(Reading time: 26 - 51 minutes)

திக்கோ ரேயாவின் காதருகில் ரகசியமாய் சொன்னான் “ஏய் கேடி ஐ லவ் யூ” எத்தனை முயன்றாலும் ஆதிக்கின் வார்த்தைகளின் விளைவு அவள் முகத்தில் தெரியாமலா இருக்கும்….? பார்த்திருந்த சரித்ரனும் உதட்டுக்குள் சிரித்தான்.

ஓவர் ஆல் சிட்ஷுவேஷன் வந்தனாவை கிண்டல் செய்வது போல் செல்கின்றதோ? ராஜ்குமார் தன் கருத்தை சொல்லி நிலையை சுமுகமாக்க முயன்றார். “வந்தனா நீ சொல்றதுல்ல நிறைய விஷயம் நான் இப்போதான்மா கேள்விப் படுறேன்…. அதெல்லாம் வெறும் கற்பனைனும் என்னால சொல்ல முடியாது.

கண்டிப்பா அதி, பியூலா விஷயத்துல வசிகரன், மலர்,  எல்லோர் விஷயத்திலும் ஏதோ தப்பு நடந்து இருக்குது தான். ஆனா அதை எல்லாம் செய்தது டேவிட்னு என்னால நம்ப முடியாதுமா….அவனால ப்ளான் செய்தெல்லாம் யாரையும் அடிக்க கூட முடியாதுமா….அப்டி ஒரு சாஃப்ட் நேச்சர்ட் மேன்…இதுல மர்டர்..அதுவும் பணத்துக்காகனு…கண்டிப்பா செய்தது அவனா இருக்காது….அவன யாரோ ஸ்கேப் கோட்டா யூஸ் செய்துருக்கனும்னு தான் எனக்குப் படுது…..இவ்ளவு நாள் கல்ப்ரிட் டேவிட் னே நினச்சுகிட்டே நீ பார்த்ததால உண்மையான கல்ப்ரிட் யாருன்னு நீங்க ஐடன்டிஃபை செய்யாம கூட போய்ருக்கலாம்….அதோட எனக்கு என் தம்பி அதி முக்கியம் தான்…..பட் அதுக்காக தப்பே செய்யாத என் பொண்ண என்னால பனிஷ் செய்ய முடியாது….”

வந்தனாவின் முகம் இருளடைந்து போயிற்று.

“பியூலாவும் அப்போ அதி மேல இப்டித்தான் ஆசப்பட்டா பட் அதை நாங்க அப்ப தடுத்திருந்தா இன்னைக்கு அவ டாக்டரா இருந்திருப்பா….நான் உங்க பொண்ணோட நல்லதுக்குத்தான் சொல்றேன்…”

“அன்றில் பியூலா அளவு சின்னப் பொண்ணா இருந்தா நானும் இப்ப அப்டித்தான்மா பிடிச்சு வச்சுருப்பேன்…ஏன்னா உணர்ச்சிகள் அடிப்படையில் ஓடுற வயசு அது…..இப்போ அவளும் வெளிய பழகுறா…நல்லது கெட்டது யோசிக்றா….கல்யாண வயசும் வந்தாச்சு…அவளே இதுல முடிவெடுக்கட்டும்னு எனக்குப் படுது…அதானால சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதமா…..இந்த விஷயத்துல அவள டிஸ்டர்ப் செய்யாதம்மா…”

“இதுதான் உங்க முடிவுன்னா இதுல நான் செய்றதுக்கு ஒன்னுமில்லை…அப்ப நான் கிளம்புறேன்” சொல்லிய வந்தனா எழுந்து போய் விட்டார். ரேயாவின் கையும் அதுவாக பிரிந்து விடைப் பெற்றது ஆதிக்கின் கையிலிருந்து.

ஆதிக் இப்பொழுது ராஜ்குமாரைப் பார்த்தான்.

“அவங்களுக்கு சொன்னதுதான் நான் உங்க ரெண்டு பேருக்கும் சொல்றதும்…..ரெண்டு பேரும் யோசிச்சு  முடிவு எடுங்க…பட் என்ன முடிவு எடுக்கீங்களோ அந்த முடிவ ஹானர் பண்ற மாதிரி நடந்துக்கோங்க….அன்றில் இன்னொரு தடவை அடுத்தவங்க அப்பாட்ட வந்து உங்க பொண்ண இப்டி பார்த்தேன்னு சொல்ற மாதிரி நடந்துக்க மாட்டன்னு நம்புறேன்….”

ரேயா இப்பொழுது அப்பா அருகில் வந்து அமர்ந்தாள். நகத்தை கடித்தபடி பரிதாபமாக அப்பாவைப் பார்த்தாள். “சாரிப்பா”

இப்பொழுது ராஜ்குமார் ஆதிக்கைப் பார்த்தார்.

“எங்கப்பா விஷயத்துல நான் என்ன சொல்லனும்னு நினச்சனோ அதை வார்த்தை பிசகாம சொல்லிட்டீங்க அங்கிள்….ஐ’ம் வெரி க்ரேட்ஃபுல் ஃபார் தட்…வெட்டிங் விஷயத்துல ஐ யம் ஈவன் மோர் க்ரேட் ஃபுல்….நீங்க சொன்ன மாதிரி நாங்க யோசிச்சுட்டு முடிவு சொல்றோம் அங்கிள்….” ஆதிக் சொல்ல

யோசித்து முடிவெடுப்பதா? என்ன சொல்கிறான் இவன் என அதிர்ந்து போய் அவனைப் பார்த்தாள் ரேயா.

தொடரும்

Episode # 14

Episode # 16

{kunena_discuss:876}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.