அவளோட அப்பாவாலதான் நான் படிச்சி முன்னுக்கு வந்தேன், அவருக்கு நான் கடன் பட்டிருக்கேன், சாதாரண க்ளர்க் வேலைக்கு தர்ற சம்பளம் போக அவள் எனக்காக செய்ற வேலைக்கும் அவள் அப்பாவுக்கு நான் பட்ட நன்றி கடனுக்காக மட்டுமே ஐம்பதாயிரம் சம்பளம் தரேன், அதுவும் நான் இந்த ஆபீஸ்ல ஒரு பார்ட்னர்ங்கற முறையில எனக்குண்டான பணத்தில இருந்துதான் நான் அவளுக்கு பணம் தரேனே ஒழிய உன் பங்குல நான் கைவைக்கலை போதுமா” என கத்த ஆனந்த் அரண்டுப் போய்விட்டான்
அவனுக்குள் அப்படியொரு குற்ற உணர்ச்சி இம்முறை அவனது கண்கள் கலங்கிவிட்டது.
சில நிமிடங்கள் அமைதியாக கரைந்தது பின் வெங்கடேசனே ரோஜாவை பார்த்து
”ரோஜா நீ ஓகே தானே” என கேட்க அவளும் தன்னை சரியாக்கிக் கொண்டு
”ஓகேதான் அண்ணா”
”சாரிம்மா ஆனந்த் இப்படி பேசுவான்னு“
”பரவாயில்லை அண்ணா, அவரை பத்தி பேச வேணாம்”
”சரி என்னம்மா விசயம், ஏதாவது தகவல் தெரிஞ்சதா“
”நிறைய விசயம் சேகரிச்சிருக்கேன் அண்ணா, அதை சொல்லத்தான் வந்தேன்“
”சொல்லும்மா கேட்கறேன்” என சொல்ல அவளோ ஆனந்தை பார்க்க வெங்கடேசனோ
”அவன் இருக்கறதை மறந்துடு அவன்லாம் ஒரு ஆளுன்னு, அவனை விட்டுத்தள்ளு நீ சொல்ல வந்ததை சொல்லும்மா” என்றதும் ரோஜா உடனே தன்னை உறுதியாக்கிக் கொண்டாள்
”அண்ணா புது முதலாளி வந்த பின்னாடி என்ன நடந்ததுன்னா” என அவள் ஆனந்த்