”வாம்மா எப்படியிருக்க உன் ரூம் வசதியில ஒண்ணும் பிரச்சனையில்லையே”
“அதெல்லாம் இல்லை தாத்தா” என மிருதுளா சொல்லிவிட்டு அமர்ந்துக்கொண்டாள்.
அவள் அமர்ந்ததும் தாத்தாவும் ரிஷியும் ஒருவரை ஒருவர் பார்த்தனர். அதில் மிருதுளாவே ரிஷியிடம்
”ரிஷி”
“ம்”
”ஏதாவது பேசுங்களேன்”
“தாராளமா நீ பேசு நானும் பேசறேன்”
“சரி உங்க ஹாபிஸ் என்ன”
“வெட்டியா இப்படி உட்கார்ந்திருக்கறது”
“இதுவா ஹாபி”
“இந்த மாதிரி ப்ரீயா இங்க யார் இருக்கா சொல்லு” என்றான்.
மேலும் அவனிடம் எதை எதையோ பேசிக்கொண்டிருந்தாள் மிருதுளா அவள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் வேண்டா வெறுப்பாக முகத்தை வைத்துக்கொண்டு கோக்கு மாக்கான பதிலையே சொன்னான் ரிஷி. அவர்கள் இருவரும் பேசுவதையே பேப்பரை படிப்பதைப் போல நடித்துக்கொண்டே கவனித்துக்கொண்டிருந்தார் தாத்தா.
வந்தனா சென்ற நேரம் பாட்டி அருந்ததி கிச்சனில் இருக்கவே அவர் வந்தனாவை பார்த்த