(Reading time: 32 - 63 minutes)

வள் அந்த விழிகளில் தன்னைத் தொலைத்தவளாக அவனையேப் பார்க்க, அவன் சட்டென்று பார்வையை விலக்கிக்கொண்டு உள்ளே சென்றான்….

அவன் வா என்று அழைக்கவில்லை… எனினும் அவள் தயங்கியபடி உள்ளே சென்றாள்…

“எங்க வந்த?....”

அவனின் கேள்வியில் தூக்கிவாரிப்போட்டவளாக அவள் நிமிர,

“உன்னைத்தான் கேட்குறேன்… இங்க எதுக்கு இப்போ வந்த?...”

“இல்ல நான்….”

“நீதான் ஏன் வந்த?...” என அவன் கேட்டதும், அவள் பேசத்தோன்றாதவளாய் நின்றிருந்தாள்…

“முதலில் கிளம்பு… போ… வீட்டுக்குப்போ….” என அவன் அழுத்தி சொல்ல,

அவள் நம்பமுடியாதவளாக அப்படியே நின்றாள்…

“உனக்கு சொன்னாப்புரியாதா?... போ… இங்கிருந்து…” என அவன் வாசலை கைகாட்டி சொல்ல, அவளிடம் அசைவில்லை…

“கிளம்புன்னு சொல்லுறேன்ல… இதுக்கு மேல இங்க இருந்த  நான் மனுஷனா இருக்க மாட்டேன்… அப்புறம் நான் அன்னைக்கு சொன்னது நடந்துடும்… சொல்லிட்டேன்… போ….” என அவன் கத்த,

“நடக்கட்டும்…” என்றாள் அவள் ஒற்றை வார்த்தையில்…

அவன் விழிகளில் ஆச்சரியம் உண்டான போதிலும் அதை மறைத்தவனாய் விழி சிவக்க, “வெளியே போன்னு சொன்னேன்… போ…..” என அவன் அந்த இடமே அதிரும்படி பேச,

அவள் “போகமாட்டேன்…” என்றாள்…

“உனக்கு சொன்னா புரியாதாடி… போடீ… ப்ளீஸ்….” என அவன் கெஞ்ச….

“முடியாது….” என்றாள் அவள்…

“இவ்வளவு சொல்லுறேன்… முட்டாளா நீ… புரிஞ்சிக்க முடியாதா உன்னால…” என அவன் கேள்வி கேட்க,

“புரியப்போய்த்தான் இங்க நிற்குறேன்…” என அவள் அழுத்தி சொல்லவும்,

“உன்னை….” என்றபடி கோபமாக அவளருகில் சென்றவன், அவள் கைப்பிடித்து, இழுத்துச்சென்றான் வேகமாக…

“என்ன பண்ணுறீங்க?... விடுங்க….” என அவள் கெஞ்ச… அவள் கெஞ்சலை பொருட்படுத்தாது அவளை வீட்டின் வெளியே கொண்டு விட்டான்….

அவள் அதிர்ச்சியோடு அவனைப் பார்க்க, அவன் சட்டென்று கதவைப் பூட்டித் தாழ்ப்பாள் போட்டான்…

கதவை அவன் பூட்டியதும், ஓடிச்சென்று கதவைத்தட்டியவள், கதவைத் திறக்க சொல்லி அவனிடம் கெஞ்சினாள்…

அவன் கண்டு கொள்ளாதவாறு கதவின் அருகே நின்றிருந்தான்…

“கதவைத் திறங்க… ஏன் இப்படி பண்ணுறீங்க?... கதவைத் திறங்க… ப்ளீஸ்….”

“…..”

“அன்னைக்கு நீங்கதான சொன்னீங்க…. இன்னைக்கு இப்படி பண்ணினா என்ன அர்த்தம்?... கதவைத்திறங்க… ப்ளீஸ்….”

“….”

“இப்போ நீங்க கதவைத்திறக்கலை நான் இங்கேயேதான் நிற்பேன்… வீட்டுக்குப் போக மாட்டேன்…” என அவள் சொன்னதும்,

“நில்லு…” என அவனும் பதில் சொன்னான் உள்ளிருந்து…

“சரி….” என்றவளும் அதற்கு மேல் பேசவில்லை…

ஒரு மணி நேரத்திற்குப் பிறகு,

“திமிர் பிடிச்சவ…” என தனக்குள் சொல்லிக்கொண்டவன் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான்…

மண்வாசனை அவன் நாசியை துளைத்து செல்ல, வெளியே கேட்ட பேரிரைச்சல், மழை பெய்வதை உறுதிப்படுத்த, அவன் சோபாவில் அமர்ந்தான் கண் மூடி…

கண் மூடியவனுக்குள், திடீரென்று என்னவோ தோன்ற, சட்டென்று ஜன்னலைத் திறந்து கீழே பார்த்தவனுக்கு பேரதிர்ச்சி…

