(Reading time: 8 - 16 minutes)

"ம்ம்ம்" நரேனின் மனதில் ஓரத்தில் ஒரு வலி. இருந்தாலும் சரி செய்து கொண்டான். அவளுக்காக.!

"எத்தனை வருஷ தவம் இல்லை நரேன்.. என்னோட முதல் காதல் நரேன் அவன்.. அவன் தான் என்னோட கடைசி காதலாவும் என் கை கோர்த்து கூடவே இருப்பான் பாரேன்"

நரேனால் தாங்க முடியவில்லை.

"கவி சரி டா, அவன் வந்த பாத்துக்கலாம் டா"

"என்ன நரேன் நீ அதான் வந்துட்டான்ல"

" ஆமாம் ஆனாலும் எல்லாமே கை கூடி வரட்டும் டா"

"ஏன் நரேன் நீயும் என்னை நம்பலையா?"

"இல்ல மா நான் உனக்கு எப்பவும் உறுதுனைய தானே இருப்பேன்? ஆனால் ஒரு வேலை அது 'அவன்' இல்லன்னா?"

"நரேன் ப்ளீஸ்.. கண்டிப்பா அது 'அவன்' தான்.. என்னோட நம்பிக்கையை அளிக்க நினைக்காதடா"

"ஹ்ம்ம்"

"இதெல்லாம் எப்போ தொடங்குச்சு? ஞாபகம் இருக்க நரேன்?"

"ம்ம்ம்.. நீ ப்ளஸ் டூ படிக்கும் போது என் கை பிடிச்சுட்டு ஒரு நாள் அழுதுட்டே உளறி கொட்டுனியே" அந்த நாள் ஞாபகங்களில் இருவரும் கரைந்தனர்.

அவளின் முதல் காதல் வேறாக இருக்க, நரேனின் உள்ளே முளை விட்ட அந்த காதலின் ஆரம்ப காலம் அவை. அவள் அந்த 'அவனை' பற்றி பேசும் போதெல்லாம் வலித்தாலும், அவள் மீதும் அவளின் அந்த கள்ளம் கபடம் இல்லாத காதலின் மீதும் நரேன் காதல் கொண்டான்.

அன்றிலிருந்து இன்று வரை அவள் காதல் கை கூட அவன் பக்க பலமாய் தான் இருக்கிறான் ஆனால் விதி அவனை விடவும் அவள் காதலை விடவும் வலியது என்று காட்டி கொண்டிருந்தது.

"ம்ம்ம் ஆமாம்.. அப்போவே தோணிடுச்சு.. உனக்கே தெரியும் ல சின்ன வயசுல பாட்டி வீட்டுல வளர்ந்தேன் அப்போ எல்லாம் அம்மாவுக்காக ரொம்ப ஏங்கி இருக்கேன்"

"கண்ணா இப்போ எதுக்கு டி அது?"

"விடு டா, அப்போ எல்லாம் யோசிப்பேன்.. அதும் அம்மா கிட்ட இருந்து ஒரு வாய் சாப்பாட்டுக்கு ஏங்குன போதெல்லாம்.. அவங்க என் தங்கையை நல்ல தான பாத்துகிட்டாங்க? ஆனா ஏன் என்ன விட்டுட்டாங்க? ஏன் தெரியுமா?"

அவனுக்கு தெரியாத ஒன்றா. இருந்தாலும் அவள் சொல்லட்டும் என்று அமைதி காத்தான். அவள் மன பாரம் குறையட்டும்.

"அவங்களுக்கு மாமியார் கொடுமை.. அந்த மாமியார் கையில வளர்ந்த என்னை பிடிக்கலை போல, நான் பெத்தாலும் அவங்க தானே உன் அம்மா மாதிரி அவங்க தான உனக்கு முக்கியம்ன்னு என்கிட்ட கேட்பாங்க, ப்ளஸ் டூ வரைக்குமே சின்ன குழந்தை மாதிரி ஏங்கி அழுதிருக்கேன், எப்போ அவன் என் மனசுல வந்தானோ அப்போவே எல்லாமே மாறிடுச்சு"

"ம்ம்ம்"

"அவன் தான் எனக்கு எல்லாம்.. ஏன் நரேன் அவன் என்ன ஏமாத்த மாட்டான்ல கண்டிப்பா வருவான் ல?"

அதில் அவளை விட அவன் பிரார்த்தனை தான் அதிகம்.

"வந்திடுவான் வா, தூங்க போகலாம்"

"அம்மா கூப்பிட்டாங்க அப்போவே"

"ம்ம்ம்" உடன் நடந்தவளை யோசனையுடன் பார்த்து கொண்டே வந்தவன் அவள் அறைக்கு சென்றதும் அம்மாவிடம் தன் மனதில் இருப்பதை இறக்கி வைத்து விட்டு அவனும் தூங்க சென்றான்.

ந்த நேரம் பவித்ராவிடம் இருந்து அழைப்பு வந்தது.

"என்னடி இந்த நேரத்துல?"

"அது வந்து"

"சொல்லு"

"ராகவி பத்தி தான் டா சொல்லி இருந்தேன்ல"

"ம்ம்ம் யாரோ சீனியர் டாக்டர் கிட்ட பேசணும்னு சொன்னியே டி?"

"ம்ம்ம்ம் பேசிட்டேன்.கண்டிப்பா அவளுக்கு ஆபரேஷன் பண்ணனும் டா"

உள்ளுக்குள் ஒரு பயம் கவ்வி கொண்டது நரேனிற்கு.

"என்ன டி சொல்ற?"

"ஆமாம் டா ஆனால் ஹோப் இருக்கு கண்டிப்பா எல்லாம் நல்ல படியா முடியும்"

"ம்ம்ம்ம்"

"இன்னொரு விஷயம்"

"ஆபரேஷன் நல்ல படியா முடிஞ்சா அவ கண்டிப்பா அவன பார்ப்பா"

"ம்ம்ம்"

"இதுல உனக்கு?"

"ச்ச இல்லடி.. எனக்கு சந்தோஷம் தான்"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.