(Reading time: 44 - 88 minutes)

 

ட்டென ரகுராம் ஏதோ எடுப்பது போல அவனை பார்த்து முறைக்க அவள் பாடலை ப்ளே பண்ணிவிட்டு திரும்பி கொண்டாள்...

 நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு

சொன்னால் புரியுமா அது கொஞ்சி கொஞ்சி

பேசுறது கண்ணில் தெரியுமா

நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு

சொன்னால் புரியுமா அது கொஞ்சி கொஞ்சி

பேசுறது கண்ணில் தெரியுமா

உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாது

உயிரே பிரிஞ்சாலும் உறவேதும் பிரியாதே

உண்ணாமல் உறங்காமல்

உன்னால் தவிக்கும் பொன்னுமணி

இப்படியாய் காதல் பாடல்களையும் ஊடல் பாடல்களையும் போட்டு அவனை இம்சித்தாள் ஜானகி ..

" இறைவா இவளை அடக்க ஒரு வழி இல்லையா ? " என்று ரகுராம் கேட்ட நிமிடம் எந்த தேவதை ஆசிர்வதித்ததோ, இன்று 7 மணியானாலும் அவனுடன்தான் செல்வேன் என்று அடம் பிடித்த ஜானகிக்கும், நீ எவ்வளவு நேரம் இருந்தாலும் நகரவே மாட்டேன் என்றிருந்த ரகுராமிற்கு அதிர்ச்சி தர ஆறடி உயரமாய் அங்கு நின்றான் நம்ம சிவா ஐ பி எஸ்....

" ஹாய் " என்று உள்ளே நுழைந்தவனை பார்த்து ரகுராமின் முகம் கல்லாய் இறுகியது.. ஜானகியோ " ச்ச கஷ்டபட்டு  என் செல்ல வேதாளத்தை பாட்டெல்லாம் போட்டு கீழே இருக்க பார்த்தா இந்த பேய் வந்து என் வேதாளத்தை மரம் ஏற வெச்சிடுச்செ "என்றாள்..ஏனோ அவனை பார்த்தாலே தன் சக்தியை யாரோ உருஞ்சியது போல ஒரு துவண்டு போன உணர்வு ஜானகிக்கு .. ஒருவேளை தன் ரகுரமிடமிருந்து  இவன் நம்ம பறிக்கிறான் என்ற பய உணர்வோ ?

" ஹே என்ன ? ரெண்டு பெஉர்ம் ஷாக் ஆகி நிற்குரிங்க ? வான்னு சொல்ல மாட்டிங்களா ? "

( வா ன்னு சொல்லைனா போயிடுவியா ? ) என மனதிற்குள் நினைத்தான் ரகுராம்.. வெளியில்,

" வாங்க சார் ... எங்க கம்பனி ல  நாங்க போலீஸ்க்கு கால் பண்ணலையே !" என்றான் .. எதற்கு இங்கு வந்தாய் என்று கேட்காமல் கேட்டான் .. ஜானகியோ ஐயோ கல்யாணம் பண்ணிக்க போறவனை அவனமான படுத்துறானே என்று நினைக்காமல் , இவனுக்கு இன்னும் வேணும் நல்ல கேளுங்க ரகு  மனதினுள் நினைத்தாள்...

" நானும் போலிசாக வரல .. "

" அப்போ யுனிபார்ம் "

" சாரி ரகுராம் .. நான் அவசரமா வந்தேன்  அதான் "

" ஓஹோ .. ஓகே சார் .. யு கேரி ஒன் " என்றவன் மடிகணினியில் பார்வையை பதித்தான்.. ஆனால் அவனின் ஐம்புலன்களில் கண்களை தவிர மற்ற நான்குமே " போடா நாங்க ஜானகியைத்தான் பார்ப்போம் " என்று சவால் விட்டன ..

ழுத்தமான  காலடியோசையோடு வந்தான் சிவா ஜானகியின் அருகில் ... அன்று இருந்த தயக்கம் நீங்கி, அவன் பார்வையை எதிர்கொண்டாள் ஜானகி .. " இனி நான் ரகுராமின் சொத்து " என்ற அவளும் மனதைரியம் அவளின் ஒவ்வொரு அசைவிலும் தெரிந்தது ...

" ஹாய் ஜானு "

" கால் மீ ஜானகி .. மிஸ் ஜானகி... ரொம்ப முக்கியமானவங்க தான் என்னை ஜானுன்னு  கூப்பிடுவாங்க "

" அப்போ ரகுராம் கூப்பிட்ட மாதிரி இருந்ததே அன்னைக்கு "

" அதான் சொன்னேனே  ரொம்ப முக்கியமானவங்கன்னு ... சில நேரம் ரொம்ப நெருக்கமானவங்க கூட அப்படிதான் சொல்லுவாங்க "

" அப்போ உங்க பாஸ் உனக்கு முக்கியமானவரா ? நெருக்கமானவரா ?"

