(Reading time: 9 - 17 minutes)

அதை கேட்டு அவள் முகம் பூவாக மலர்ந்தது.

என்ன டா  பாப்பா முகம் அப்படியே மின்னுது என்னவாம் என்ற படி  வந்தான் வினோத்.

என்னது  பாப்பாவா  ஏன்  டா  பீப்பா  மாதிரி இருக்குறவளை பாப்பா னு சொல்ற உனக்கு ஞாயமா.

இங்க பார் டா  தோசையை திருப்பி போட்றதை  யாரோ ஒரு ஆள் அன்னைக்கு உறுகுனாங்க அவ பேபீ  டா  என்று. உனக்கு தெரியுமா கீர்த்தி என  உண்மையை போட்டு உடைத்தான். ஆனந்தமாக அவனை பார்த்தாள்  கீர்த்தி. அசடு வழிந்தான் கார்த்திக்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்வையாலே பருகி கொண்டிருக்க கரடியாய் தொண்டையை செருமினான் வினோத்.

சட்டென்று கலைந்தவர்கள் அவனை முறைத்தனர். உங்க ரொமன்ச அப்றம்  வச்சிக்கொங்க என்ன சந்தோசம்னு கேட்டேன்ல  பதில் சொல்லு.

அடுத்த வாரம் ரிசப்சன்னு சொன்னேன்ல டா  அததான்  சொன்னேன் மேடம் க்கு  சந்தோசம்

என்னது  இப்ப தான் கீர்த்திக்கு தெரியுமா பார்த்தியா கீர்த்தி உன்கிட்ட கேக்காம செய்ரான்  நான் எல்லாம் அப்பு கிட்ட கேட்டு  தான் எல்லாம்  செய்வேன் கொஞ்சம் இவனை கவனி மா  நான் கீழே  போறேன்

போய்ட்டு வாடா  நாரதா. வந்த வேலை முடிந்து விட்டது  போ என்று அவனை அனுப்பியவன் அவளை பரிதாபமாக பார்த்தான்.

ஆனால் அவள் அதை விட பரிதாபமாக பார்த்து கொண்டிருந்தாள் . என்ன டா  பாப்பா பம்மூது என்று நினைத்து கொண்டு பேசினான். உனக்கு சர்பிரைஸா சொல்லணும் என்று  நினைச்சேன் மா அதான் மித்த  படி  ஒண்ணும் இல்லை.

அதெல்லாம்  ஒண்ணும் இல்லை  மா இது வேற

வேறன்னா

அது அது வந்து நான் பீப்பா  மாதிரி குண்டா இருக்கனா  அதான் உங்களுக்கு என்னை பிடிக்கலையா. அவள் கேள்வியில் சிரித்தவன் இங்க வாயேன் என்றான்

பக்கத்தில் வந்தவள் என்ன என்பதாய்  அவனை பார்த்தாள் . உக்காந்திருந்தவன்  அவளின் கையை பிடித்து மடியில் அமர வைத்தான். கூச்சத்தோடு  அமர்ந்தவள் ஆக்சரியத்தோடு அவனை பார்த்து கொண்டிருந்தாள்.

நீ கேட்ட ரெண்டு கேள்வியில் ஒண்ணுக்கு பதில் உன்னை  பிடிக்காதா  எனக்கு. உண்ண மட்டும் தான் டீ  பிடிக்கும் முன்னாடி எப்படியோ  தெரியாது ஆனால் இப்ப எல்லாம் நான் நினைக்கிறது உன்னை பற்றி  மட்டும் தான். காதலை சொல்கிறோம் என்று தெரியாமலே சொல்லி  கொண்டிருந்தான்.

இமைக்க மறந்து அவனை பார்த்து கொண்டிருந்தாள்  கீர்த்தி. முதல் கேள்விக்கு பதில் நீ  குண்டா இல்லை. இந்த வயசுல பொண்ணுங்க எப்படி இருக்கணுமோ அப்படி இருக்க.அது மட்டும் இல்லாம அழகாவும்  இருக்க. அதாவது பசங்க ஸைட் அடிக்குற  மாதிரி போதுமா

பொய்  சொல்லாதீங்க  அப்ப  ஏன்  நீங்க என்னை ஸைட் அடிக்கவே இல்லையாம் கேட்டுவிட்டு அவன் பதிலுக்காக  காத்திருந்தாள்  கீர்த்தி. ஆனால் அவன் பதில் சொல்லாமல்  அவன் கைகள் அவள் வயிற்றில் பதிந்து அவளை தன்னுடன் இறுக்கினான்.

அதிர்ச்சியோடு அவன் முகத்தை பார்த்தாள். ஆனால் அவன் அவளை பார்க்காமல் அவள் தோள்வளைவில்  முகம் புதைத்தான். கைகள் மட்டும் வயிற்றில் ஊர்ந்தது.

அவனிடம் இருந்து விலகாமல் விலக விரும்பாமல் மாமா என்ன பண்றீங்க என்று மட்டும் கேட்டாள்.

நீ கேட்டதுக்கு தான் பதில் சொல்றேன் கீர்த்தி

எது இதுவா பதில்.நான் என்ன கேட்டேன்

உன்னை ஸைட் அடிக்கலனு கேட்ட தானே.  உன்னை ஸைட் அடிச்சிருந்தால்  என்னோட நினைப்பு இந்த மாதிரி தான் ஆயிருக்கும் ஏன்  னா  நீ என் கூடவே இருக்க. அவன் சொன்ன உண்மையில் திகைத்தாள்.

என்ன முழிக்கிற  நான் சொன்னது சரிதானா. ஒரு பையனா என்னோட ஃபீல் இப்படி தான் இருந்திருக்கும். ஆனால்  நீ  என் பக்கத்தில்  இருந்தால்  இதை எல்லாம் செய்யவும் தோன்றி  இருக்கும் அது தப்பு தான கீர்த்தி

ம்ம் ஆமா தான் ஆனாலும்...

என்ன ஆனாலும்னு  இழுக்குற உன்னை பாக்கவே இல்லைனு  கேக்க வறியா. யார் சொன்னது உன்னை பார்க்கலைனு  முண்ட கண்ணை  உருட்டாதே. அதெல்லாம் பார்க்க தான்  செஞ்சிருக்கேன் ஆனாலும் கமுக்கமா போய்ருவேன்.

பாவி   ஸைட் அடிச்சிருக்கான். கண்ணில் மின்னலோடு எப்பவாம்  என்று கேட்டாள்  கீர்த்தி.

அதெல்லாம் சொல்ல முடியாது போ

ஏன்  மாமா

நீ  மட்டும் அப்ப  எதையோ யோசிச்சு சிரிச்சிட்டு இருந்த ஏன்னு சொல்லலை அதான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.