" எப்பவும் இதேதான் சொல்ற மாதவ் நீ !" என்று சிரித்தான் கதாநாயகனும் நண்பனுமான மனோஜ்
" மாதவ் "
" சொல்லுடா "
" எனக்கொரு கேள்வி "
" ம்ம் கேளு "
" இது உண்மை கதையா ? உன் கதையா ?"
" ஏன் அப்படி கேட்குற ?"
" இல்ல ஹீரோ நேம் மாதவ் ஆச்சே ..அதான் கேட்டேன் ..என் கெட் அப் கூட கிட்ட தட்ட உன்ன மாதிரி தானே இருக்கு "
" ஹா ஹா "
" நீ ஏன் மாதவ் இன்னும் கல்யாணம் பண்ணிக்கல ?"
" டேய் இப்போதான் பேக் அப்ன்னு சொன்னேன் .. உனக்கு கேட்கலையா ? கெளம்பு " என்று அவனை விரட்டினான் மாதவன் ..சரியாய் அதே நேரம் எங்கிருந்தோ ஓடி வந்த சிறுமி மாதவனின் காலை கட்டிகொண்டாள் .. அந்த சிறுமியை தூக்கி கொண்டினான் மாதவன் ..
" யாரு செல்லம் நீங்க ? "
" ஆதவ் "
"..."
" எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு டா " என்று அவன் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு கண்சிமிட்டினாள் அவள் ..
" அம்மு " என்று அவன் கண்ணீருடன் அந்த சிறுமியை அணைத்து கொண்டான் மாதவ் என்கிற மாதவன் ..
ஹாய் நண்பர்களே ..எனக்கும் த்ரில்லிங் கதைக்கும் ரொம்ப தூரம் ..ஏன்னா நான் அவ்வளவு சீக்கிரம் த்ரில் கதைகள் படிச்சு பயப்பட மாட்டேன் , சோ இந்த த்ரில்லிங் கதைகளை தேடிபடித்ததும் இல்லை .. இருந்தாலும் ஆசை யாரை விட்டது ..? அதான் இப்படி ஒரு கதை .. உங்களுக்கு பிடிக்கும்னு நினைக்கிறேன் ..கருத்துகளுக்காக காத்திருக்கிறேன் ..நன்றி ..
This is entry #78 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
{kunena_discuss:926}