பரிமாறியது கூட கிடையாது.
அவனுக்கு வீட்டை நினைத்ததும் கண்கள் கலங்கியது.
“என்னாச்சு மாப்பிள்ளை? காரமாயிருக்கா?”
ஜெயசுதா பதற அவளது கட்டாயத்தால் அறையை விட்டு வெளியில் வந்து நின்று கொண்டிருந்த நேசமலர் பல்லைக் கடித்தாள்.
“அம்மா! அத்தானுக்கு காரத்தால் கண்ணீர் வரலை. உங்க பாசத்தை நினைத்துதான் வந்தது.”
அவள் பதில் கேட்டு மற்றவர்கள் சந்தோசமாய் சிரிக்க அவள் வண்ணமலரை முறைத்தாள்.
‘இவர்களை இந்தக் கூத்தடிக்க விட்டுவிட்டு இந்த அப்பா எங்கே போனார்?’
ஒருநாளும் இல்லாத திருநாளாய் இன்று அப்பாவை தேடினாள்.
இந்த திருமணத்தை நிறுத்த முக்கியமான அஸ்திரமாக அவள் த
...
This story is now available on Chillzee KiMo.
...
டுச்சா?”
“பின்னே! என்னைப் பார்த்ததில் மிச்சத்தை யார்கிட்டே காட்டறதாம்?”
“அத்தான்! யோசிச்சுக்கோங்க. இப்ப உங்களுக்கு தப்பிக்க ஒரு வாய்ப்பு இருக்குது. அதுக்கப்புறம் நினைச்சாலும் தப்பிக்க முடியாது.”
“நானும் அவகிட்ட மாட்டறதுக்கான நாளுக்காகதான் ஆவலோட காத்துக்கிட்டிருக்கேன்.”