சூர்யா பூஜை அறைக்கு வந்து " அபி , இங்க வா .. லைன்ல கிருஷ்ணன் ...." என்றார் .. அடுத்த கணம் செல்போனை வாங்கிக் கொண்டு ஒரு அறையில் சென்றார் அபிராமி
" ஹெலோ ... ஹெலோ கிருஷ்ணா "
" அம்மா " என்று அழுகுரல் கேட்டது .. குரலுக்கு சொந்தக்காரி மீராதான் ....
" அம்மா ... அம்மா "
" மீரா "
“….”
" மீராம்மா என்னை மன்னிச்சுடமா ... உன்னை கஷ்டபடுதிட்டேன் .. எனக்கு தெரியும் உன்னால அங்கே இருக்க முடியாதுன்னு .. எல்லாம் என்னாலதான் .. என்னை மன்னிச்சிரு "
" அம்மா.... என்ன வார்த்தை சொல்லிடிங்க ? என்னை பெத்த அம்மாகூட இவ்ளோ யோசிச்சு இருப்பாங்களா எனக்கு தெரில ?? ஏன் மா ??? நீங்க அவர், சின்னமாமா இப்படி எல்லாரும் சேர்ந்து என்மேல பாசத்தை காட்டுறிங்க ? "
" ஏன்னா எங்களுக்கு நீயும் சுபாவும் ஒன்னுடா... நீ , ஜானகி , சுபா மூணு பேருமே ஒண்ணுதான் .. சுபாவுக்கு இப்படி ஆகி அர்ஜுன் நிராகடிச்சா கிருஷ்ணன் தாங்குவானா ? அப்போ அவன் உன்னை எப்படி நிராகரிப்பான் ? என் மகளுக்கு இப்படி ஆனா நான் அவளை ஒதுக்கி வைப்பேனா ? அப்போ உன்னை எப்படிடா நான் தள்ளி வைப்பேன் .. "
" எனக்கு உங்களை இப்போவே பார்க்கணும் .. அங்க வரணும் .. உங்க கால்ல விழுந்து அழனும் போல இருக்கு " என்றாள் மீரா..
கண்ணீரை துடைத்துக் கொண்டு பேசினார் அபிராமி ..
" வாடா .. வா.. கண்டிப்பா வா.... கையில் என் பேரக்குழந்தையை தூக்கிகிட்டு வந்துடுடா " என்றார்..
அவரின் தெளிவான குரலில் தெளிந்தாள் மீரா.. அழாதே என்று சொல்லாமலே கண்ணீரை நிறுத்தினாள் .. அருகில் அமர்ந்திருந்த கிருஷ்ணனின் தோளில் சாய்ந்து பதில் சொன்னாள் ...
" வரோம்மா .. வரோம் .. எங்க மகனோடு வரோம் .. உங்க பேரனோடு கண்டிப்பா வரோம் " என்றாள் ... அதன்பின் இருவரும் பேசிக்கொண்டு இருக்க கிருஷ்ணன் தான் வியப்பிலும் ஆனந்தத்திலும் இருந்தான் .. அதன் பிறகு அவனும் அபிராமியிடம் அனைவரிடமும் பேசிவிட்டு நிமிர்ந்தான் ..
" கிருஷ்ணா "
" சொல்லுடா "
" நாளைக்கு கோவில் போகலாம் .. போயிட்டு நம்ம வீட்டுக்கு போன் பண்ணி அந்த விஷயத்தை சொல்லலாம் " என்று சொல்லி புன்னகைத்தாள் ...அவனை பேச விடாமல், அவனே கேட்காமல் காதல் பரிசுகளை அள்ளி வழங்கினாள் ... விடிவதற்குள்ளேயே மீண்டும் இந்தியாவில் இருந்து அவனுக்கு போன் வந்தது
" சுபத்ரா தாயாக போகிறாள் " என்ற செய்தியுடன் ..
மறுநாள், மதியமே அதே செய்தியை மீராவும் அவர்களுக்கு சொல்லி இரட்டிப்பு மகிழ்ச்சியை தந்தாள் .. இது போதுமா என்பது போல , அடுத்த நாளே ஜானகியும் அதே நற்செய்தியை சொல்லி அவர்களின் குடும்பத்தை மகிழ்ச்சியின் உச்சிக்கே கொண்டு சென்றாள் ...
இப்போது மகிழ்ச்சியா நண்பர்களே ? என்னால் முடிந்தவரை இந்த முறை அனைவரின் கதைகளையும் சொல்லிவிட்டேன் .. இன்னும் இரண்டு வாரங்களில் நமது " வேறென்ன வேணும் நீ போதுமே " பயணம் சுமூகமாய் நிறைவடைய போகிறது என்பதையும் தெரிவிக்கிறேன் .. அடுத்த இரண்டு கலகலப்பான எபிசொட்களுடன் வருகிறேன் ..நன்றி
தொடரும்
{kunena_discuss:734}