(Reading time: 9 - 17 minutes)

ந்த திருமணத்தை இப்பொழுதே முடித்தால்,தனது தங்கை தன்னிடம் இருந்து விடுவாள் என்று அவன் நினைத்தான்.

அதுபோலவே அவனது கல்யாணத்தில் சிரித்த முகமாக பங்குக்கொண்டாள் அஷிதா.

அதனால் அனைத்தும் சரியாகிவிடும் என்று நினைத்தவனுக்கு, ஒரு பெரிய இடி தான் காத்திருந்தது.

மணமக்கள் வீடு வந்ததுமே,தனது லக்கேஜை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டாள் அஷிதா.

அவளது இந்த கோலத்தை எதிர்பார்க்காத வருண் அதிர்ந்தான்.

“குட்டிம்மா..” என்றுக் கூறிக் கொண்டே அவளது கையை பற்றி நிறுத்தினான் வருண்.

அவனை எரித்துவிடுவது போல் பார்த்தாள் அஷிதா.”சொல்லுங்க..”

அவளது இந்த பதிலே அவள் இன்னும் கோபத்தில் இருப்பதை அவனுக்கு  உணர்த்தியது .

“குட்டிம்மா..,இன்னும் நீ இந்த அண்ணாவ மன்னிக்களையா.., இந்த பாவிய மன்னிசுடுடா..,எனக்கு தெரிஞ்ச வரைக்கும் என்னால முடிஞ்ச வழியில என்னோட பாவத்துக்கு பிராய்சித்தம் செஞ்சுட்டேன்.இந்த அண்ணாவ மன்னிசிடுடா..,எனக்கே தெரியாம இந்த தப்ப பண்ணிடேன் டா....”

“நீங்க செஞ்ச பாவத்துக்கு பிராய்சித்தம் செஞ்சிருக்கலாம். ஆனா, ஒரு அண்ணனா உங்க மேல நான் வச்சிருந்த நம்பிக்கைய நீங்க கொன்னுடீங்க. அந்த காயம் இன்னும் என்னோட மனசுல ஆறாம அப்படியே இருக்கு.அது சரியாகலாம்..,சரியாகமா போகலாம்...,தப்ப செஞ்ச குற்றவாளி வேணா அந்த அவன் மேல நம்பிக்கை வெச்ச ஒருத்தவங்களோட நம்பிக்கையை  கொன்ன அது மீண்டும் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்...”

“குட்டிம்மா சொல்லுடா,உன்னோட மனசுல இந்த அண்ணன் இடம் புடிக்க என்ன செய்யனும் டா..”

“இது நான் உங்களுக்கு கொடுக்குற தண்டனை இல்ல ,எனக்கு நானே கொடுத்திருக்கும் தண்டனை, உங்கள இப்படி செய்யாம இருக்க என்னால தடுக்க முடியல,அதனால..”

“அதனால..”

“எனது மனசுல இருக்குற ரணம் ஆறிபோற   வரைக்கும் என் மூஞ்சியிலே முழிக்காதீங்க...” என்றாள் அவள்.

பெண்

ஒரு பூவை விட மென்மையானவள்

ஒரு பஞ்சை விட மிருதுவானவள்

விட்டுகொடுக்கும் பண்பிற்கு இலக்கணமானவள்

தியாகத்தின் ஒளி சுடர் அவள்

வேலை செய்யவும்,கல்வி கற்கவும்

அனுமதித்தால் மட்டும் அவளுக்கு

அது சம உரிமை இல்லை

அவளின் பாதுகாப்பும்,அவளது விருப்பமும்

என்று இந்த சமுகத்தில் ஒரு

முக்கியத்துவத்தை  பெறுகிறதோ

அன்று தான் அவள்

சமஉரிமை பெற்றவள் ஆவாள்

“hi frds, எனக்கு இந்த கான்செப்ட் தோணிச்சி.அதான் எழுதிட்டேன். படிச்சிபாத்துட்டு மறக்காம கமெண்ட் பண்ணுங்க.

 

This is entry #47 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ்நிலை கதை - முடிவுக்கான கதை...

எழுத்தாளர் - அனிதா சங்கர்

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.