“இந்த விசயத்தை நீ அவள்ட்ட சொல்லிட்டியா”
“சொல்லிட்டேன் அவளும் சரின்னு சொல்லிட்டா”
”ஏன் அவள் அப்படி சொல்லனும்”
“ஏன்னா என்ன அர்த்தம் அவளுக்கு அந்த வேலை பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டா விடுங்களேன் சரி அவளை பத்தி விடுங்க நான் ஒரு விசயம் கேள்விப்பட்டேனே உண்மையா”
“என்ன விசயம்”
“உங்களுக்கு கல்யாணம் ஏற்பாடு செய்யப் போறாங்களாமே உண்மையா”
“ஆமாம் வீட்டுக்கு வந்ததும் கேட்டாங்க திடீர்ன்னு கேட்டதால நானும் சரின்னு சொல்லிட்டேன் அவ்ளோதான்”
“அப்படியா இல்லையே நான் வேற எதையோ கேள்விப்பட்டேனே”
“வேற என்னடா இங்க நடக்குது”
“உங்களுக்கு தெரியாதா, உங்கப்பா, அம்மா, பாட்டி 3 பேரும் சேர்ந்து உங்களுக்கு 3 பொண்ணுங்களை தேர்ந்தெடுத்திருக்காங்களாம்” என அர்ஜூன் சொல்லவும் அதிர்ந்தான் ரிஷி
”என்னடா சொல்ற”
“ஆமாம்ணா அந்த 3 பேர்ல ஒருத்தரை செலக்ட் பண்ற உரிமையை தாத்தா எடுத்துக்கிட்டாராம், தாத்தா எந்த பொண்ணை சொல்றாரோ அவளைத்தான் நீங்க கல்யாணம் செஞ்சிக்கனுமாம், வாழ்த்துக்கள் அண்ணா” என மகிழ்ச்சியாகச் சொல்ல ரிஷிக்கு கோபமே வந்தது