(Reading time: 9 - 17 minutes)

தொடர்கதை - நெஞ்சத்தில் பதிந்த காதலின் சுவடுகள் - 08 - கார்த்திகா கார்த்திகேயன்

Nenjathil pathintha kathalin suvadugal

மேலும் சிறிது நேரம் பேசி விட்டு அபர்ணாவை  வினோத் உடன் அனுப்பி வைத்து விட்டு அமர்ந்தாள் கீர்த்தி. பக்கத்தில் அமர்ந்து அவளையே குறு  குறு என்று  பார்த்து கொண்டிருந்தான் கார்த்திக்.

அவள் அவனை கவனிக்காமல் ஏதோ யோசனையில் இருந்தாள். ஏதோ யோசிப்பதில்  அவள் புருவம் சுருங்குவதும் சில நேரம் ஏதோ நினைத்து அவள் உதடுகள் சிரிப்பதையும்  பார்த்தவன் இதழிலும் மெல்லிய சிரிப்பு.

அப்படி என்ன  யோசிச்சு கிழிக்கிறாள்  தெரியலையே. ஆனா இவள் யோசித்தால்  வில்லங்கம்  ஆச்சே. என்ன ப்ளான் போடுறாங்க மேடம்.

மெதுவாக பேச்சை ஆரம்பித்தான். என்ன கீர்த்தி யோசிச்சிட்டு  இருக்க. அவன் குரலில் கலைந்தவள் என்ன மாமா கேட்டீங்க என்றாள்.

இல்லை  உனக்கு இருக்குறதே  கொஞ்சமே கொஞ்சம் மூளை தான் அதையும் வீணாக்கணுமா  வேணாம் மா நாடு தாங்காது

அவனை முறைத்தவள் என் மூளைக்காக நீங்க கவலை படாதீங்க  உங்க கிட்ட கடன் வாங்க மாட்டேன் 

பயபடாதீங்க மாமா எனக்கு தெரியும்  எனக்கு கடன் குடுக்கும்  அளவு மூளை உங்களுக்கு இல்லைனு.

ஏன்  டி உனக்கு வாய் குறையவே செய்யாதா

ஹெலோ பாஸ் என்ன கிண்டலா நான் பேசாம அமைதியா உக்காந்திருந்தேன்  என்கிட்ட வம்பு செஞ்சிட்டு என்னை  வாயாடினு  சொல்றீங்க 

என்னது பாஸா நான் என்ன கொள்ள கூட்டத்துக்கு தலைவனா  கேவலாமா இருக்கு

அதுவும் சரிதான் உங்களை கொள்ளை கூட்ட  தலைவனு சொன்னா  அந்த பதவிக்கு என்ன மரியாதை. எப்படி கூப்பிட பிராண நாதானு முன்னாடி  காலத்துல மாதிரி கூப்பிடவா

எம்மா  தாயே நீ  எப்பவும் போல மாமானே  கூப்டு உன்னை பற்றி  தெரிஞ்சும் உன்கிட்ட வம்பு இழுத்தத்துக்கு எனக்கு தேவை தான். சரி என்ன யோசிச்ச

அதுவா மாமா பழைய  கதையை பற்றி பேசிட்டு இருந்தோம்ல  அதை நினைத்தேன் வேற ஒண்ணும் இல்லை.

பொய்  சொல்கிறாள் என்று அவனுக்கு புரிந்தது. சரி பிறகு  கண்டு பிடிப்போம் என்று அதை விட்டுவிட்டு மறுபடியும் வம்புசெய்தான்.

உன்கிட்ட ஒரு விசயம் சொல்லணும் கீர்த்தி

சொல்லுங்க  மாமா

எங்க ஆஃபீஸில்   நீனா  னு ஒரு பொண்ணு வேலை பாக்குறா

சரி அதுக்கென்ன. அவள் குரலில் சற்று கடினம் வந்தது. ஏதோ பிடிக்காத விசயம் சொல்ல போறான் என்று உள் மனது சொல்லியது.

அவ முன்னாடி இருந்தே என்னை  ஸைட் அடிச்சுட்டே இருப்பாள். அவள் என்னை பார்ப்பது எனக்கு தெரியும் அதனால் விலகி போய்ருவேன். ஆனா நேத்து என்கிட்ட வந்து பேசவே செஞ்சிட்டா. ஆனால் ட்ரெஸ் நல்ல இருக்குனு தான் சொன்னாள் எனக்கு தான் திக்குனு இருந்தது. வந்து லவ்   பண்ணுரேனு சொல்வானு நினைத்து  பயந்தே போனேன்.  கல்யாணம் ஆகிவிட்டது என்று சொன்னால்  நம்புவாளான்னு தெரியலையே  சொல்லி விட்டு அமைதியாக அவளை பார்த்தான் இப்ப இந்த லூசு அழ போறாள்  இல்லாட்டி என்கிட்ட சண்ட  போடும். ரெடீ ஸ்டார்ட் என்று மனதுக்குள் சொல்லி கொண்டான்.

ஆனால் அவன் நினைப்பை பொய்  ஆக்கி  அவனை பார்த்து சத்தம் போட்டு சிரித்தாள் கீர்த்தி.

ஏன்  கீர்த்தி சிரிக்குற

இல்ல மாமா அன்னைக்கு  எங்க காலேஜ் பையனை வந்து மிரட்டுனீங்களே  அதே மாதிரி உங்க ஆஃபீஸ் வந்து நான் மிரட்டு னா  எப்படி இருக்கும்னு நினைச்சு பார்த்தேன் அதான்  சிரிப்பு வந்தது.

ஏய்  அப்படி எல்லாம் செஞ்சிராத மா

ஏன்  செய்ய  கூடாது நான் செய்வேன் நீங்க மட்டும் இவ என் பொண்டாட்டி அவள இனி டிஸ்டர்ப் பண்ண கொலை பண்ணிட்டு ஜெயிலுக்கு  போவணு சொன்னீங்க. நானும் சொல்றேன் என் புருஷனை பார்த்து ஸைட் அடிச்சா  கொண்ணு புதைத்துவிடுவேன்னு   எப்படி என் ஐடியா என்று சொல்லி அவனை புல்லறிக்க வைத்தாள்.

சிரித்து  கொண்டே சொன்னாலும் அவள் குரலில் அப்படி ஒரு உறுதி யாருக்காகவும் உன்னை விட்டு கொடுக்க மாட்டேன் என்ற திமுரு  அவள் குரலில் வெளிப்பட்டதை  பார்த்தவன்  மனம் வானில் சிறகடித்தது 

காதலிப்பதை  விட காதலிக்க படுவது  சுகம் தான் போல. அதை அனுபவித்தவன் கண்களை ஒரு நிமிடம் மூடி திறந்தான்.

அவனையே பார்த்து கொண்டிருந்தவள் இப்ப என்னை கோபபடுத்த தான சொன்னீங்க. அவள் உங்களிடம் வந்து லவ் பண்றணு சொன்னாலும் நீங்க அவளுக்கு புரிய வச்சிறுவீங்கணு தெரியும். நீங்க சொன்னது பொய் தான மாமா 

ஆமா கீர்த்தி பொய்  தான். அவள் என்னை பார்ப்பது தெரியும். அதனால் நான் ஒரு வாரம் முன்னாடியே  எல்லாருக்கும் சொல்லி  விட்டேன்  அடுத்த வாரம் ரிசப்சன் என்று.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.