“இல்லை இங்க நாம போட்டி போட வந்திருக்கோம் நீங்க இப்படி விட்டுக்கொடுக்கறதால எந்த பயனும் இல்லை நீங்க குளிச்சிட்டு வாங்க அப்புறமாவே நான் குளிக்கறேன் எனக்கு எந்த அவசரமும் இல்லை.”
“ஏன் இப்படி பேசற அட்ஜஸ்ட் பண்றது ஒண்ணும் தப்பில்லையே”
“ஆனா நீங்கதானே முதல்ல குளிக்க போனீங்க எனக்காக நீங்க அட்ஜஸ்ட் பண்ண வேணாம் அப்புறம் எல்லா விசயத்திலயும் அட்ஜஸ்ட் பண்ணிட்டே இருக்க முடியாது அதனால நீங்க கிளைம்புங்க” என சொல்ல அவளும் முகத்தை சுழித்துக்கொண்டு குளிக்க சென்றாள் வந்தனா.
வந்தனா சென்றதும் நந்தினி தன்னுடைய லக்கேஜ்களை பார்த்தாள். இன்னும் அலமாரியில் அடுக்காமல் அப்படியே இருக்க வந்தனா வருவதற்குள் அடுக்க நினைத்தவள் அவசரமாக பெட்டியில் இருந்த பொருட்களை அலமாரியிலும் டேபிள் மீதும் அடுக்க ஆரம்பித்தாள். அவளது கொஞ்சம் என்பதால் சீக்கிரமாகவே முடித்துவிட்டாள்.
வந்தனா வந்ததும் நந்தினி குளிக்க சென்றாள். வந்தனாவோ வேண்டுமென்றே மீதியிருந்த 2 பெண்களையும் எழுப்பிவிட்டு வெளியே சென்றுவிட்டாள். எழுந்துவிட்ட மற்ற பெண்களும் குளிப்பதற்காக பாத்ரூம் கதவை தட்ட
”நான் வந்துடறேன் வெயிட் பண்ணுங்க” என நந்தினி கத்தியும் பலனில்லை. விடாமல் கதவை தட்ட தட்ட குளித்தவரை போதும் என்ற எண்ணத்தில் அவசரமாக வெளியே வந்தாள் நந்தினி. அவளை கண்டு கோபத்துடன்
”எவ்ளோ நேரம்தான் குளிப்ப” என கத்தினாள் மிருதுளா
”சாரி நானே இப்ப 5 நிமிஷத்துக்கு முன்னாடிதான் குளிக்கவே உள்ள போனேன்” என்றாள் நந்தினி. அதைக்கேட்டு சலித்துக்கொண்டே உள்ளே சென்றவளை அடுத்து சோனா நந்தினியிடம் வந்தாள்