“அப்படி எல்லாம் சொல்லாதீங்க அண்ணி. அவருக்கு பழைய நினைவு திரும்பி வரனும். நீங்க சந்தோசமா இருக்கனும்.”
“நானும் அதுக்குதான் ஆசைப்படறேன். ஆனா அப்படி நடக்கலைன்னாலும் எனக்குப் பிரச்சினையில்லை. அவரைப் பார்த்துக்கிட்டே நான் சந்தோசமா வாழ்ந்துடுவேன். அவர் திரும்பி வந்துட்டார்ன்ற செய்தியே எனக்கு பேரானந்தம். அதை என்கிட்டே சொல்லாம விட்டுட்டீங்கன்னுதான் எனக்கு வருத்தம். நான் சுயநலவாதியில்லை.”
“சாரி அண்ணி. நான் உங்ககிட்ட சொல்லிரலாம்னு நிறைய முறை முயற்சி பண்ணேன். ஆனால் அண்ணன் உங்களை மறந்துட்டார்னு சொல்ல என்னால் முடியலை.”
அவன் தன்னிடம் பேசும்போது தயங்கியது ஞாபகத்திற்கு வந்தது.
“சரி வினு. எங்க வீட்டில் உள்ளவங்களை விட நீங்க எனக்காக எவ்வளவோ செய்திருக்கீங்க. இதோ ரஞ்சன் சார்கிட்ட அனுப்பி வச்சதிலிருந்தே தெர
...
This story is now available on Chillzee KiMo.
...
பெரிய விசயம். என்று மனதைத் தேற்றிக்கொண்டாள்.
அந்த வாரமும் விடுமுறையன்று வீட்டுக்கு வரச்சொல்லியிருந்தான் மனோரஞ்சன்.
“மலர். நீங்க அடிக்கடி அங்கே வாங்க. அவனோட பேசிப்பழகுங்க. அவனும் என்னமோ உங்களோட பேசிப்பழக ஆர்வமா இருக்கான். அவனுக்கு கூடிய சீக்கிரமே ஞாபகம் வந்துடும்னு நம்புவோம்.”