நடக்குதோ தெரியாது ஆனா, அவள் போய் வந்தபின்னாடி வெங்கடேசன் சார்கிட்ட நிறைய மாற்றங்கள் தெரியும், அவளால பல பேரோட வேலை போயிருக்கு, அவளை பகைச்சிக்கிட்டவங்களையெல்லாம் சார்கிட்ட எக்குத்தப்பா சொல்லி வேலையை விட்டு விரட்டியிருக்கா, அவளால நம்ம ஆபீசுக்கு பல விதமான நஷ்டம் வந்திருக்கு, ஏகப்பட்ட பிரச்சனைகள் வந்திருக்கு, பாவம் சார் உங்க மாமா நீங்கதான் அவரை காப்பாத்தனும்” என்று அன்று அவர் சொன்னது இன்று அவனுக்கு நினைவுக்கு வந்ததும் ரோஜாவை தடுத்தான்
”என்ன சார் செய்றீங்க, முதலாளி வேலையை விட்டுட்டு வாட்ச்மேன் வேலைக்கு வந்துட்டீங்க போல”
”கிண்டலா ஆமா என்ன இவ்ளோ சீக்கிரமா ஆபீசுக்கு வந்திருக்க“
”வெங்கடேசன் சாரை பார்க்கனும்னு வந்தேன்“
”எதுக்கு”
”அவர்கிட்ட பேசனும்“
“எதைப்பத்தி“
”அதை அவர்கிட்டமட்டும்தான் சொல்வேன்“
”ஏன் என்கிட்ட சொன்னா என்ன”
”உங்ககிட்ட சொல்லி என்ன ஆகப்போகுது சார்“
”என் மாமாவை மயக்கதானே போற”
”ஏன் சார் நான் என்ன மோகினியா அவரை மயக்கறதுக்கு, அவரை மயக்கி நான் என்ன சார் செய்யப் போறேன்”