க்ளப்புக்கு வர்றா, பந்தயம் கட்டி சீட்டாட்டம் ஆடறா, அங்கிருக்கற ஆம்பளைங்க கிட்ட கதை பேசறா சே சே பணத்துக்காக எவ்ளோ தூரம் இறங்கிப் போறா, இவள் எல்லாம் ஒரு நல்ல பொண்ணா” என சொல்ல அதைக்கேட்டு அவளின் கண்கள் கலங்கி கண்ணீர் கன்னத்தை தடவிக் கொண்டு வழிந்து ஓடி கண்ணீர் துளிகள் அவளின் கையில் பட்டது அதைக்கவனித்த ஆனந்தோ
”பாருங்க மாமா என்னம்மா நடிக்கறா, இவளை நம்பாதீங்க மாமா வேஷக்காரி” என சொல்லிக் கொண்டே போக வெங்கடேசன் ஆனந்தை நிப்பாட்டினான்
”ஆனந்த் போதும்“
”இல்லை மாமா அவள் கேரக்டர் சரியில்லை, ஆம்பளைங்களை பார்த்தாலே சிரிக்கறா, பணத்துக்காக உங்களைகூட மயக்கி ஐம்பதாயிரம் சம்பளம் வாங்கறாளே, உங்களை நான் தப்பு சொல்லமாட்டேன் மாமா, நீங்க நல்லவரு, இவள்தான் உங்ககிட்ட நல்லவிதமா பேசி நடிச்சி உங்களை மயக்கி”
”போதும்னு சொன்னேன்” என கோபத்துடன் அதட்ட அதில் அதிர்ந்து வாயடைத்து போனான் ஆனந்த்.
வெங்கடேசன் ரோஜாவை பார்த்து
”ரோஜா” என அன்பாக அழைக்க அவளோ கண்ணீருடன்
”அண்ணா” என்றாள் அவ்வளவுதான் ஆனந்தின் தலையில் இடி ஒன்று இறங்கியது
”என்னது அண்ணாவா இதுவும் நடிப்பா நான் இருக்கறதால மாத்தி பேசறியா சே நீயெல்லாம் ஒரு பொண்ணா” என அவளை திட்டினான் ஆனந்த். அதைக்கேட்ட வெங்கடேசன்
”ஆனந்த் எதுக்கு அவளை திட்டற பேசாம இரு“