(Reading time: 16 - 31 minutes)

சிரமப்பட்டு தேற்றிக்கொண்டு, “இப்போ ஒரு சர்ஜெரி இருக்கு... என்ன வேணா நடக்கலாம்னு சொல்றாங்க” என்று சிவம் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே தொண்டை அடைத்துக்கொண்டு அழுகை வந்தது அவருக்கு.

“அதுக்கு முன்னாடி உன்னை பார்க்கனும்னு ஆசைபட்டாள்” என்று பார்வதி முடித்தார். சொன்ன செய்திகளை கேட்டு கதிரால் ஜீரணிக்க முடியவில்லை, அவனது முகம் காட்டும் பாவனையெல்லாம் மதியின் கண்கள் உள்வாங்கிக்கொண்டு இருந்தது. அவளது கை தானாக கதிருடன் இணைந்து கொண்டு அவனை சமாதானம் செய்தது. சில மணி துளிகளில் சுதாரித்தவன் “அதுதென்ன என்ன வேணாலும்...எல்லாம் நல்லது தான் நடக்கும் நீ பயப்பிடாத மதி இதெல்லாம் சும்மா.. நீ வேணா பாரு திரும்பி வந்து நான் தாடி வைக்கும் போதெல்லாம் திட்ட தான் போற நான் உன்னை வம்பிளுத்துட்டே தான் இருக்க போறேன்” என்று கண்ணில் நீர் வந்தாலும் மறைத்து அவளுக்கு ஆறுதல் கூறினான்.

அவனது கன்னம் தடவியவள் “நீ இருக்கும் பொழுது எனக்கு என்னடா பயம்...” என்றாள்.

சில மணிகளிலேயே அவள் ஆப்பரேஷன் தியேட்டர் அழைத்து செல்லபபட்டாள். உறைந்து போய் சர்ஜரியின் முடிவுக்காக காத்திருந்த மூவரும் ஆப்பரேஷன் தியேட்டரில் இருந்து மருத்துவர் வெளியே வரவும், நெஞ்சு கூட்டுக்குள் இருந்த இதயம் தவறி தொண்டையில் துடிப்பதை உணர்ந்தனர்.

இப்படி எதுவும் நிரந்தரம் அற்ற வாழ்க்கையில், எப்போ எது நடக்கும்ன்னு தெரியாமல் த்ரில்லாக இருக்க, சின்ன சின்ன சுகத்தையும் ஆசையையும் கொன்று வாழ்தலில் என்ன பயன்...

எது நடந்ததோ

அது நன்றாகவே நடந்தது

எது நடக்கிறதோ

அது நன்றாகவே நடக்கிறது

எது நடக்க இருக்கிறதோ

அதுவும் நன்றாகவே நடக்கும்!!! 

This is entry #89 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

{kunena_discuss:926}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.