" நெனப்புதான் .."
" இல்ல நிஜம் டா.... நாம சேரணும்னு விதி இருந்தா கண்டிப்பா சேர்ந்திடுவோம் .... அது எடுத்துகாட்டு நம்ம ரகு ஜானகிதான் .... அங்க பாரேன் " என்று அவர் கனிவான குரலில் பேசி சுட்டி காட்டிய திசையில், ரகுராமின் தோளில் ஜானகி சாய்ந்திருக்க, அவன் ஏதோ அவளுக்கு புகட்டிகொண்டு இருந்தான் ..
" இன்னும் கொஞ்சம் சகி "
" போதும் ராம் "
" நீதானேடா மயக்கமா இருக்குனு சொன்ன ? இன்னும் கொஞ்சம் குடிடா "
"..."
" மன்னிச்சிருடா ... உனக்கு லாங் டிரைவ் ல இப்படி வாமிட் வரும்னு எனக்கு தெரியாது "
"அச்சோ இதுக்கு கூடவா மன்னிப்பு கேட்பிங்க ? விடுங்க பாஸ்? "
" ஏய் பாஸ் நு கூப்பிட்ட அடிதான் விழும் "
" போதும் போதும் எனக்கு ரொம்ப பயம்மா இருக்கு ...அப்படி பார்ககாதிங்க " என்று அவள் பொய்யாய் நடித்தது அவனின் கோபப்பார்வையை கண்டு அல்ல .. காதல் பார்வையை கண்டுதான் !
" வாலு டீ நீ ! "
" கணவன் எவ்வழியோ மனைவியும் அவ்வழி " என்று அவள் சிரிக்க, அவளை நெஞ்சோடு அணைத்துகொண்டான் ரகுராம் ....
" திருட்டு பையா திருட்டு பையா ...நீங்க ஓவரா நடிக்கும்போதே நெனச்சேன் " என்று சரமாரியாக அவனின் மார்பில் குத்தினாள் சுபத்ரா ....
" ஹே சுபி .. போதும்... என்னவா இருந்தாலும் பேச்சு பேச்சோட இருக்கட்டும் ... "
".... "
" அடிபாவி இளவரசி வலிக்கிறது விடுடி ..... "
" ச்சு போடா .... நான் கூட எங்க புதினா சட்னியை மருதாணின்னு நெனச்சு நீங்க நம்பிட்டிங்களோ நெனச்சேன் "
" கேப்ல ' போடா'நு சொல்றிய நீ ? உன்னை கல்யாணத்துக்கு அபப்ரம் பார்த்துக்குறேன் டி " என்றவன் அவளை நெருங்கினான் ....
" ஐயோ ...முதலில் தள்ளி போங்க "
" சரி வா போலாம் "
" ஹெலோ யுவராஜரே உங்களை தள்ளிட்டு போக சொல்லல ... தள்ளி நில்லுங்கனு சொன்னேன் "
" ஐயோ நீ என்ன இவ்வளோ கஷ்டமான தமிழ் ல பேசற.... எனக்கு பிரிட்டிஷ் தமிழ் தான் வரும் "
" பிரிட்டிஷ் ல இங்க்லீஷ் தான் வரும் தமிழ் எப்போ வந்திச்சு ? "
" அதெல்லாம் வரும் .... சரி .. முறைக்காமல் சொல்லு உனக்கு என்ன வேணும் இப்போ ? "
" காலையில நான் உங்க முகத்துல பூசினது மருதாணி இல்லைன்னு தெரிஞ்சும் ஏன் ஐயோ அம்மான்னு கத்தி சீன் போட்டிங்க ? நான் கூட உங்களை ஏமாத்திடோம்னு சந்தோஷப்பட்டேன் தெரியுமா ? "
" அட மக்கு இளவரசி .. இதான் உன் கேள்வியா ? பட் என்னால பதில் சொல்ல முடியாதே ... "
" ஏனாம் ? "
" சொன்னா நீ ......"
" அடிப்பேன் ..அதுதானே ? சொல்லலேனாலும் அடி விழும் இப்போ "
" ஹா ஹா குட்டிமா .. அர்ஜுனன் இடிக்கே பயப்படமாட்டேன் உன் பூக்கரத்தால் விழும் அடிக்கா பயப்பட போறேன் ??? "
" பின்ன ? "
" நான் சொன்ன நீ வெட்கப்படுவன்னு சொல்ல வந்தேண்டி என் மக்கு இளவரசி "
" அதெல்லாம் மாட்டேன்.... எனக்கு வெட்கம் வராது.. நீங்க சொல்லுங்க" என்றாள் சுபத்ரா.....