" அதை உங்ககிட்ட சொல்லனும்னு அவசியம் இல்ல.. பட் கண்டிப்பா அவரும் நீங்களும் ஒன்னு இல்லை"

" வாட் டூ யு மீன் ? "

" ஐ மீன் வாட் ஐ சைட் "

" சரி வா போலாம் "

" ஹெலோ முதல்ல ஒருமையில் கூப்பிடுறத நிறுத்துங்க ... அண்ட் நீங்க வான்னு சொன்னதும் நான் ஏன் வரணும் ? "

" ஏன் வரணும்னா, நிச்சயத்துக்கு மோதிர அளவு பார்க்க சொல்லி உங்க பானு அத்தை சொன்னங்க"

அவ்வளவுதான் .. ! பானு அத்தை என்றதுமே அவளின் தைரியம் கொஞ்சம் கொஞ்சமாய் மறைய தொடங்கியது .. இருப்பினும் அவள்

" நான் வரல " என்றாள்

" ஏன் ? "

" எனக்கு ... எனக்கு வேலை இருக்கு "

" இதுவும் முக்கியமான வேலைதான் "

" எனக்கு எது முக்கியம்னு நாந்தான் டிசைட் பண்ணனும் "

" அத்தை சொன்னது சரிதான் .. நீ வரமாட்டன்னு சொன்னங்க .. இட்ஸ் ஓகே .. விரல் சைஸ் போதும் "

" உன் கை நீட்டு "

" ஏன் ?? எதுக்கு ? " என்ற ஜானகி பதட்டத்தில் எழுந்தே விட்டாள்...

" நான் அளவு எடுத்துக்குறேன் "

" வேணாம் "

அவன் பேச பேச அவள் மறுக்க, அவள் எப்போது குரல் உயர்த்தினாள்? எப்போது தன் இடத்தை விட்டு நகர்ந்தாள் ? எப்போது ரகுராமின் பக்கம் போனாள் ? அவளுக்கே தெரியாது ..அவளை பொருத்தவரை சிவா அவளை ரகுவிடம் இருந்து பிரிக்க வருகிறான் .. இறுதியாய் சிவா அவளின் கரம் பற்ற முயல, ரகுராமும் அவன் இடத்தில் இருந்து எழ

" ஆ " என்று அலறியபடி ரகுராமை கட்டிகொண்டாள் ஜானகி .. ரகுராமும் சிவந்த விழிகளுடன் சிவாவை முறைத்தபடி ஜானகியை அணைத்து கொண்டான் ..

பனித்திரையா ? இரும்பு கோட்டையா ? ஊடலா ? சொல்ல முடியாத அந்த கண்ணாமூச்சி  அவளின் இறுகிய அணைப்பில் இனிதே முடிவுற்றது ... மெல்ல நிமிர்தவள் ரகுராமின் முகம் பார்த்தாள்... அன்று கனவில் கூட இப்படித்தானே ஸ்ரீராம் ரகுராமாய் மாறி நின்றான் ??? அவனின் அணைப்பில் தைரியம் பெற்றவளாய் சிவாவிடம் திரும்பி

" மிஸ்டர் சிவா, நீங்க போலிஸ் .. உங்களுக்கே தெரியும் .. நான் மேஜர் .. என்னை கட்டாயபடுத்தி கல்யாணம் பண்ண முடியாது .. என்  அத்தை உங்ககிட்ட என்ன சொன்னங்க தெரியலை ... நான் கல்யாணமே வேணாம்னு பிடிவாதத்தில் இருந்தது உண்மைதான் .. இப்பவும் அதே பிடிவாதம் தான் .. ஆனா ஒரே ஒரு மாற்றம்..என் ரகுராமை தவிர வேற வேற யாரையும் நான் கட்டிக்க மாட்டேன் .. இதுதான் என் முடிவு ,, உங்களால முடிஞ்சதை பண்ணிகொங்க " என்றவள் அவன் மார்பில் சாய்ந்து நின்றாள்..அதே நேரம் சிவாவின் செல்போன் சிணுங்க , அதை எடுத்தவன் உரக்க சிரித்து

" மச்சான் ப்ளான் சக்சஸ் " என்றான் .. இருவரும் விழிக்க ஜானுவிடம் தனது போனை தர லைனில் இருந்தது நம்ம அர்ஜுனன் தான் ..

" ஜானு போனை ஸ்பீகர்ல போடு "  என்றான்

" என்ன ரெண்டு பேரும் என் நண்பன் தயவுல சேர்ந்தாச்சா ? "

" நண்பனா ? "

" ஹா ஹா ஆமா ரகு .. சிவா என் பிரண்ட் . ஜானகி , அன்னைக்கு நீ கோவில்ல சொன்ன பதிலை ரகு என்கிட்ட போன் ல சொன்னான்.. ரகுவுக்கே தெரியாமல் போட்ட ப்ளான் 2 தான் இது "

" மாமா என் கையில நீங்க மாட்டுனா மட்டன்..சிக்குனா சிக்கன்  சொல்லிட்டேன் " என்றாள்...

" ஹா ஹா ஹா "

இதுதான் நடந்தது.. இந்த கதையை கேட்டு நம்ம காதல் குயில்கள் அர்ஜுனனை கட்டி பிடிச்சாங்களா இல்லை அடி பின்னி எடுத்தாங்களா நு யோசிங்க ! பாய் பாய் 

தொடரும்

Episode # 18

Episode # 20

{kunena_discuss:734}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.