(Reading time: 6 - 11 minutes)

 

உதடுகள் தந்தி அடித்தது…

 இறுக இதழ் மூடிக்கொண்டேன்…

 

என் எண்ணத்திற்கு முடிவு கட்டினாய்…

காதலுக்கு உயிர் ஊட்டினாய்…

சத்தமில்லாது அதரங்களை

சிறைபிடித்துக்கொண்டாய்…

 

இதழோடு இதழ் சேர்ந்த நேரம்

காட்டாற்று வெள்ளத்தில்…

அடித்து செல்லப்பட்டேன்…

ஹோ வென பேரிரைச்சலுடன்

வந்த அலையில் காணாது போனேன்…

ஆனந்த ப்ரவாகத்தில்

மூழ்கி மூழ்கி

என் இதழ் ஆழியில்

முத்தெடுத்தாய்…

கண்கள் சொறுகியது…

கைகள் வலுவிழந்தது…

 

இதய துடிப்பின்

வேகம் அதிகரித்தது…

மூச்சுக்குப் போராடி

திணறினேன்…

உன் முதுகின் மேல்

நகங்களைப் பதித்தேன்..

திமிற திமிற அதிகம்

ஆழந்து போனாய்

என் அதரங்களில்…

 

உன்னை எதிர்க்க நான் கொண்ட

முயற்சிகள் அனைத்தும்

நிழலுக்கு இறைத்த நீராயின…

இது விடுபட முடியா

போர்ர்களம் என்பதை

தெரிந்து கொண்டேன்…

நீயும் நானும் மட்டும்

இருக்கின்ற உலகத்திற்கு

சென்றதாக உணர்ந்தேன்…

 

வெளிவர விரும்பா

மோன நிலையில்

எத்தனை மணி நேரம்

உன் செவ்விதழ்

என் பூவிதழோடு

காதல் மொழி பேசியதோ???

கொஞ்சி கதை சொல்லியதோ???

மாயங்கள் பல செய்ததோ???

முத்து குளித்து

கலைத்துப்போனவனாய்

என்னை விடுவித்தாய்…

 

இமை திறவா கண்களுடன்

அப்போதும் நான் இருந்ததேன்???

ஒதுங்கிய கற்றைக்கூந்தல்

என் முகம் மீது விழுந்ததேன்???

சரி செய்யும் நினைவுடன்

கேசம் நீ ஒதுக்கியதேன்???

அந்நேரம் என் உதடுகளும்

நடுக்கம் கொண்டதேன்???

சின்ன புன்னகையுடன்

மீண்டும் என் அதரங்கள் நோக்கி

நீ குனிந்ததேன்???

 

நாழிகைகள் கடந்தது

உனக்கு புரிந்ததோ???

எனை விடுவித்தாய்

இதழ் சிறையிலிருந்து…

சிலையென சமைந்து நின்றேன்…

உன் இதழொற்றுதலில்

தொலைந்து தான் போனேன்…

நிற்க தெம்பில்லாது

உடல் தாளாது சரிந்தேன்…

அள்ளிக்கொண்டாய் நீயும்

என்னை அவசரமாய்…

நான் தரை எட்டும் முன்…

 

உதட்டில் உருவான புன்னகையா?...

இல்லை மனதில் பூத்த உவகையா???

அறியவில்லை நான்…

சிறிதும் தாமதிக்காமல்

உன் இறுகிய அணைப்பில் அடங்கினேன்

மொத்தமாய் வசமிழந்து…

அன்றைய அந்த நிமிடங்கள்….

ரசித்தேன்… மகிழ்ந்தேன்… திளைத்தேன்…

மூச்சு முட்ட காதலித்தேன்…

ஆம்… தனிமையில் உன்னோடு நான்…

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.