" அதுவா ... நான் ஐயோ அம்மான்னு கத்தி சீன் போடா நீயும் அதை நம்பி என் பக்கம் வந்து, ரொம்ப பக்கத்துல உட்கார்ந்து முகம் முழுக்க மருதாணி பூச வந்தியா , அப்போ பூமாலை மாதிரி நீ என் மேல விழுந்தியா " என அவன் ராகம் பாட,
"போதும் போதும் ... மிச்சத்தை சொல்ல வேணாம் " என்றாள் சுபி ...
" நோ நோ என் குட்டிமா ஒன்னு கேட்டா அதை அர்ஜுனனி சொல்லியே ஆகணுமே..... எதுல விட்டேன் ..ஹான் .............. நீ என் மேல " என்று அவன் மீண்டும் தொடங்க
" அஜ்ஜு " என்று அவள் அவனை அடிக்க வர, சுபாவின் கரங்களை சேர்த்து அவளையும் சிறைபிடித்தான் அர்ஜுனன் ....
" என்ன அபி இங்க உட்கார்ந்திருக்க ? " என்று அங்கு பெஞ்சில் தனியாய் அமர்ந்திருந்த அபிராமியை பார்த்து சூர்யா கேட்டார் ...
" ஒன்னும் இல்லைங்க " என்றவரின் தரையை பார்க்க,
" கால் வலிக்கிதுன்னா என் கிட்ட சொல்ல கூடாதா ? " என்று அவர் அருகில் மண்டியிட்டு அவரின் பாதம் பிடித்தார் சூர்யா ...
" ஐயோ என்னங்க இது ? விடுங்க ...."
" ம்ம்ஹ்ஹ்ம்ம்ம் முடியாது "
" யாரும் பார்த்த என்ன நினைப்பாங்க ? விடுங்க !"
" என்ன நினைப்பாங்க ? நம்ம வீட்டுல எப்பவும் மதுரை மீனாட்சி (மனைவி ) ஆட்ச்சிதான்னு நினைப்பாங்க ... விடுடா... எனகொன்னுனா நீ பார்க்க மாட்டியா ? "
" அதுக்காக இப்படியா ? நீங்க முதலில் மேல உட்காருங்க " என்று அபிராமி அதட்ட
" ஹ்ம்ம் விட மாட்டியே ....என்னை நாலு நல்ல உள்ளங்கள் பாராட்ட விடமாட்டியே " என்று போலியாய் சலித்துக்கொண்டு அவரருகில் அமர்ந்தார் சூர்யா ...
" என்ன யோசனை டா ? "
" ...."
" அபி "
" இந்த ஊட்டியை மறக்கவே முடியாதுல மாமா"
"..."
" என்ன அப்படி பார்க்குறிங்க மாமா ? "
" நீ இப்படி மாமான்னு கூப்டுறது எவ்வளோ நல்ல இருக்கு ? ..அதை விட்டுட்டு எப்போ பார்த்தாலும் என்னங்க, ஏங்கன்னு என்னை ஏங்க வைக்கிறியே ? "
" அச்சோ போங்க "
" பாருடா ... என் பொண்டாட்டி வெட்கப்படுவதை"
" நான் உள்ள போறேன் "
" அப்போ நானும் வாரேன் " என்று மனைவியை தோளோடு அணைத்துக்கொண்டு உள்ளே சென்றார் சூர்யா....
உள்ளே, சுப்ரியாவும் ஆகாஷும் நம்ம இளமை பட்டாளங்களிடம் மாட்டிகொண்டனர்....
" சுப்ரி என் அண்ணாவின் முகத்தை காணோம் பார்த்தியா ? டேய் அண்ணா இருந்தாலும் இதெலாம் ஓவர் ... அண்ணியே சும்மா இருக்காங்க உனக்கென்ன வெட்கம் ? " - நித்யா ....
" அதெலாம் நம்ம சுப்ரியின் ட்ரைனிங் தான் நித்து" - கிருஷ்ணன்...
" சரி சரி ரொம்ப ஓட்டதிங்க ரெண்டு பெரும் " - ரகுராம்
" தேங்க்ஸ் டா " என்று ஆகாஷ் நிமிர்ந்து பார்க்க
" பின்ன என்னடா, அவங்களே உன்னை ஓட்டி முடிச்சிட்டா அப்பறம் எனக்கும் ஜானுவுக்கும் போர் அடிக்கதா ? " என்று வாரினான் ....
" நீ ஏன் சிவா சும்மா இருக்க ? " என்று கேட்ட ஆகாஷிற்கு, நித்யாவின் நண்பனாக அவனை தெரியும் ...