(Reading time: 37 - 74 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

விட்டுட்டு உன் தகுதியை நினைச்சி அதுக்கு ஏத்த மாதிரி வாழப்பாரு” என சொல்லிவிட்டு மிருதுளா அறையை விட்டு வெளியே சென்றுவிட்டாள்.

   

தனியாக விடப்பட்ட நந்தினிக்கு தலைசுற்றியது. இருந்தாலும் ரிஷியின் மீதான காதலின் அதீத நம்பிக்கை அவளுக்கு துணையாக வரவே எதைப்பற்றியும் நினைக்காமல் தன்னை அலங்காரம் செய்துக்கொண்டு அறையை விட்டு வெளியே வந்தாள். அவள் சென்ற 10வது நிமிடத்திற்கு பின் சோனாவும் ரெடியாகி அறையை விட்டு வெளியே வந்தாள்.

   

ஹாலில் அமர்ந்திருந்த தாத்தாவும் ரிஷியும் வால்க்ளாக்கை பார்த்துக்கொண்டும் அந்த அறையின் கதவை பார்த்துக்கொண்டும் இருந்தார்கள். சரியாக 7 மணிக்கு முதலில் இறங்கி வந்தாள் வந்தனா அவளைப்பார்த்ததும் அலுத்துக்கொண்டான் ரிஷி.

   

”என்னடா அலுத்துக்கற”

   

“என் ஆளு வரும்னு பார்த்தா இது வருது”

   

“இதையும் உன் ஆளா நினைச்சி சைட் அடி தப்பில்லையே”

   

“ம்க்கும் இந்த விசயம் அவளுக்கு தெரிஞ்சா அவளை கூட விடுங்க அர்ஜூனுக்கு தெரிஞ்சா அவளை கூட்டிட்டே போயிடுவான்”

   

“உன் மேல இத்தனை வருஷமா நம்பிக்கை வைச்சிருந்த அர்ஜூன் இப்ப நந்தினியால உன்னை நம்ப மாட்டேங்கறான் நினைச்சாலே எனக்கு சிரிப்பா வருது”

   

“என்ன செய்றது தாத்தா ஒரு பொண்ணு வந்தா நண்பர்களுக்குள்ள லவ் அது இதுன்னு சண்டை வரும்னு சொல்வாங்க ஆனா இங்க தங்கச்சி தங்கச்சின்னு சொல்லி அவளை காப்பாத்தறேன்னு என்னை நம்பாம என் உயிரை எடுக்கறான்”

   

”சரி விடு வந்தனா வரா அவளைப்பாரு” என சொல்லிவிட்டு பார்க்க வந்தனா தாத்தா அருகே வந்து இருவரையும் பார்த்து சிநேகமாக சிரித்துவிட்டு

   

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.