(Reading time: 14 - 28 minutes)

 " நெனப்புதான் .."

" இல்ல நிஜம் டா.... நாம சேரணும்னு விதி இருந்தா கண்டிப்பா சேர்ந்திடுவோம் .... அது எடுத்துகாட்டு நம்ம ரகு ஜானகிதான் .... அங்க பாரேன் " என்று அவர் கனிவான குரலில் பேசி சுட்டி காட்டிய திசையில், ரகுராமின் தோளில் ஜானகி சாய்ந்திருக்க, அவன் ஏதோ அவளுக்கு புகட்டிகொண்டு இருந்தான் ..

" ன்னும் கொஞ்சம் சகி "

" போதும் ராம் "

" நீதானேடா மயக்கமா இருக்குனு சொன்ன ? இன்னும் கொஞ்சம் குடிடா "

"..."

" மன்னிச்சிருடா ... உனக்கு லாங் டிரைவ் ல இப்படி வாமிட்  வரும்னு எனக்கு தெரியாது "

"அச்சோ இதுக்கு கூடவா மன்னிப்பு கேட்பிங்க ? விடுங்க பாஸ்? "

" ஏய் பாஸ் நு கூப்பிட்ட அடிதான் விழும் "

" போதும் போதும் எனக்கு ரொம்ப பயம்மா இருக்கு ...அப்படி பார்ககாதிங்க " என்று அவள் பொய்யாய் நடித்தது அவனின் கோபப்பார்வையை கண்டு அல்ல .. காதல் பார்வையை கண்டுதான் !

" வாலு டீ நீ  ! "

" கணவன் எவ்வழியோ மனைவியும் அவ்வழி " என்று அவள் சிரிக்க, அவளை நெஞ்சோடு அணைத்துகொண்டான் ரகுராம் ....

" திருட்டு பையா திருட்டு பையா ...நீங்க ஓவரா நடிக்கும்போதே நெனச்சேன் " என்று சரமாரியாக அவனின் மார்பில் குத்தினாள் சுபத்ரா ....

" ஹே சுபி .. போதும்... என்னவா இருந்தாலும் பேச்சு பேச்சோட இருக்கட்டும் ... "

".... "

" அடிபாவி இளவரசி வலிக்கிறது விடுடி ..... "

" ச்சு போடா .... நான் கூட எங்க புதினா சட்னியை மருதாணின்னு நெனச்சு நீங்க  நம்பிட்டிங்களோ நெனச்சேன் "

" கேப்ல ' போடா'நு சொல்றிய நீ ? உன்னை கல்யாணத்துக்கு அபப்ரம் பார்த்துக்குறேன் டி " என்றவன் அவளை நெருங்கினான் ....

" ஐயோ ...முதலில் தள்ளி போங்க "

" சரி வா போலாம் "

" ஹெலோ யுவராஜரே உங்களை தள்ளிட்டு போக சொல்லல ... தள்ளி நில்லுங்கனு சொன்னேன் "

" ஐயோ நீ என்ன இவ்வளோ கஷ்டமான தமிழ் ல பேசற.... எனக்கு பிரிட்டிஷ் தமிழ் தான் வரும் "

" பிரிட்டிஷ் ல இங்க்லீஷ் தான் வரும் தமிழ் எப்போ வந்திச்சு ? "

" அதெல்லாம் வரும் .... சரி .. முறைக்காமல் சொல்லு உனக்கு என்ன வேணும் இப்போ ? "

" காலையில நான் உங்க முகத்துல பூசினது மருதாணி இல்லைன்னு தெரிஞ்சும் ஏன் ஐயோ அம்மான்னு கத்தி சீன் போட்டிங்க ? நான் கூட உங்களை ஏமாத்திடோம்னு சந்தோஷப்பட்டேன் தெரியுமா ? "

" அட மக்கு இளவரசி .. இதான் உன் கேள்வியா ? பட் என்னால பதில் சொல்ல முடியாதே ... "

" ஏனாம் ? "

" சொன்னா நீ ......"

" அடிப்பேன் ..அதுதானே ? சொல்லலேனாலும் அடி விழும் இப்போ "

" ஹா ஹா குட்டிமா .. அர்ஜுனன் இடிக்கே பயப்படமாட்டேன் உன் பூக்கரத்தால் விழும் அடிக்கா பயப்பட போறேன் ??? "

" பின்ன ? "

" நான் சொன்ன நீ வெட்கப்படுவன்னு சொல்ல வந்தேண்டி என் மக்கு இளவரசி "

" அதெல்லாம் மாட்டேன்.... எனக்கு வெட்கம் வராது.. நீங்க சொல்லுங்க" என்றாள் சுபத்ரா.....