அவள் போகாமல் அங்கேயே தான் நின்று கொண்டிருந்தாள் மழையில் நனைந்தபடி…

வேகமாக, கீழே இறங்கி வந்தவன், கதவைத் திறந்து

“உன்னை வீட்டுக்குப் போன்னு சொல்லி எவ்வளவு நேரம் ஆகுது… இன்னும் இங்க என்ன பண்ணுற?...” எனக் கேட்டதும், அவள் அமைதியாக நின்றாள்…

“கேட்குறேனே… பதில் சொல்லுறாளா பாரு… திமிர் பிடிச்சவ…” என தனக்குள் திட்டியவன், அவளை முறைத்துப்பார்த்தான்…

“இவ்வளவு இடம் இருக்குல்ல, மழை பெய்யுறப்போ நனையாம ஒதுங்கி நிற்கணும்னு தெரியாதா உனக்கு?...” என அவன் கேட்க, அவள் அப்போதும் பதில் சொல்லவில்லை…

“ஒன்னு வீட்டுக்குப்போ… இல்ல இங்க ஓரமா ஒதுங்கி நில்லு… இரண்டும் பண்ணாம இப்படி மழையில நனைஞ்சு தொலையாத…” என சொன்னதும்

“இரண்டும் செய்ய முடியாது… என்ன பண்ணுவீங்க?...” என அவளும் எதிர்கேள்வி கேட்க

“உன்னை…” என்றபடி அவள் கைப்பிடித்து இழுத்து பைக்கில் ஏற்ற முற்பட, அவள் மறுத்தாள்…

“எதுக்குடி இப்படி பண்ணுற?... சொன்னா கேட்கமாட்டியா?...” என அவன் அவள் விழி பார்த்துக் கேட்க, மழை வலுக்கத்தொடங்கியது…

“கேட்கணும்னு முடிவு பண்ணிதான் இங்க வரவே செஞ்சேன்…” என அவள் சொல்லிமுடிக்கவும்

“எதை?...” என அவனும் கேட்க

அவளும் சொன்ன பதிலில் பளாரென்ற சத்தத்தோடு அவன் கைவிரல் அவள் கன்னத்தில் பதிய அவள் கீழே விழுந்தாள் சுருண்டு…

“மென்டலாடீ நீ… ஒழுங்கா வீட்டுக்குப் போயிடு… சொல்லிட்டேன்…” என சொல்லிவிட்டு நகர்ந்தவன், அவளிடம் அசைவே இல்லாததைக் கண்டு அவளருகில் குனிந்து பார்க்க அவள் மயங்கிவிட்டிருந்தாள்…

“ஏய்… எந்திடி… ஏய்… இங்கப்பாரு… ஏய்….” என எழுப்பியவன், அவள் எழாததைக் கண்டு அவள் கன்னத்தில் தட்டி எழுப்ப, அவள் எழவில்லை…

மழைத்தண்ணீர் ஒரு புறம் அவள் முகத்தில் விழுந்து கொண்டிருக்க, மறுபுறம் அவனும் அதே தண்ணீரை கைகளில் பிடித்து அவள் முகத்தினில் தெளித்தான்… அவள் விழி திறவாததைக் கண்டு, “இப்போ என்ன பண்ணுறது?...” என அவன் யோசித்த வேளையில்,

அவள் விழி அசைந்தது மெதுவாக…

“இங்கப்பாரு… பாரு….” என அவன், அவள் கன்னத்தை தட்டி எழுப்ப, அவள் விழி திறந்தாள் முழுவதும்…

“சொன்னாக்கேளு… வீட்டுக்குப்போ… வா… நானே கொண்டு விடுறேன்…” என அவன் சொல்ல, அவள் மறுத்தாள்…

“உன்னைப் போன்னு சொன்னேன்… போ… அவ்வளவுதான்…” என அவன் மிரட்ட, அவள் முடியாது என்றாள்…

“போயிடுடீ… ப்ளீஸ்… புரிஞ்சிக்கோ…” என அவன் கெஞ்ச…

அவளோ, அவன் சட்டையைப் பிடித்தாள்… “நான் வாழணும் உங்ககூட… ப்ளீஸ்…. நீங்க தான அன்னைக்கு கேட்டீங்க… நான் வாழணும்.. நான் வாழணும்…” என சொல்லிக்கொண்டே அழுதவள், அவன் சட்டையைப் பிடித்து உலுக்க, அவன் பேச்சற்றுப்போனான்…

பின்னர் சட்டென்று அவள் முகத்தினை தன் கைகளுக்குள் கொண்டு வந்தான்… அவள் நெற்றியில் முத்தமிட்டவன், அவள் விழி பார்த்தவாறு இதழோடு இதழ் சேர்த்து அணைத்தான்…

நீண்ட நேர முத்தத்திற்குப் பின் அவளை விடுவித்தவன், “நிஜமாவே உனக்கு சம்மதமா?...” எனக் கேட்க

“ஆமாம்….” என அவள் தலை அசைய, அவள் விழியோ நீரை சிந்தியது அவன் கரங்களில்…

“என்ன அழற?...”

“தெரியலை… அழணும்னு தோணுது…” என அவனிடம் சொன்னவள், தன் மனதினுள் அவனிடம் சொல்லமுடியாதவற்றை சொல்லிக்கொண்டாள்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.