"ம்ம்ம் ஓகே டா அடுத்த வாரம் ஆபரேஷன்"
"சரி டி அவகிட்ட சொல்லிடறேன்"
கனத்த மனதுடன் போனை வைத்தான் நரேன்.
ஆபரேஷன் தியேட்டர்..
உள்ளே செல்லும் முன் ராஜத்தின் கையையும் நரேனின் கையையும் பற்றி கொண்டாள். கண்களில் பயத்தை மீறி சந்தோஷம்.
"நான் நல்ல பாடியா வருவேன் ல நரேன், அவன்..கண்டிப்பா பார்பேன்ல"
"கண்டிப்பா கவி"
"கண்டிப்பா ராஜாத்தி" என இருவரும் சொல்ல, அங்கு வந்த சாந்தா அவள் கையை பற்றி கொண்டார்.
"அம்மா?!"
"பயப்படாத, தைரியமா இரு" என்று கூறி அவள் கைகளில் ஒரு அழுத்தம் கொடுத்தார். அவளுக்கு அது பலத்தை தந்தது.
பவித்ரா வந்து ராகவியை அழைத்து சென்றாள். ஆபரேஷன் நடந்த அந்த 45 நிமிடங்களும் வெளியே காத்து கொண்டிருந்தவர்களுக்கு நரக வேதனை.
ஆபரேஷன் நல்ல படியாக முடிந்து குடும்பமே குதூகலித்து கொண்டிருந்தது. அவள் மட்டும் மயக்கத்தில்.
மெல்ல கண் விழித்தவள் அவனை தேடி கண்களை அலைபாய விட்டாள்.
அவள் பொறுமையை சோதிக்காமல் அவனை அவளிடம் ஒப்படைத்தான் நரேன்.
"வீல்' என்று அழுத அந்த புத்தம் புது மலரை தாய்மை பொங்க அணைத்து கொண்டாள் ராகவி.
அழுகையினுடே "பாத்திங்களா அவன் தான?" என்று அவள் கேட்க,
"ம்ம்ம் ஹ்ம்ம், உனக்கு ஒரு சர்ப்ரைஸ் அவளும் தான்" என்று நரேன் கண் சிமிட்ட,
சந்தாவின் கையில் ராகவியின் மகள் சமர்த்தாய் தூங்கி கொண்டிருந்தாள். பெருமையிலும் மகிழ்ச்சியிலும் இருவரையும் மாறி மாறி முத்தமிட்டாள் ராகவி.
அனைவரும் அங்கிருந்து செல்ல, நரேன் அவளின் நெற்றியில் முத்தமிட்டு,
"ஹே பொண்டாட்டி என்னடி முதல் காதல் அது இதுன்னு சொன்ன.. சரி ரெண்டாவது நான் தான்னு பார்த்த, இப்போ மூணாவது தான் நானா? ஆனாலும் ஸ்கேன்ல அவன பார்த்திட்டு நீ குடுத்த பில்டப் தாங்கல டி"
"ஹஹஹா ஆமாம் போடா"
"ம்ம்ம் ராட்சசி, உன் உடம்புல தெம்பு இல்ல நார்மல் டெலிவரி ஆகாதுன்னு சொன்ன உடனே எவ்வளவு பயந்தேன், நீ என்னடான்னா உன் மகனை பாக்கறதுலையே குறியா இருந்த?"
"ம்ம்ம் நரேன், நாலு வருஷமா குழந்தை இல்லைன்னு என்ன பேசுனவங்க எல்லாம் வாயை இறுக்கமா முடிக்கற மாதிரி என் பொன்னும் வந்திட்டா இல்ல?"
"ஆமா டா"
"எப்போ எங்க அம்மாவை பத்தி தப்ப யோசிக்க குடதுன்னு நினைச்சானோ அப்போவே இந்த சின்ன குட்டி என் மனசுல வந்துட்டான். எனக்கு பொறக்கிற குழந்தைங்கள பாகுபாடு காட்டாம வளர்தனும்னு எத்தனை ஆசை. எல்லாம் நிறைவேறிடுச்சு இல்ல?"
"ம்ம்ம்ம்ம் என் கண்ணம்மா"
அன்றிரவு உறங்கி கொண்டிருந்த தன் மழலைகள் அருகில் அமர்ந்து கண்களில் நீருடன் முதல் காதல் நிறைவேறி விட்ட நிம்மதியுடன் அந்த பாடலை பாடிக் கொண்டிருந்தாள் ராகவி.
கண்கள் நீயே காற்றும் நீயே
தூணும் நீ துரும்பில் நீ
வண்ணம் நீயே வானும் நீயே
ஊணும் நீ உயிரும் நீ
பல நாள் கனவே……….
This is entry #79 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
{kunena_discuss:926}