(Reading time: 20 - 40 minutes)
Oru veedu iru vaasal
Oru veedu iru vaasal

அவளோ தலையை தாழ்த்திக் கொள்ள 

   

”ரோஜா என்னாச்சி”

   

என கேட்க அவள் அமைதியாக இல்லை என சொல்லிவிட்டு வெங்கடேசனுடன் அவனது கேபினுக்குச் சென்றாள் ஆனந்த் விடவில்லை குடுகுடுவென அவனும் வெங்கடேசனது அறைக்குச் சென்றான். அவனது வரவை அவர்கள் எதிர்பார்க்கவில்லை

   

”நான் வருவேன்னு நீங்க எதிர்பார்க்கலையா, நான் ஒண்ணும் பண்ணலை சும்மா ஓரமா இருக்கேன் நீங்க பேசுங்க” என இளப்பமாக பேச அவளால் பேச இயலவில்லை அமைதியாகிப் போனாள் 

   

அவளின் கண்கள் கலங்கிவிட்டது, இதோ இப்பவே என கண்ணீர் வழிந்து ஓட காத்துக்கொண்டிருக்க, அவளின் வருத்தமான முகத்தை பார்த்த வெங்கடேசன் ஆனந்தை பார்த்தான், அவனோ அவளை இளப்பமாக பார்ப்பதைக் கண்டு ஏதோ புரிந்துக் கொண்டு நீண்ட பெருமூச்சு விட்டவன் ரோஜாவிடம்

   

”ரோஜா சேர்ல உட்காரு” என சொல்ல அவளோ இல்லை என்பது போல் தலையாட்ட ஆனந்தை பார்த்தான், அவன் உடனே இருக்கையில் அமர்ந்தான்.

   

”ஆனந்த் நீ என்னவோ என்கிட்ட சொல்லனும்னு இருந்தியே என்ன விசயம் சொல்லு“

   

”எல்லாம் இவளை பத்திதான் மாமா, இவளை பத்தி நீங்க நினைச்சதெல்லாம் தப்பு, இவளை போல ஒரு மோசமானவளை நான் எங்கயும் பார்க்கலை, இவள் கேரக்டரே தப்பு, இவளை நம்ம ஆபீஸ்ல வேலை செய்ய விட்டா நல்லதில்லை, இவளை விரட்டனும் மாமா” என கடகடவென ஒப்புவிக்க வெங்கடேசன் அதை பெரிதாக எண்ணாமல்

   

”அவ்ளோதானே முடிஞ்சதா” என இயல்பாக கேட்க அவனோ ஆச்சர்யத்துடன்

   

”இது போதாதா நானே அவளை கண்காணிச்சேன், செல்லப்பா சொன்னதை வைச்சி மட்டும் இல்லை, நானே அவளை கவனிச்சேன் வேலை செய்யாம எல்லார்கூடவும் கதை பேசறா, 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.