”பொறு பொறு ஏன் இப்படி கோபத்தில பொங்கற, ஏதோ சின்ன மிஸ் அன்டர்ஸ்டான்டிங், செல்லப்பா என்னத்த சொல்லி வைச்சானோ அதை நம்பி ஆனந்த் நடந்துக்கிட்டான், மத்தப்படி அவன் ரொம்ப நல்லவன்மா”
”ஆமா இப்படித்தான் முதல்ல அவர் நல்லவரு, வல்லவரு, திறமைசாலி, புத்திசாலி அவரை கல்யாணம் செய்துக்கிட்டா என் வீட்டுக்கு மருமகளா வரலாம், ஆனந்தியும் நீயும் தோழிகளா இருக்கலாம் ஆஹா ஓஹோன்னு ஆயிரம் சொன்னீங்க, உங்க பேச்சை நம்பி இவரை பார்க்காமலே மானசீகமா இவரை விரும்ப ஆரம்பிச்சேன் ஆனா, இவரை பார்த்த பின்னாடி இவர் என்கிட்ட நடந்துக்கிட்டதை பார்த்து நான் வாழ்க்கையே வெறுத்துட்டேன், இவரை விரும்பின நானே இவரை வெறுக்க ஆரம்பிச்சிட்டேன் இவர் எனக்கு வேணாம் அண்ணா” என்றாள் அதைக்கேட்டு வெங்கடேசன் நொந்துக் கொள்ள ஆனந்த் மட்டும் பதறினான்.
ரோஜாவின் ஒவ்வொரு பேச்சும் அவனது மனதில் இடியென விழுந்தது. இறுதியில் அவள் தன்னை விரும்பினாள் என்றதும் அவனின் முகம் மலர்ந்தது ஆனால் அடுத்த நொடியே அவள் தன்னை வேண்டாம் என வெறுக்கும் போது ரூபாவை இழந்த போது ஏற்பட்ட துக்கத்தை விட அதீத துக்கத்தை அடைந்தான் ஆனந்த்.
Like & Follow our Facebook Page to be notified of the new episodes immediately.
தொடரும்...