(Reading time: 19 - 37 minutes)

ப்போது திடீரென்று எதிரே "A பிளாக்"இல் உள்ள வீட்டிலிருந்து பெண் சத்தம் கேட்டது.எட்டிப்பார்த்தால் அங்குள்ள ஒரு பெண்ணை ஒருவன் கழுத்தை நெறித்துக் கொண்டிருந்தான்.அவள் எவ்வளவோ போராடியும் முடியவில்லை.துடி துடித்து இறந்தாள்.நெறித்தவன் வேறு யாரும் அல்ல அவளுடைய கணவன் தான்.அதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று மனசு படபடத்தது.தடுத்தால் திருடியதற்காக நான் மாடிக் கொள்வேன் என்று மூளை சொல்லியது.மேலும் தங்கை மகள் செல்விக்கு நாளை அறுவை சிகிச்சைக்குப் பணம் கொடுத்தாக வேண்டும்.அதனால் மனதை கல்லாக்கிக் கொண்டு தடுக்க முடியா விட்டாலும் பரவா இல்லை, அதை என் போனில் வீடியோ எடுத்து விட்டேன்.அப்போது மணி இரவு 12.பாண்டி அண்ணன் போன் செய்தார்.அவரிடம் என் வீட்டில் இருப்தாகவும்,அவருடைய டிபன் பாக்ஸ் ஐ மறுநாள் கொண்டு வருவதாகக் கூறினேன்.

மறுநாள் காலை நண்பன் ஒருவன் மூலமாகப் பணத்தைத் தங்கை இடம் கொடுக்கச் சொல்லிவிட்டு,மெம்மரி  கார்டை வீட்டில் ஒழித்து வைத்து விட்டு ஒன்றும் தெரியாதது போல் கடைக்குச் சென்றேன்.வழக்கின் போக்கை அவ்வப்போது ஏட்டையா மூலம் தெரிந்து கொண்டேன்.என் மீது எவ்வித சந்தேகமும் வரவில்லை,மேலும் கேஸ் முடிந்து விட்டது என்பதையும் தெரிந்து கொண்டேன்.அதில் என்ன ஆச்சர்யம் என்றால் கொலை செய்த அவள் கணவன் மறு நாள் அழுது நடித்தும்,அவன் கொலையில் இருந்து தப்பித்து,அதை தற்கொலையாக மாற்றியதும் தான்.

12-அக்டோபர்-2012:(வெள்ளிக் கிழமை)

நேரம்:இரவு 12 மணி:

தங்கை மகள் செல்வி இறந்த துயர் தாங்காமல் இருந்த என்னை,அந்த மனநலம் சரி இல்லாத முதியவர் "செல்வி செல்வி" என்று புலம்பிக் கொண்டிருந்தது எனக்குள் இருந்த என்னை தட்டி எழுப்பியது.மகளைப் பிரிந்த என் தங்கை நான் கோவையில் இருந்த பத்து நாட்களும் எப்படி "செல்வி செல்வி" என்று அழுது கொண்டே துடி துடித்துக் கொண்டு இருந்தாளோ அதே வேதனையையும் வலியையும் தான் முதியவரும் அடைந்திருக்கிறார் என்பதை உணர்ந்தேன்.

அவருடைய மகள் தற்கொலை செய்யவில்லை, கொலை தான் செய்யப்பட்டாள் அதுவும் தன் கணவனால்,அவளுக்கு நீதி வேண்டும் என்று என் மனசாட்சி சொல்லியது.என்னுடைய தவறை மறைத்து அவள் கொலை செய்யப்பட்டதையும் மறைக்க என் மனசாட்சி இடம் கொடுக்கவில்லை. அதனால் தான் மறுநாள் போலீஸ் ஸ்டேஷன் சென்று என் திருட்டு குற்றத்தையும் ஒப்புக் கொண்டு அந்த கொலைக்கான சாட்சியும் சொன்னேன்.

நீதிபதி அய்யாவும்,போலீஸ் இன்ஸ்பெக்டரும் அவளுடையக் கணவனை தேடிக் கண்டுபிடித்துத் தண்டனை வாங்கித் தருவதாகக் கூறியுள்ளனர்.

20-டிசம்பர்-2012 (வியாழக் கிழமை)

நேரம்:பகல் 11 மணி:

குற்றம் சாற்றப்பட்டுள்ள செல்வியின் கணவனைப் போலீஸ் பிடித்து,அவனுக்கு மரண தண்டனையும் விதிக்கப் பட்டதை அறிந்தான் கதிர்.

இதை கேட்ட உடன் தான் கொலைக்கு "சாட்சி" சொன்ன அவன் "மனசாட்சி" நிம்மதியாகத் தூங்கியது. 

This is entry #57 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest 

{kunena_discuss:926}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.