(Reading time: 20 - 40 minutes)
Oru veedu iru vaasal
Oru veedu iru vaasal

   

”பணம் வேணும்ல உனக்கு”

   

“பணமா“

   

“ஆமாம் உன்னோட ஓட்டு வீட்டை பங்களா போல மாத்தனும்னா உனக்கு பணம் தேவை, அதுக்காகத்தானே என் மாமாவை உன் கைக்குள்ள வைச்சிருக்க, அவரை ஏமாத்தி அவர்கிட்ட பணம் பறிக்கதானே இப்படி அவசர அவசரமா ஓடற, அன்னிக்கு க்ளப்ல என்னமா சீட்டாட்டம் விளையாடற அதுவும் பந்தயம் கட்டி குடும்ப பொண்ணா நீ சே”

   

”சார் போதும் வார்த்தை விடாதீங்க, நான் எது செய்தாலும் அதுல ஒரு காரணம் இருக்கும், பணத்துக்காகதான் செய்றேன் ஆனாலும் அதுல நேர்மையும் இருக்கு”

   

”என்னடி உன் நேர்மை, க்ளப்ல எல்லா ஆம்பளைங்ககிட்டயும் சிரிச்சி சிரிச்சி பேசற, நீயெல்லாம் ஒரு பொண்ணா“

   

”ஹலோ போதும் இதோட நிப்பாட்டிக்கலாம், எனக்கு வெங்கடேசன் சார்கிட்ட ஒரு முக்கியமான வேலையிருக்கு, நான் போகனும் வழியை விடுங்க“

   

”விடமுடியாது மாமாகிட்ட போய் நீ என்ன பேசுவன்னு எனக்கு நல்லாவே தெரியும், என்னைப் பத்தி தானே மாட்டிவிடப்போற, நான் உன்னை நிக்க வைச்சது பத்தி சொல்வ, உன்கிட்ட நான் பேசினதை சொல்வ, நான் இருந்தா உன்னால என் மாமாகூட பழக முடியாதுல அதனால என்னை இங்கிருந்து விரட்ட என்னென்ன செய்ய முடியுமோ செய்யப் போற அதுக்குதானே இந்த வேகம்”

   

என சொல்ல அவளோ அதிர்ந்தாள் அவளால் எதுவும் பேச இயலவில்லை. தடுமாறினாள். அவளின் தடுமாற்றத்தைக் கண்டு அவன் நக்கலாக சிரிக்க அந்நேரம் வெங்கடேசன் அங்கு வந்தான்

   

”ஆனந்த் இங்க என்ன செய்ற ரோஜா ஏன் வெளிய நிக்கற உள்ள வா” என அழைக்க 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.