(Reading time: 10 - 19 minutes)

12. தொடர்கதை - அவளுக்கென்று ஒரு மனம் - அனிதா சங்கர்

aeom

காவ்யாவும்,விஷ்வாவும் கொண்டு வந்த உணவை அந்த வீட்டின் முற்றத்தில் அமர்ந்து மூவருமாய் உண்டனர்.

அதன் பிறகு காவ்யாவின் திட்டப்படி அங்கேயே தங்கலாம் என்றுக் கவியிடம் கூறி சம்மதம் வாங்கினர்.

அங்கே இருந்த அறை ஒன்றில் விஷ்வாவும்,காவ்யாவும் படுத்துக்கொள்ள கவி தான் படித்துக் கொண்டிருந்த நாவலை முடித்துவிட்டு வருவதாகக் கூறி விட்டு சென்றுவிட்டாள்.

அதுவும் அவர்களது திட்டத்திற்கு நன்கு உதவும் என்பதால் ஒத்துக் கொண்டனர்.

மணி 10யை நெருங்கிக் கொண்டிருக்க தங்களது திட்டத்தை செயல்படுத்த நினைத்தால் காவ்யா.

தூக்கம்  இல்லாமல் அவ்வளவு நேரம் இருந்த காவ்யா தனது அண்ணன் விஷ்வாவைப் பார்க்க அவன் அவன் நன்கு உறங்கிக் கொண்டிருந்தான்.அவனை பார்த்த உடன் காவ்யாவின் கோபம் எல்லையை தாண்டியது.அவனது அருகில் சென்றவள் அவனின் கையின் சதையைப் பிடித்து  நறுக்கென்றுக் கிள்ளினாள்.

திடிர் என்று இந்த தாக்குதலை எதிர்ப் பார்க்காத விஷ்வா கத்தப் போக அவனது வாயை மூடியவள்,”டேய்  எதுக்குடா இப்படி எருமை மாடு மாதிரி ளதூங்குற...”என்று அவனை திட்டினாள் காவ்யா.

அவளது கையை தட்டிவிட்டவன்,”நீயெல்லாம் தங்கச்சியாடி..,இப்படி கிள்ளுற..”என்று தூக்க கலகத்தில் அவன் கத்த,”அத பத்தி அப்புறம் பேசிக்கலாம் வா நம்ப எதுக்கு வந்தோமோ அந்த வேலைய பார்க்கலாம்..”என்றுக் கூறிவிட்டு இருவரும் கவியை தேடி போயினர்.

கவியை லைப்ரரியில் தேடியவர்கள் அவள் அங்கு இல்லாது போக,அவளை தேடி போயினர்.

பால்கனியில்   மல்லிகை பந்தல்  படர்ந்திருக்கும் படி இருந்த அறையில் நன்கு உறங்கிக் கொண்டிருந்தாள் கவி.அவளை கண்டுப்பிடித்தவர்கள் அந்த அறையில்  ஒரு இடத்தில் அவர்கள் கொண்டு வந்த பொருளை வைத்து விட்டு வீட்டின் அனைத்து விளக்குகளையும் அணைத்து விட்டு அந்த வீட்டின் கதவை பூட்டிவிட்டு காவ்யா நிமிர..,அவளையே கெஞ்சுதலாகப் பார்த்துக் கொண்டிருந்தான் விஷ்வா.

“என்னடா அண்ணா..”என்றுக் கேட்ட காவ்யாவிடம்,

“பாவம்டி அவ,வேண்டாம்..,ஏற்கனவே பெரியப்பா அவளைப் பாதிக்கும் படி எதுவும் செய்யக் கூடாதுன்னு சொல்லிருக்ககிறாரு..”என்று அவன்க் கூற..,”அதுல்லாம் ஒன்னும் ஆகதுனா,அவ போன் பண்ணா நாம உடனே வந்துடுவோம்..”என்று அவள்க் கூற இருவரும் தாங்கள் தங்கி இருக்கும் வீட்டை நோக்கிச் சென்றனர்.

ணி பதினொன்றை தொடும் நேரம் ஜல் ஜல் என்ற கொலுசொலியும்,நாய் குறைக்கும் சத்தமும் கேட்க்க முழித்துக் கொண்டாள் கவி.

(நம்ம ரெண்டு லூசுங்களும் இததான் பிளான் பண்ணி இருக்குங்க)

எழுந்த கவிக்கு பயமே வரவில்லை,சிறுவயதிலிருந்தே தனிமையிலே இருந்தவளுக்கு இந்த பயம் எல்லாம் வந்து வந்துப்  போனதால் அவளுக்கு இப்பொழுது இவைகளில் பயம் இல்லை.

கொஞ்ச நேரம் எங்கிருந்து சத்தம் வருகிறது என்று பார்த்தவள்,அது அறையில் இருந்து வருகிறது என்று தெரிந்துக் கொண்டு அவர்கள் வைத்து விட்டு போன அலாரத்தை எடுத்து ஆப் செய்தாள் கவி.

அதைப் பார்த்து அவளுக்கு சிரிப்புதான் வந்தது.இது கண்டிப்பாக காவியின் வேலையாக தான் இருக்கும் என்று நினைத்தவள்,அவர்கள் இருந்த அறையை நோக்கி சென்றவள் அவர்கள் அங்கு இல்லாததைப் பார்த்து சிரித்துவிட்டு போய் தனது இடத்திலேயே திரும்பிப் படுத்துக் கொண்டாள்.

காலை சூரியன் முகத்தில் அடிக்க  கண் விழித்த காவி தனது எதிரில் அமர்ந்திருந்த கவியைப் பார்த்து மிரண்டு விட்டாள்.

“என்ன காவி நான் பயம் வந்து ஜுரம் வந்து இருப்பேன்னு நினைச்சியா...”என்றுக் கேட்டுக் கொண்டே அவள் அருகில் சென்றவள் .அவளது காதைப் பிடித்து திருகினாள்.

வலி தாங்காமல் அவள் கத்த ,அவளது கத்தலில் அலறி அடித்துக் கொண்டு எழுந்தான் விஷ்வா. அங்கே கவியை பார்த்தவனுக்கு அப்பொழுதுதான் ஒரு பெருமூச்சே வந்தது.(அவர்கள் மறந்தது பூட்டிய வீட்டிலிருந்து அவர்கள் எப்படி வெளியில் வந்தாள் என்பதை அவர்கள் மறந்தனர்..)

அவன் எழுந்ததும் அவனிடம் சென்றவள்,அவனையும் ஒரு மொத்து மொத்தி எடுத்தாள்,ஒரு வழியாக அவர்களது சண்டை முடிந்து கீழே செல்லும் பொழுது காலை உணவு தயாராக இருந்தது.

அதனை முடித்துவிட்டு அவர்கள் பேசிக் கொண்டிருக்க,பெரியவர்கள் எல்லாரும் வெளியில் சென்றிருந்தனர்.

அவர்கள் வெளியில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருக்க அப்பொழுது அந்த ஊரை சார்ந்த ஒருவர்  வந்து அவர்களை பஞ்சாயத்தில் கூப்பிட்டதாக கூற,எதற்கு என்று தெரியாமலே மூவரும் அந்த ஊர் பஞ்சாயத்து கூடி இருந்த இடத்திற்கு சென்றனர்.அங்கு தனது வாழ்க்கையே மாற போவது தெரியாமல்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.