" அதுவா ... நான் ஐயோ அம்மான்னு கத்தி சீன் போடா நீயும் அதை நம்பி என் பக்கம் வந்து, ரொம்ப பக்கத்துல உட்கார்ந்து முகம் முழுக்க மருதாணி பூச வந்தியா , அப்போ பூமாலை மாதிரி நீ என் மேல விழுந்தியா " என அவன் ராகம் பாட,

"போதும் போதும் ... மிச்சத்தை சொல்ல வேணாம் " என்றாள் சுபி ...

" நோ நோ என் குட்டிமா ஒன்னு கேட்டா அதை அர்ஜுனனி சொல்லியே ஆகணுமே..... எதுல  விட்டேன் ..ஹான் .............. நீ என் மேல " என்று அவன் மீண்டும் தொடங்க

" அஜ்ஜு " என்று அவள் அவனை அடிக்க வர, சுபாவின் கரங்களை சேர்த்து  அவளையும் சிறைபிடித்தான் அர்ஜுனன் ....

" ன்ன  அபி இங்க உட்கார்ந்திருக்க ? " என்று அங்கு பெஞ்சில் தனியாய் அமர்ந்திருந்த அபிராமியை பார்த்து சூர்யா கேட்டார் ...

" ஒன்னும் இல்லைங்க  " என்றவரின்  தரையை பார்க்க,

" கால் வலிக்கிதுன்னா என் கிட்ட சொல்ல கூடாதா ? " என்று  அவர் அருகில் மண்டியிட்டு அவரின் பாதம் பிடித்தார் சூர்யா ...

" ஐயோ என்னங்க இது ? விடுங்க ...."

" ம்ம்ஹ்ஹ்ம்ம்ம் முடியாது "

" யாரும் பார்த்த என்ன நினைப்பாங்க ? விடுங்க !"

" என்ன நினைப்பாங்க ? நம்ம வீட்டுல எப்பவும் மதுரை மீனாட்சி (மனைவி ) ஆட்ச்சிதான்னு நினைப்பாங்க ... விடுடா... எனகொன்னுனா நீ பார்க்க மாட்டியா ? "

" அதுக்காக இப்படியா ? நீங்க முதலில் மேல உட்காருங்க " என்று அபிராமி அதட்ட

" ஹ்ம்ம் விட மாட்டியே ....என்னை நாலு  நல்ல  உள்ளங்கள் பாராட்ட விடமாட்டியே " என்று போலியாய் சலித்துக்கொண்டு அவரருகில் அமர்ந்தார் சூர்யா ...

" என்ன யோசனை டா ? "

" ...."

" அபி "

" இந்த ஊட்டியை மறக்கவே முடியாதுல மாமா"

"..."

" என்ன அப்படி பார்க்குறிங்க மாமா ? "

" நீ இப்படி மாமான்னு கூப்டுறது எவ்வளோ நல்ல இருக்கு ? ..அதை விட்டுட்டு எப்போ பார்த்தாலும் என்னங்க, ஏங்கன்னு என்னை ஏங்க வைக்கிறியே ? "

" அச்சோ போங்க "

" பாருடா ... என் பொண்டாட்டி வெட்கப்படுவதை"

" நான் உள்ள போறேன் "

" அப்போ நானும் வாரேன் " என்று மனைவியை தோளோடு அணைத்துக்கொண்டு உள்ளே சென்றார் சூர்யா....

ள்ளே, சுப்ரியாவும் ஆகாஷும் நம்ம இளமை பட்டாளங்களிடம் மாட்டிகொண்டனர்....

" சுப்ரி என் அண்ணாவின் முகத்தை காணோம் பார்த்தியா ? டேய் அண்ணா இருந்தாலும் இதெலாம் ஓவர் ... அண்ணியே சும்மா இருக்காங்க உனக்கென்ன வெட்கம் ? " - நித்யா ....

" அதெலாம் நம்ம சுப்ரியின் ட்ரைனிங் தான் நித்து" - கிருஷ்ணன்...

" சரி சரி ரொம்ப ஓட்டதிங்க ரெண்டு பெரும் " - ரகுராம்

" தேங்க்ஸ் டா " என்று ஆகாஷ் நிமிர்ந்து பார்க்க

" பின்ன என்னடா, அவங்களே உன்னை ஓட்டி முடிச்சிட்டா  அப்பறம் எனக்கும் ஜானுவுக்கும் போர் அடிக்கதா ? " என்று வாரினான் ....

" நீ ஏன் சிவா சும்மா இருக்க ? " என்று கேட்ட  ஆகாஷிற்கு, நித்யாவின் நண்பனாக  அவனை தெரியும் ...

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.