(Reading time: 44 - 87 minutes)

இப்போதும் அவனை பார்க்கவில்லையே! வலித்தது அவனுக்கு.  அப்படியிருந்தும் மனைவியின் கண்ணீரைக் கண்டு இளகியது உள்ளம்.  முயன்று அதை கட்டுப்படுத்தியவன், இன்று அவள் மனதிலிருப்பதை தெரிந்து கொண்டுவிடும் நோக்கத்தோடு மேலும் தொடர்ந்தான்.  சற்று தணிந்த குரலில்,

“நீ என்னை காதலிக்குறனு தெரியும்.  உன்னோட சஞ்சுவை, உனக்கு ரொம்பவே பிடிக்கும்னு எனக்கு தெரியும்.  அப்றம் என்ன சரூ? கொஞ்ச நிதானமா யோசிச்சு பாருடா! எல்லா பிரச்சனையும் முடிஞ்ச பிறகும் இப்படியொரு முடிவெடுக்க என்ன அவசியமிருக்கு?” என்று கேட்டவனுக்கு, இப்போதும் நிமிரிந்து தன் முகத்தை பார்க்காது மௌனமாய் நிற்கும் மனைவியின் செயலில், ஏதோ தோன்றவும் அவளைக் கூர்ந்தபடி, “ஒருவேளை, என்னை சந்தேகபடுறீயா? அந்த வீடியோ உண்மைனு தோனுதா? நடந்த எல்லாத்துக்கும் எனக்கும் சம்மந்தமிருக்கும் நினைக்கிறியா?”

எதற்கும் விளக்கமளிக்காது நின்றிருந்தவளோ கணவனுடைய கடைசி கேள்வியிலும், அதை சொன்ன போது இறுகியிருந்த அவன் குரலிலும் பதறினாள்.  பட்டென நிமிர்ந்து அவனை பார்த்து,

“இல்லை சஞ்சு...அப்படியேதுமில்லை! உன்னை நம்பாம யாரை நம்புறது?” என்று படபடத்தவள், “நானொரு முட்டாள் சஞ்சு! என்னை சுத்தி நடக்குறத கூட தெரிஞ்சுக்காம, உன்னோட உண்மையான காதலையும் புரிஞ்சுக்காம இருந்த நானொரு முட்டாள்” என்று கதறினாள்.

மனைவியின் மனதில் அவன் நினைத்தது போன்ற சந்தேகமேதும் இல்லையென சிறிது நிம்மதியுற்றவன், ஆதரவாக அவளை அணைக்க...அதை தடுத்தவளோ,

“ஆனா இது வேணா சஞ்சு” இட வலமாக தலையை ஆட்டியபடி பின்னடைந்தாள்.

அவளின் செயலில் வலியும், தன் மனதையே புரிந்து கொள்ளாமல் பேசுகிறாளே என்று கோபமும் சேர,

“முட்டாள்...முட்டாள்!” என்று கத்தியவனுக்கு, இதெற்கெல்லாம் காரணமான வேதிக்கின் மேல் திரும்பியது கோபம். 

மருத்துவமனையில் சரயூ நடக்க முயன்று விழவிருந்தாளே அன்று அவள் எதையும் இவனிடம் சொல்லமுடியாது மருகுகிறாளென்பது புரிந்தவனுக்கு, வேதனை மண்டியது நெஞ்சில்.  காதல் மனைவியின் இந்நிலைக்குக் காரணமான வேதிக்கை தேடிச் சென்றான்.  நண்பன் காவல்துறை அதிகாரியாக இருப்பதை சாதகமாக்கி கொண்டவன், அவனையும் கிரணையும் துவைத்து பிழிந்துவிட்டான்.  இவனுடைய ஆவேசத்தைக் கண்டு இவனை சாந்தபடுத்துவதற்குள் ரூபின் திண்டாட வேண்டியிருந்தது. 

இன்றும் அதே வேகத்தில் முஷ்டியை சுவற்றில் குத்தினான்.  ஏதோ அந்த வேதிக்கையே அடித்ததாக ஒரு உணர்வு.  மீண்டும் மீண்டும் அவன் கையை சுவற்றில் குத்த,

“சஞ்சு! என்ன பண்ற?” என்று அவசரமாக அவனை நெருங்கியவள் அவன் கையை பிடிக்க முயன்றாள்.  ஜெய்யோ நிறுத்தாது மறுபடியும் கையை ஓங்க...அடுத்த நொடி அப்படியே அந்தரத்தில் நின்றுவிட்டது.  குறுக்கே சரயூ நகர்ந்திருக்கவும்... மேலும் அவன் கைதான் முன்னேறுமா என்ன?

“அய்யோ....கையைப் பாரு! எப்படி சிவந்திருக்கு? ஏன் சஞ்சு இப்படியெல்லா செய்ற?” மிருதுவாக ஜெய்யின் வலது கையை வருடியது அவளின் கைகளிரண்டும்.  அவனது வலியை உணர்ந்தவளாக சட்டென முதலுதவியில் இறங்கினாள். 

அவள் முகத்தில் தெரிந்த வேதனையும், முதலுதவி செய்த கைகளின் வேகமும், அவளுடைய தவிப்பு துடிப்பு காதலென....மனைவியிடம் வெளிபட்ட உணர்வுகளில் கண்ணிமைக்க மறந்துக் கரைந்திருந்தான்.

சுவற்றில் மோதியதில் சிவந்து வீங்கியிருந்த கைக்கு மருந்திட்டு முடித்தவள் நிமிர, அவன் கண்களில் சில நொடிகள் சிக்கி மீண்டவள் சட்டென அங்கிருந்து நகர்ந்துவிட்டாள்.

சற்று நேரத்தில் காஃபியோடு திரும்பியவள், “சஞ்சு! சாப்பிடலையா என்ன? முதல்ல இந்த காஃபியை குடி!” என்று கரிசனையாய் நீட்ட...

அவன் சொல்லாது அவனது சோர்வை உணரக்கூடியவளுக்கா அவனுடைய காதலை உணரமுடியவில்லை?!

அதை வாங்காது அவளையே பார்த்திருக்கவும், “முதல்ல இதை குடிச்சிட்டு கிளம்பு சஞ்சு! கைக்கு என்னாச்சோ? எதுக்கும் ஒரு ஸ்கேன் எடுத்திருவோம்” அவள் கவலையிலேயே அவளிருக்க, ஜெய்யோ,

“ஐ லவ் யூ சரூ!” ஆழமாக அழுத்தமாக சொல்லியிருந்தான்.

“ப்ளீஸ் சஞ்சு, புரிஞ்சுக்க.  திரும்ப திரும்ப அதை பத்தியே பேசாம, காஃபியை குடிச்சிட்டு கிளம்பு” கலங்க துடித்த கண்களை கட்டுபடுத்தியவளாக அவள் சொல்ல...

“முதல்ல நீ உன்னையும் உன்னோட மனசையும் புரிஞ்சுக்க.  நான் காஃபி கேட்டேனா? எதுக்கு கொண்டு வந்த? எனக்காக தானே?!”

அவள் காஃபியை வெறித்தவாறு நின்றிருக்க

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.