ஒரு வழியாக இருக்குடும்பத்தினரும் திருமணத்துக்கு சம்மதித்தனர் வேறு வழியில்லாமல்..
அடுத்த ஒரு மணி நேரத்தில் அவர்களது திருமணம் நடக்க திட்டமிடப்பட்டது.
அந்த அவசரத்திலும் அந்த ஊரில் இருந்த அய்யர் நேரம் குறித்துக் கொடுக்க அவர்களது திருமணம் அங்கு நடந்தது.
மாப்பிள்ளையாக அமர்ந்ந்திருந்த அஸ்வின் முகமோ இருக்கமாக இருந்தது.
அவனது அருகில் இருந்த மணப்பெண்ணான கவியின் முகமோ அழுது அழுது வீங்கியிருந்தது.
அய்யர் மந்திரங்கள் சொல்ல அவர் சொல்வதை ஏதோ கடமைக்கு செய்துக் கொண்டிருந்தனர் இருவரும்.
இருவரது மனதின் எண்ணங்களும் வெவ்வேறாக இருந்தது.
தனது மாமாவின் வாழ்க்கையை கெடுத்து அவரை தங்களிடமிருந்து பிரித்த குடும்பதிலிருந்து வந்த பெண்ணையே தனது வாழ்க்கைத் துணைவியாக்கி கொள்ளபோறோம் என்று நினைக்கும் போதே அருகிலிருந்தவளது மேல் கோபம் எல்லையை மீறி சென்றுக் கொண்டிருந்தது.
கவியின் எண்ணங்களோ அதற்குமேல் மோசமாக இருந்தது.தனது திருமண வாழ்வாவது நலமாக இருக்க வேண்டும் என்று நினைத்தாள்.அதுவும் தனது படிப்பை எல்லாம் முடித்துவிட்டு தனது திருமணத்துக்கு தானே சம்பாதித்து அந்த பணத்தை தாத்தாவிடம் கொடுத்து தனது திருமணத்தை நடத்த சொல்லவேண்டும் என்று நினைத்தாள்.ஆனால் அதுயெல்லாம் ஒரு கானல் நீராய் போவதைப் பார்த்துக் கொண்டிருப்பதை நினைத்து அவளது மனம் வேதனை அடைந்தது.
அவளது மனதை அதனை விட வேதனையடைய வைத்தது அவளது திருமணம் நடக்கும் சூழ்நிலையும்..,அந்த குடும்பத்தில் தன்னை யாருக்கும் பிடிக்கவில்லை..,அந்த குடும்பத்திற்கும் தனக்கு இருக்கும் ஒரே சொந்தமான தாத்தாக் குடும்பத்திற்கும் ஒத்துவராது என்பது தான்..
எவ்வளவு அழகாக நடக்க வேண்டிய திருமணம்,இப்பொழுது எப்படி நடக்கிறது.., அவர்களை மனதார வாழ்த்த ஒரு உள்ளம் கூட அங்கு இல்லை.
ஆகாஷ்க்கும் அந்த திருமணம் பிடிக்கவில்லை..,தனது குடும்பத்தில் நடந்த பல குழப்பங்களுக்கு காரணமான அந்த குடும்பத்தில் தனக்கு பிடிக்கவில்லை என்றாலும் தனது வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடித்த கவி அங்கு சென்று வாழ போகிறாள் என்பதே
அவனுக்கு கசந்தது..,அவனுக்கு தெரியும் அவனது தந்தை அவள் மீது எவ்வளவு பாசம் வைத்துள்ளார் என்பது அவளுக்காக அவரது ஒரே மகனான தன்னிடம் கூட இத்தனை ஆண்டுகள் பேசாமல் இருக்கிறாரே..
அய்யர் திருமாங்கல்யம் எடுத்து தர அதை வாங்கி ஜனார்த்தனன் தாத்தா தனது கைகளால் எடுத்து தர அதனை வாங்கி கவியின் கழுத்தில் கட்டினான் அஸ்வின்.
ஒருவழியாக அய்யர் சொன்ன அனைத்து சடங்குகளும் முடித்து..,பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கிக்க சொல்லி அய்யர் சொல்ல..,அவனது வீட்டினர் அனைவர் காலிலும் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்.
தனது வீட்டினரின் பக்கம் வந்த கவி,அவனும் வருகிறான் என்று நினைக்க அவன் வராமலே அவர்கள் வீட்டினரின் பக்கமே நின்றுக் கொண்டிருந்தான்.
அஸ்வின் வருவானா...
தொடரும்
{kunena_discuss:1099}