அவள் முறைத்துப் பார்த்தாள்.
“உனக்கு ரொம்ப பொறமையா இருந்தா நீயே உன் அத்தானை வச்சுக்கோ. நான் பேசலை.”
முகத்தைத் திருப்பிக்கொண்டு சென்றாள்.
“ஏய்! நில்லுடி.” என்று அவள் கத்துவதை காதிலேயே வாங்கிக்கொள்ளவில்லை.
வெளியில் சென்றவள் மனுதர்மனை பார்த்து கண்ணடித்தாள்.
“உனக்கு எவ்வளவு கொழுப்பு? என்னைப் பார்த்து கண்ணடிக்கிறே?”
“அத்தான்! திரும்ப திரும்ப இந்த மச்சினிச்சிய பகைச்சுக்கறீங்க. இது உங்களுக்கு நல்லதில்லை. ஆமா! சொல்லிப்புட்டேன். என்ன உங்க வேலை முடிஞ்சுடுச்சுன்னு நினைக்கறீங்களா? எங்க அக்கா பிடிவாதக்காரி. உங்களுக்கு இன்னும் ஏதாவது காரியம் ஆகனும்னா என்கிட்டேதான் வரனும்.”
முறுக்கிக் கொண்டாள்
“அம்மா! தாயே! உன் பவுசு தெரியாம உன்னை பேசிட்டேன். நீதான்த்தா மனசு வைக்கனும்.
...
This story is now available on Chillzee KiMo.
...
என்று கேட்கவில்லை.
“அம்மா! நாம டூருக்குப் போனப்போ எனக்கு இந்த டப்பா போனை வச்சுக்கிட்டு எவ்வளவு கஷ்டமா போயிடுச்சு தெரியுமாம்மா? எல்லாரும் பெரிசு பெரிசா வச்சுக்கிட்டு போட்டோவும் வீடியோவும் எடுத்தப்ப என்னால் இதை வெளியில் எடுக்க கூட முடியவில்லை தெரியுமா? எப்பதான் நல்ல போன் வாங்கித்தருவே?”