(Reading time: 20 - 39 minutes)

 

ஸ்ரீ மனதில் வலி இருந்தது. மறைத்து கொண்டாள்..

" வாவ் அண்ணா அண்ணி வர போறாங்க... சூப்பர்... இதுக்கு எதுக்கு அண்ணா ப்ளீஸ் எல்லாம்.... அப்பா கிட்ட நான் பேசி சம்மதம் வாங்கி தரேன்.. டோன்ட் வொர்ரி..."

" ரொம்ப நன்றி ஸ்ரீ.. இப்போவே அஞ்சலி கிட்ட பேசி சம்மதம் சொல்றேன்..." என்று சொல்லி சைக்கிள் எடுத்து சென்று விட்டான்...

ஸ்ரீ 5 நிமிஷம் பித்து பிடித்தவள் போல் நின்றாள்... மனதில் பல குழப்பங்கள்... "அண்ணன் என்ன இப்படி சொல்லிட்டு போறாரு... தங்கச்சிய பார்த்து அப்பறம் கல்யாணம் பண்ணி கொள் என்று  சொல்லிட்டு போறாரு.. குடும்பம் விட காதல் முக்கியமா போச்சு...

ஐயோ ஸ்ரீ... சீ என்ன இப்படி நெனச்சிட்டு இருக்க...காலையில் அவ்ளோ யோசிச்ச... இப்போ என்ன.... அவரு யாரு உன்னோட அண்ணன்... அவரு ப்ரொப்லெம் சொன்னாரு.. அது நியாம இருக்கு... நீ ஒகே சொல்லிட்ட... இப்போதிக்கு நீ வேல பார்க்கணும்….இல்ல…

படிக்கணும்.. அத விட்டுட்டு... நல்லதே நினை... நல்லதே நடக்கும்..."

ஆனால் விதி அஞ்சலியின் ரூபத்தில் விளையாட காத்து இருந்தது என்று யாருக்கும் தெரியவில்லை.. அப்படி தெரிந்து இருந்தால் மணி அஞ்சலி கல்யாணம் நடந்து இருக்காது..

மீண்டும் உற்சாகம் ஆனாள் ஸ்ரீ... சைக்கிள் விட்டு இறங்கி lake அருகே சென்று அதன் அழகை ரசித்து கொண்டு இருந்தாள்... பின்னால் யாரோ வந்து தன் காலை கட்டி கொண்டார்கள் என்று தெரிந்து திரும்பி பார்த்தாள்.. ஒரு குழந்தை அவளை கட்டி கொண்டது... குழந்தைஐ தூக்கி வைத்து முத்தமிட்டாள்...( ஐயோ இத நம்ம ஹீரோ பார்த்த பொறாம பாடுவாரு...)... சொல்லி முடிக்கல ஹீரோ பார்த்துவிட்டு சைக்கிளை நிறுத்தி விட்டான் அஸ்வின்.. அவன் நின்றதை பார்த்து மீரா நின்றாள்..

அஸ்வின் பார்த்த திசை நோக்கி அவளும் பார்த்தாள்...

" அந்த பொண்ணும் குழந்தையும் அழகா இருக்காங்கள.... ஷி லூக் லைக் எ கேரளா கேர்ள்... சந்தனம் வச்சு செம அண்ணா"

" ஹ்ம்ம் ஹ்ம்ம்ம்ம் ஹ்ம்ம்" அஸ்வின் மயங்கி விழாத குறை தான்...

" என்ன அண்ணா சைட் அடிச்சிட்டு இருக்க???"

" அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆகி பாப்பா இருக்கு.. அவுங்க தூக்கி வச்சு இருக்காங்க பாரு.." என்று அவள் கையில் வைத்த குழந்தைஐ சுட்டி காட்டினான்( அட லூசு அஸ்வின்... அது அவ பாப்பா இல்ல... ஹையோ ஹையோ)

"ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்" என்று பெருமூச்சோடு மறுபடியும் சைக்கிள் ஓட்ட ஆரம்பித்தார்கள்...

ஸ்ரீ குழந்தையை அதன் பெற்றோரிடம் கொடுத்து விட்டு மீண்டும் சைக்கிள் நோக்கி நடந்தாள்.. சைக்கிள் எடுத்து ஓட்ட ஆரம்பித்தாள்...

(நம்ம ஹீரோ முன்னாடி போய்ட்டாரு.... )

அஸ்வின் போன் அடிக்க எடுத்து பேச சைக்கிளை நிறுத்திய பொழுது எதிர் பாரத விதமாக ஸ்ரீ மோதி கீழே விழுந்து விட்டாள்... அஸ்வின் திரும்பி திட்ட எத்தனிக்கும் பொழுது மீரா ஸ்ரீஐ கரம் பிடித்து தூக்கி விட்டாள்... ஸ்ரீ கை ரோட்டில் உரசியதால் ரத்தம் வர வீங்க ஆரம்பித்தது... அந்த வலி கூட பார்க்காமல் அஸ்வினிடம் பேசினாள்....

