(Reading time: 37 - 74 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

”என்னடா இன்னுமா நீ ஜாக்கிங் போகலை”

   

“தாத்தா நான் போய்ட்டு வந்துட்டேன்”

   

“இவ்ளோ சீக்கிரமாவா இல்லையே நீ வர 8 மணியாகுமே”

   

“ஆமாம் இன்னிக்கு சீக்கிரமா ஓடி வந்துட்டேன்”

   

“தப்பு பண்றடா”

   

“சரி அதை விடுங்க நந்தினி வந்தாளா”

   

“எங்க இன்னும் ஒரு பொண்ணுகூட வரலை”

   

“காபி சாப்பிட்டீங்களா”

   

”இல்லையே யாராவது வருவாங்க தருவாங்கன்னு பார்க்கறேன் யாரும் வரலை” என சொல்லவும் அந்த ரூமின் வாசலையே பார்த்தான் ரிஷி. கதவு மூடியிருந்தது. 

   

”இவ்ளோ நேரம் ஆகியும் இன்னும் என்ன செய்றா நந்தினி இன்னுமா தூங்கறா” என தனக்குள் நினைத்துக்கொண்டான்.

   

நந்தினிக்கு விழிப்பு 6 மணிக்கு வர எழ அதற்குள் வந்தனா எழுந்து குளிக்க செல்ல நந்தினியை பார்த்த மாத்திரத்தில் நின்றவள் அவளிடம்

   

”நீங்க வேணும்னா போய் குளிங்க” என்றாள் வந்தனா அதைக்கேட்டு சிரித்தவள்

   

”இல்லை வேணாம் நீங்க போங்க”

   

“பரவாயில்லை”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.