(Reading time: 20 - 40 minutes)
Oru veedu iru vaasal
Oru veedu iru vaasal

தொடர்கதை - ஒரு வீடு இரு வாசல் - 05 - சசிரேகா

  

றுநாள் வெங்கடேசன் ஆபீசுக்கு கிளம்ப ரெடியாக அவனுக்கு முந்திக் கொண்டு ரெடியாகி வந்திறங்கினான் ஆனந்த்

   

”என்னடா இவ்ளோ அவசரமா ரெடியாகி எங்க கிளம்பிட்ட“

   

”ஆபீசுக்குதான் மாமா நீங்க வரலையா“

   

”பொறு ஆபீஸ் போக இன்னும் நேரம் இருக்கு, இப்பவே போனா ஆபீஸ் காலியாதான் இருக்கும்“

   

”அட ஒரு முதலாளி போல பேசுங்க மாமா“

   

”முதலாளியாவே இருந்தாலும் ரூல்ஸ் கடைபிடிக்கனும், நேரத்தை பார்க்கனும்லயா நம்ம கிட்ட வேலை செய்றவங்களும் மனுஷங்கதானே, அவங்க என்ன நமக்கு அடிமையா, நம்ம விருப்பத்துக்கு அவங்களை ஆட்டி வைக்கறதுக்கு“

   

”நான் உங்ககிட்ட ஒரு முக்கியமான விசயம் பேசனும் மாமா அதுக்குதான் கூப்பிடறேன்“

   

”முக்கியமான விசயமா சரி இங்கேயே பேசு கேட்கறேன்“

   

”அய்யோ மாமா அக்கா முன்னாடியா”

   

”ஏன் அவள் இருந்தா என்ன தப்பு“

   

”அக்காவுக்கே ஏகப்பட்ட கவலை, இதுல ஆபீஸ் கவலையை வேற அவள் சுமக்கனுமா”

   

”ஆபீஸ்ல என்ன பிரச்சனை”

   

”நீங்க வாங்க மாமா நான் சொல்றேன்” என சொல்ல வெங்கியும் குழப்பத்துடன் டிபன் சாப்பிட்டு முடிக்க ஆனந்த் அரக்க பரக்க சாப்பிட்டு முடிக்க

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.