"ஓ...நீ ஏதும் ஒளறி வைச்சியா?" என்று யோசனை படர்ந்த குரலில் கேட்டான் வெற்றி. என்னதான் அவன் அவள் வாயை மூடி இருந்தாலும் அது தற்காலிகம் தான். என்றாவது கண்மணியின் மூலமாக இந்த உண்மை வெளிவருமென வெற்றி அறிந்திருந்தான். ஆனால் இவ்வளவு விரைவாக அதை அவன் எதிர்பார்க்கவில்லை.
" நான் என்ன உளறினேனா னு நீ கேட்குற? அவங்க ரெண்டு பேரையும் வைச்சு படம் பண்ணனும்னு சொன்னியே அதுவா?" எனும் போதே அந்த போன் சத்யேந்திரனின் கைக்கு இடம் மாறியது.
" என்ன இது வெற்றி? கண்மணியின் நண்பனாக இல்லாமல் ஒரு துணை இயக்குனரா என்னை அப்ரோச் பண்ணி இருக்கலாமே!" என்றான் அவன்.
" நான் நல்ல இயக்குனரா இருக்கனும்னு ஆசை படுறேன் சத்யன். வற்புறுத்தி உருவாகும் கலை ஜெயிக்காது.. இருந்தாலும் எங்களை ஒதுக்கி வைச்சதாக எனக்கு ஃபீலிங்கஸ் வருது.."
" என் முதல் படத்துல உங்க எல்லாருக்கும் பங்கு உண்டு சத்யன். நான் ரெண்டு நாள் ஏதாவது புது ஊருக்கு போய் ஓய்வெடுக்க போறேன். திரும்பி வந்ததும் நாம சேர்ந்து பேசுவோம்!" என்று வெற்றி சொல்லவும் அதை ஆமோதித்து விட்டு போனை வைத்தான் சத்யேந்திரன்.
அருமையான நாள் இது நிரூபணா ! என்று பாராட்டுதலுடன் சொன்னான் ராகவேந்திரன். பல பிரபலங்கள் குழுமியதனால் பாதுகாப்பை வழங்க அங்கு வந்திருந்தான் அவன். தற்போது, அவனது ஜீப்பில் சிந்தனையுடன் அமர்ந்திருந்தாள் நிரூபணா.
" என்னை பாராட்டினது போதும்.. அர்ப்பணாவிடம் எப்போ பேச போறீங்க"
"ஹம்ம்...பேசனும்... ஆனால் வாய்ப்பு அமையலயே!"
"அமைச்சிக்க வேண்டியது தானே?"
"அது என் மீது அவநம்பிக்கையை உருவாக்கிட கூடாது மா!"
"எல்லாரையும் சந்தேக படுறவ இல்ல அர்ப்பணா.."
"தெரியும்..அது தானே அவளின் பலவீனம்?" சோக குரலில் சொன்னான் ராகவன்.
"பலவீனத்தில் பலத்தை தேட காதலுக்கு தெரியும்! " என்ன பீடிகை போட்டாள் நிரூபணா.
"அப்படினா??"
"கண்டுபிடிங்க... நீங்க கண்டு பிடிக்கும் நாளன்று அபி ராகவேந்திரனின் அபியாக இருப்பாள் " என்றாள். நினைப்பதெல்லாம் நடந்திடுமா? பார்ப்போம்!
-வீணை இசைந்திடும்-
{kunena_discuss:1055}