(Reading time: 63 - 126 minutes)
புத்தாண்டு சிறப்பு சிறுகதை - மேஹதூதம் பாட வேண்டும் - சசிரேகா
புத்தாண்டு சிறப்பு சிறுகதை - மேஹதூதம் பாட வேண்டும் - சசிரேகா

  

”ஏய் யார் அது” என உள்ளிருந்து குரல் தர அவனோ

  

”நானா நான் சரவணன்”

  

”சரவணனா அப்படின்னு யாரும் எங்களுக்கு தெரியாதே”

  

“நாங்க பக்கத்து வீட்டுக்கு புதுசா குடித்தனம் வந்திருக்கோம், அம்மா பால் காய்ச்சினாங்க அதான் அக்கம் பக்கம் வீட்டுக்கு கொடுக்க வந்தேன், உங்கம்மா பால் குடிச்சிட்டாங்க நீங்கதான் பாக்கி நீங்க வந்து பால் குடிங்க நான் கிளம்பறேன்” என சொல்ல மலரோ

  

”ஏய் ஏய் இரு இரு போகாதே அங்கயே நில்லு” என அதட்டினாள். அவளின் தாயோ

  

”மலரு எதுக்கு அந்த தம்பியை நிப்பாட்டற விடு தம்பிக்கு ஆயிரம் வேலையிருக்கும்” என சொல்ல சரவணனோ

  

”அய்யோ அக்கா ஆயிரம் வேலையெல்லாம் இல்லைக்கா, இப்போதைக்கு வீட்ல சாமான்கள் இறக்கற வேலைதான் இருக்கு அவ்ளோதான்” என வெள்ளந்தியாக பேச அவருக்கு சரவணனை மிகவும் பிடித்துவிட்டது, அதற்குள் கதவு திறந்த படி வந்தாள் மலர், அவளைக்கண்டதும் சரவணனும் புன்னகை பூத்தபடியே

  

”வாங்க வாங்க இந்தாங்க” என பால் ட்ரேயை நீட்ட அவளோ அவனை ஏற இறங்கப் பார்த்தாள். அழுக்காக இருந்தாலும் களையாக இருந்தான்

  

”என்ன ஏற இறங்கப் பார்க்கறீங்க ஓ அழுக்கா இருக்கேன்னுதானே அது ஒண்ணுமில்லைங்க, டெம்போல இருந்து பொருட்களை இறக்கி விட்ல அடுக்கிக் கிட்டு இருந்தேன், அதான் தூசு படிஞ்சி அழுக்காயிட்டேன், எல்லா வேலையும் முடிஞ்சதும் குளிச்சிட்டேன்னு வைங்களேன் டிவி சீரியல்ல வர்ற ஹீரோ போல நான் இருப்பேன்” என சொல்ல மலர் வியப்பாக பார்த்தாள் உடனே அவரின் தாயோ

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.