(Reading time: 10 - 19 minutes)

 

வானில் அழகாய் ஒளிவீசி கொண்டிருந்த வெண்ணிலவினை கண்டார் மஹாதேவன்.

மனம் முழுதிலும் தன் மகன் குறித்த எண்ணங்கள்....

அன்றொரு நாள் வந்திராவிட்டால்???

என் மகன் இன்று என்னை விட்டு விலகி இருக்க மாட்டானே!!!

செய்திராத தவறுக்கு 12 வருட நரகமா??

ன்று...

சாரதா குண்டு தாக்கி சரிந்தது உண்மை.தூப்பாக்கி மஹாதேவன் கையில் இருந்தது உண்மை.ஆனால்,அவரை சுட்டுக் கொன்றதோ வேறொருவர்.

அவர்,மஹாதேவனின் பரம தொழில் விரோதி....

அன்று மஹாதேவனால் ஏற்பட்ட தொழில் நஷ்டத்திற்கு பழி தீர்க்க அவரை கொல்ல வந்து இறுதியில் சாரதாவின் மேல் குண்டு தாக்கி,பழியில் இருந்து தப்பிக்க துப்பாக்கியை  மஹாதேவனிடத்தில் வீசிவிட்டு ஓடிவிட்டார்.பழி...ஆதித்யாவால், மஹாதேவனிடத்தில் சமர்பிக்கப்பட்டது.

அவர் தான் அனைத்திற்கும் காரணம் என்று நம்பியவன்,அவரை சார்ந்த அனைத்தையும் வெறுத்தான்.

அதனால் தான் அன்று ரம்யாவை கூட துரோகி என்று பட்டம் சூட்டினான்.

இந்த நிலை எப்படி மாற்றம் அடையுமோ???ஆதித்யா மனம் மாறுவான் என்று எண்ணுவது பகற்கனவாய் போய்விட்டால்???

விதி என்ன வலிமையானது?என்று தனக்கு தானே கூறிக் கொண்டார் மஹாதேவன்.

ண்களில் வழியும் கண்ணீரை கூட கவனிக்காது...எங்கோ வெறித்து கொண்டிருந்தாள் ஸ்ரேயா.ராகுலின் பிரிவு,ரகுவின் இழப்பு... அவளை சொல்ல முடியாத அளவிற்கு           பாதித்துவிட்டிருந்தன. புயலென அன்றொரு நாள் வராமல் இருந்தால்..இன்று இவ்வளவு பிரச்சனை வராது இருந்திருக்குமே???

இதில்,தவறை யார் மேல் போடுவது??

"ஸ்ரேயா..."-கண்களை துடைத்துக் கொண்டு,

"என்னம்மா?"

"என்னாச்சு உனக்கு?"

"ஒண்ணுமில்லைம்மா..."

"ரகுவை நினைத்து கவலைப்படுறீயா?"-அவர்களுக்குள் நடந்த ஒன்றையும் அறியாமல் கேட்டார் அவர்.

"..............."

"தெரியும்மா...ரகுவோட இழப்பு யாராலையும் தாங்கிக்க முடியாத ஒன்று தான்."-பாவமாய் போனது ஸ்ரேயாவின் நிலை. அவளால்,சொல்லி அழவும் முடியவில்லை.அமைதியாக இருக்கவும் முடியவில்லை.

"என்ன விஷயம்மா?"

"நாளைக்கு உன்னை பொண்ணு பார்க்க வராங்க ஸ்ரேயா!"-கதிகலங்கி    விட்டாள் அவள்.

"அம்மா?"

"அண்ணா தான் ஏற்பாடு பண்ணி இருக்காங்க....அதை சொல்ல தான் வந்தேன்."

"ம்மா...எனக்கு என்னம்மா அவசரம்?"

"அவசரம் இல்லை.அவசியம்...நாளைக்கு ரெடியாகி விடு!"-கூறிவிட்டு அவர் சென்றுவிட்டார்.

அனைத்தும் சூன்யமாகி விட்டது அவளுக்கு.மனதில், ஒருவனை வைத்து கொண்டு,இன்னொருவனை எப்படி மணக்க முடியும்??என்ன செய்வது???இது என்ன சோதனை???ரகுவிற்கு அளித்த உரிமையை        மற்றொருவனுக்கு வழங்குவதா??நிச்சயமாக முடியாது...பலவாறு யோசித்தவளுக்கு அந்தப் பனி இரவு அனல் மழையை பொழிந்தது.

இப்போது என்ன நடக்க இருக்கிறது??ஆதித்யா ரவியையும்,       அப்துல்லாவையும் எவ்வாறு தண்டிப்பான்?   மஹாதேவனின் ஆசை நிறைவேறுமா?ஸ்ரேயாவிற்கு திருமணம் நடக்குமா??ராகுலுக்கு, ஸ்ரேயா தான் தன் தாய் என்ற உண்மை தெரிய வருமா?பல வேறு முடிச்சுகளுடன் காத்திருக்கிறது என்னுயிரே உனக்காக கதைக்களம்.

தொடரும்...

Go to EUU # 19

Go to EUU # 21

{kunena_discuss:722}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.