"வா சொல்லுறேன்" என அவள் கையை பிடித்து அழைத்து சென்றான் ஜான்.
ஜானின் கையை உதறிவிட்டு அவனுடன் சென்றாள் ஜெஸிகா.
இருவரும் ஓர் அறைக்குள் சென்றனர்.
"என்னை எதுக்கு இங்க கூட்டிட்டு வந்திருக்க ஜான்"
"இந்த ஜோக்கர் பொம்மைகளையெல்லாம் பாத்தியா ஜெஸ்ஸி?"
அந்த பொம்மைகளை பார்த்தபடி ஜானை பார்த்த ஜெஸிகா, "எதுக்கு இத்தனை ஜோக்கர் பொம்மை? அதுவும் எல்லாம் ஒரே மாதிரி இருக்கு"
"உன் நினைப்பு வரக் கூடாதுன்னு நினைப்பேன். அப்படி வந்தா, ஜோக்கர் பொம்மை ஒண்ணு வாங்குவேன். இப்போ ஆயிரத்தி நூறு பொம்மைங்க வந்திருக்கு"
ஜெஸிகா சத்தமாக சிரித்தாள்.
"உன்னை நினைக்காம இருக்க முடியல ஜெஸ்ஸி"
"இது நல்ல விஷயம் இல்லை ஜான். நாம ரெண்டு பெரும் ஒண்ணு சேர முடியாது. சேர்ந்தாலும் வாழ முடியாது" என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றாள் ஜெஸிகா.
அவள் செல்வதை வேதனையோடு பார்த்தபடி நின்றான் ஜான்.
தொடரும்...
{kunena_discuss:983}