" ரொம்ப சாரி சார்... தெரியாம இடிச்சிட்டேன்... வெரி சாரி... நீங்க நிறுத்துனத பாக்கமா வந்து மோதிட்டேன்.. உங்களுக்கு அடி ஒன்னும் படலையே... சாரி அகைன் சார்...."

வள் சாரி போட்டு கொண்டே இருந்தாள்.. அஸ்வின் மீது தான் தவறு.. சைக்கிளை ஓரமாக நிறுத்தாமல் நடுவில் நிறுத்தி  போன் பேசியது.. ஆனால் ஸ்ரீ மன்னிப்பு கேட்டது ஆச்சிரியமாக இருந்தது... அவளை ஒரு முறை உற்று பார்த்தான்.. கலையான வட்ட முகம்.. ரொம்ப குண்டும் இல்ல ஒல்லி குச்சியும் இல்ல.. விழுந்ததில் நீண்ட பின்னல் முன் விழுந்து இருந்தது... இந்த காலத்துல இப்படிலாம் இருக்காங்கள என்று யோசித்து கொண்டு இருந்தான்... அவளது பேச்சு கேட்டு தான் இந்த உலகத்திருக்கு வந்தான்... அவள் சாரி மட்டும் கேட்டு கொண்டு இருந்தாள்... மீரா அண்ணனை முறைத்து கொண்டு...

" ஐயோ….. தப்பு உங்க மேல இல்லங்க... என்னோட அண்ணா தான் ஓரமா நிறுத்தாம……போன் பேச நீங்க விழுந்து வச்சிடிங்க..."

" இல்ல நான் தான் தெரியாம... ரொம்ப சாரி.. அவுங்களுக்கு எதுவும் அடி படலையே.. "

" ஹே மீரா தண்ணி தா அவுங்க கைல அடி பட்டு ரத்தம் வருது" என்று அஸ்வின் கூறி கொண்டு மீரா சைக்கிளில் இருந்த தண்ணீர் பாட்டில் எடுத்து அவளது கையை பிடித்து தண்ணீர் ஊற்ற கை பிடித்தான்...

ஸ்ரீ கையை வெடுகென்று பிடுங்கி கொண்டாள்.. அவளுக்கு மனம் அடித்து கொண்டது.. உடலில் என்றும் உணராத அதிர்வை உணர்ந்தாள்.. அஸ்வின் அவள் கையை பிடுங்கி கொண்டது கோபம் ஒரு புறம் இருந்தாலும்.. அவள் கை தொட்ட ஸ்பரிசம் இன்னும் அவனது கையில் இருந்தது..

" எதுக்கு கையை வெடுக்குனு எடுத்திங்க... ரத்தம் வடியுது அதான் பிடிச்சு தண்ணீர் ஊத்தலாம் என்று நெனச்சேன் ... "

" இல்ல பரவால... உங்களுக்கு எதுவும் அடி படலையே" அஸ்வின் யோசித்தான்.. மீண்டும் மீண்டும் என்ன இதே கேட்குற இவ... இவ உண்மைல இப்படியா இல்ல நடிச்சிட்டு இருக்காள.. அவளின் கண் பார்த்தான்.. பொய் இல்லை... விட்ட அழுதுருவ போல.. ரொம்ப soft இவ.. இவ கன்னம்.. இவ உதடு.. எல்லாமே soft .... ஏய் அஸ்வின் இவளுக்கு பாப்பா இருக்கு ஞாபகம் இருக்குல... இவ்வாறு இவன் யோசித்து கொண்டு இருந்த பொழுது... மீரா அவளது கையை பிடித்து தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து துடைத்து விட்டாள்...

" இப்போ உங்களுக்கு ஒகே வா.. வாங்க பக்கதுல மருத்துவமனை போய் பார்த்திட்டு வரலாம்.."

" சின்ன அடி தான்... இட்ஸ் ஒகே.. ஐ ஆம் பைன்.. "

மீரா அஸ்வினை முறைத்தாள்..

" ஹே அண்ணா உன்னால தான் இவுங்க விழுந்தாங்க.. சாரி கூட கேட்காம என்ன யோசிச்சிட்டு இருக்க.. "

" ஹ்ம்ம் ஐ ஆம் சாரி.. " என்று அஸ்வின் சொன்னான்..

" இட்ஸ் ஒகே.." என்று அவன் முகம் பார்க்காமல் சொன்னாள்... ( இப்படியே சாரி சொன்ன எப்படிங்க இருக்கும்... )

மீராவிடம் கண் ஜாடை செய்து அவளை பற்றி விசாரிக்க சொன்னான்..

" நான் மீரா.. இது என்னோட அண்ணா அஸ்வின்... நீங்க??" ஸ்ரீ யோசித்தால் இது என்ன இப்படி நேம் எல்லாம் கேட்குறாங்க... ஸ்ரீ பதில் சொல்ல யோசித்தாள்.. மீரா மீண்டும் அதே கேள்வி கேட்டு

வைக்க வேறு வழி இல்லாமல் பதில் சொன்னாள்..

" நான் ஸ்ரீ"

" தனியாவா சைக்கிள் ஒட்டிட்டு வந்திங்க... எங்க உங்களோட பேபி???"" பேபி ஆ என்று ஸ்ரீ யோசித்தாள்..

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.