”எதுக்கு இப்படி அரக்க பரக்க சாப்பிடற, நான் என்ன ஓடியா போகப்போறேன், நிதானமா சாப்பிட்டு வா, எவ்வளவு நேரம்னாலும் பேசிக்கலாம்“
”அதெல்லாம் அப்புறம் வாங்க கிளம்பலாம்” என வெங்கியின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு ஆனந்த் செல்ல ஆனந்தி வியப்பில் சிலையாகிப் போனாள்.
ஆனந்த் தனது காரில் வெங்கியை ஏற்றிக் கொண்டு பறந்தான்
”ஆனந்த் மெதுவா வண்டியை ஓட்டு எதுக்கு இப்படி வேகமா ஓட்டற, எனக்கு பயமாயிருக்கு”
”இதெல்லாம் ஒரு வேகமா மாமா”
”நீ பரவாயில்லைடா, என்னை நம்பி ஆனந்தியிருக்காளே கொஞ்சம் மெதுவா ஓட்டு” என சொல்ல அவனும் மெதுவாக ஓட்டியபடியே ரோஜாவின் வீடு இருக்கும் தெரு பக்கம் செல்ல திடுக்கிட்டான் வெங்கி
”எதுக்கு இந்த வழியா போற, இது சுத்துவழி ஆனந்த்”
”நாம வழக்கமா போற வழியில ரோடு ப்ளாக் பண்ணிட்டாங்க மாமா அதான்“
”ஓ அப்படியா சரி சரி” என சொல்ல அவனும் வண்டியை மெதுவாக ஓட்டிக் கொண்டு சென்றான்
”என்னடா இது அதிசயமா இருக்கு மெதுவா போக சொன்னா அங்க போகலை இங்க என்ன ஆமை வேகத்தில வண்டியை உருட்டற”
”ப்ச் என்னை நம்பியும் ஆனந்தி அக்கா இருக்காங்க மறந்துடாதீங்க”