அதனால் அந்த வாரமும் ஞாயிறன்று காலையிலேயே மனோரஞ்சன் வீட்டுக்கு கிளம்பியிருந்தாள். தோழியின் கணவனைக் காணும் ஆவலில் மஞ்சரியும் கிளம்பினாள்.
மனோரஞ்சன் சொன்ன மாதிரியே மனுதர்மன் அவளை ஆவலுடன் நோக்கினான். புதிதாக ஒருவரைப் பார்க்கும் ஆவல் மட்டுமே அவனது பார்வையில் தெரிந்தது.
ஆர்வத்துடன் அவனது பார்வை தன்னை நோக்கினாலும் அதில் தெரிந்த அந்நியத்தன்மை கண்டு கொஞ்சம் வருத்தம் வந்தது. தன்னைக்கட்டுப்படுத்திக்கொண்டு தானும் சாதாரணமாக அவனைப் பார்க்க பழகினாள்.
“ஆன்ட்டி. அன்னிக்கு ஏன் உடனேயே போயிட்டீங்க?”
குழந்தைகள் இருவரும் குற்றம்சாட்டினர்.
“சாரிடா செல்லம். அன்னிக்கு ரொம்ப முக்கியமான வேலைன்னு போன் வந்துச்சு. அதான் போயிட்டோம்.”
“ஹாய் குட்டீஸ்.”
அருகில் நின்றிருந்த மஞ்சரி அவர்களை அழைத்த
...
This story is now available on Chillzee KiMo.
...
கள் வந்திருப்பதே.
அதில் அவர்களுக்கு ஏன் நெகிழ்ந்திருக்கிறது என்றால் மூவருக்கும் தங்கைகள் என்ற அழைப்புடன் ஒரே மாதிரி பட்டுப்புடவையை பரிசாக வாங்கித்தந்து அந்த உடையுடன்தான் விழாவில் வந்து கலந்துகொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தான் முரளி. அருகில் முகமலர்ச்சியுடன் அமர்ந்திருந்தாள் ராதா.