இரும்பை ஈர்க்கின்ற காந்தமா ?
என்று விவரிக்க முடியாத அளவு அழுத்தமான பார்வையுடன் அவளை நோக்கினான் .. கண் இமைத்தால் அவள் மறைந்து விடுவாள் என்ற பயமோ ? என்பதற்கேற்ப , கண் சிமிட்டாமல் அவளை விழுங்கி கொண்டே இருந்தான் .. அவள் சூடிய மல்லிகையில் இருந்து அவள் பாதம் உரசி நின்ற கொலுசு வரை எதுவுமே அவன் கண் பார்வையில் இருந்து தப்பவில்லை ..
" இந்த ஒரு பார்வையால தானே நானும் பாழானேன் ..
பாக்காதே பாக்காத .. அய்யயோ பாக்காத .. "
" அட ஏன்மா வாசலிலே நிக்கிற ? உள்ள வா " என்று பாட்டி அவள் கையை பிடித்து அழைக்க , தேன்நிலாவின் கன்னங்களில் வண்ணம் சேர்ந்தது .. அதை கண்டு வெற்றிப்புன்னகை பூத்தவன் எதுவும் பேசாமல் இருவரையும் பின் தொடர்ந்தான் .. ஏதேதோ பேசி ஆர்பாட்டம் செய்ய வேண்டும் என்று வந்தவள் அவன் பார்வைக்குள் சிக்கித் திணறி சமையலறைக்குள் பாட்டியுடன் புகுந்து கொண்டாள் .. பாட்டி தான் வாய் வலிக்க பேசி அவளிடம் கேள்விகள் கேட்க , நிலாவோ தன்னை தொடரும் மதியழகனின் பார்வையை மனதிற்குள் ரசித்து திளைத்து கொண்டிருந்தாள் ..
" நீ பார்த்தா பறக்குறேன்
பாதை மறக்குறேன்
பேச்சை குறைக்கிறேன் சட்டுன்னு தான்
நான் நேக்கா சிரிக்கிறேன்
நாக்கை கடிக்கிறேன்
சோக்கா நடிக்கிறேன் பட்டுனுதான்
இந்த ஒரு பார்வையால தானே நானும் பழானேன் "
" அம்மு நான் குளிச்சிட்டு வரேன் " என்று இருவருக்கும் கேட்கும்படி குரல் கொடுத்துவிட்டு அங்கிருந்து மறைந்தான் மதியழகன் .. "அப்பாடா" என்று பெருமூச்சு விட்டு கொண்டாள் தேன்நிலா ..இன்னும் சில நிமிடங்களில் அவள் மூச்சு விடவும் மறந்து நிற்பாள் என்று அறியாமல் ..
" அத்தை மாமா எப்படி இருக்காங்க பாட்டி .. சிங்கபூரை விட்டு வர மனசே இல்லையா ?"
" அடுத்த மாசம் வராங்க நிலாம்மா .. உங்க அம்மா அப்பா கிட்டயும் பேசனும்ல .. சட்டுபுட்டுனு உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வெச்சிடனும்ன்னு தான் நாங்க எல்லாரும் ஆசை படுறோம்"
" ஏதோ பாவம் மதி உங்க புண்ணியத்துல கொஞ்சம் ருசியான சமையலை சாப்பிட்டு வளர்றான் .. அது பொறுக்காமல் என்கிட்ட மாட்டி விட பார்கறிங்களே " என்றுகுறும்புடன் சிரித்தாள் தேன்நிலா ..
" அதெல்லாம் நீ நல்ல சமைப்பன்னு உங்க அம்மா சொன்னாங்க நிலா "
" என் அம்மாவா ? சொல்லி இருப்பாங்க ! உலகத்துல எந்த அம்மாதான் அவங்க பொண்ணை விட்டு கொடுப்பாங்க ?"
" அப்போ உனக்கு சமைக்க தெரியாதா ?"
" கொஞ்சம் தெரியும் நிறைய தெரியாது " என்று விழிகளை அவள் உருட்டும்போதே
" பாட்டி வீட்டுல உப்பு இருக்கா ?" என்று கேட்டபடி அங்கு வந்தான் மதியழகன் .. அவனை காணத் துடித்த ஆவலை அடக்கி கொண்டு முதுகு காட்டி நின்றாள் நிலா ..
" ஏன் கண்ணா .. நிலாவுக்கு சுத்தி போடணுமா ? "
" உங்க பேத்திக்கு இருக்குற கண்ணுக்கு உப்பு போதாது கடலையே கையில எடுத்து திருச்ட்டி சுத்தணும் .. நான் எனக்கு சொன்னேன் !" என்று அவன் கம்பீரமாய் கூறவும், "அப்படி என்னதான் சார் அழகுன்னு பார்ப்போம் " என்றபடி அவனை திரும்பி பார்த்தவள் , வேஷ்டி சட்டையில் கம்பீரமாய் நின்றவனை கண்டு சொக்கித்தான் போனாள் .. அவள் தன்னை ரசிக்கிறாள் என்ற கர்வத்தில் சிரித்து கொண்டே அவன் மீசையை முறுக்கிட, கண்களை அழுந்த ஒரு நொடி மூடி கொண்டாள் தேன்நிலா ..
" மதியழகா ..இருந்தாலும் நீ இவ்வளவு அழகாய் இருக்க கூடாது " என்று அவள் நினைக்கும்போதே
" நீ பார்த்திடல் அழகு .. நீ பேசிடல் அழகு .. நீ ரசித்திடல் அழகு .... அதனால் நான் அழகு " என்று அழகாய் சிணுங்கியது அவளது கைப்பேசி .. அந்த பாடலை கேட்டு இன்னும் வசீகரமாய் சிரித்தான் மதியழகன் ..
" ஹெலோ "
" ஹே தேனு "
" சொல்லு டீ சங்கு "
" எங்க டீ இருக்கீங்க ? பால் காய்ச்ச நல்ல நேரம் வர போகுது .. சின்ன பசங்க நாங்களே ரெடி ஆகிட்டோம் .. க்ரூப்ல சீனியர்ஸ் நீயும் அண்ணாவும் இன்னும் வரலையா ?" என்று பொரிந்தாள் சங்கமித்ரா ..
" அடியே கார் ஸ்டார்ட் பண்ணுற நேரம் நீதாண்டி போன் பண்ணி கதை அளந்துட்டு இருக்க .. சீக்கிரம் போனை வை " என்று வாய் கூசாமல் பொய் கூறினாள் நிலா .. ஒருவழியாய் போனை வைத்தவள்,