(Reading time: 15 - 30 minutes)

" புரியுது நிலா .. படிச்சோம் .. படிச்சதுக்காக வேலை செஞ்சோம்ன்னு இருக்காமல் , படிச்ச அறிவை வாழ்வியலில் பயன்படுத்தணும், பயன்படுத்தி மத்தவங்களுக்கு நல்வழி காட்டணும்னு நினைக்கிறது ரொம்ப பெரிய விஷயம் .. அதை நீ நிறுத்த கூடாது .. நானும் என்னால் முடிஞ்சா உதவியை உனக்கு செய்வேன் .. நீ கவலையே படாதே .. "

" ம்ம்ம்ம் ..ஆனா பாட்டி ஆசைபடுறாங்க "

" அவங்களை நான் பேசிக்கிறேன் .. நீ ஏன் கவலை படுற ?"

" மறுபடி வேதாளம் முருங்கை மரம் ஏறுன கதையாய்  சண்டை போடாதே டா "

" அடியே , என்னை பார்த்தா உனக்கு எப்படி இருக்காம்..நாங்க எல்லாம் ரொமாண்டிக் ஹீரோ ஆகி பல மாசம் ஆச்சு " என்று கண் சிமிட்டினான் அவன் ..

 " ஆமா ஆமா .. ரெண்டு பேருக்கு நடுவில யாரோ உட்கார போற மாதிரி நீ தள்ளி உட்கார்ந்து இருக்கும்போதே தெரியும் நீ  காதல் மன்னன்னு " என்று வாரினாள்  நிலா ..

" ஏதோ சின்ன பொண்ணு காரோட்டும்போது டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு நினைச்சேன் பாரு .. என்னைத்தான் சொல்லணும் " என்றவன் அவளை நெருங்கி அமர

" ஹ்ம்ம் நிலா , இப்படி கேட்டு வாங்க வேண்டியதா இருக்கே உன் நிலைமை " என்று நிலா தனக்குள் சொல்வதுபோல புலம்ப , அதன்பின் அவள் கேட்காமலேயே அவளது குறைகளை  தீர்த்து வைத்தான் மதியழகன் ..

" ஹே மாமா "

" என்ன டீ "

" உன்கிட்ட ஒரு வாரமாய் ஒரு விஷயம் கேட்கனும்னு நினைச்சேன் "

" பாருடா .. ஒருவாரமாய் உன் ஓட்டை வாய் சும்மா இருந்துச்சா ?"

" டேய் "

" ஹா ஹா சொல்லு "

" என் இமெயில் பாஸ்வர்ட் உனக்கு தெரியாதுன்னு எனக்கு தெரியும் "

" சரி அதுக்கு ?"

" அப்பறம் ஏன் எல்லாருகிட்டயும் அப்படி சொன்ன நீ ?"

" நீதானே எல்லா டிடைல்ஸ்உம எனக்கு இமெயில் பண்ணி அனுப்பின ?"

" ஆமா , உன்கிட்ட சொல்லாமல் இருக்க முடியலன்னு , நீ இங்க வந்தபிறகு தவறுதலா அனுப்புற மாதிரி அனுப்பி வெச்சேன் .. ஆனா நீ என்னை கேள்வி கேட்கவே இல்ல .. சோ நீ என் இமெயில் பார்க்கலையோன்னு நினைச்சேன் "

" அதெல்லாம் எப்பவோ  பார்த்துட்டேன் .. அது மட்டுமா பண்ண நீ "

" வேறென்ன பண்ணேன் "

" தூக்க கலக்கத்துல எல்லாத்தையும் உளறிட்ட நீ !"

" என்ன ஷக்தி சொல்லுற ?"

" உண்மைதான் .. இதை நான் வெளில சொன்னா என்ன ஆகிருக்கும் "

" அய்யோ எல்லாரும் ரவுண்டு கட்டி இருப்பாங்க .."

" ம்ம்ம் அதான் சொல்லல "

" ஹ்ம்ம்ம்ம் "

" என்னடி யோசிக்கிற "

" இல்ல , அப்பப்போ  நீ சைலண்டா என்னை இம்ப்ரஸ் பண்ணிடுற மாமா "

" ஹா ஹா அதென்ன அப்பப்போ ? அப்போ எப்பவுமே இல்லையா ?"

" ஏன் உனக்கு தெரியாதா ?"

" தெரிஞ்சா நீ சொல்ல கூடாதா ?"

" சொல்லலன்னா  உனக்கு புரியாதா ?"

" புரிஞ்சா புரிய வைக்க மாட்டியா "

" புரிய வைக்கலன்னா விட மாட்டியா ?"

இப்படியாய் இருவரும் பேசிக்கொண்டே போக , நிலாவின் கார் வரும் சத்தம் கேட்டது ..

நிலா மதியழகன் இருவரின் ஜோடி பொருத்தத்தை மனதிற்குள் ரசித்து நின்றனர் அனைவரும் ..

" வாங்க அண்ணா " என்றவாறே கதிரும் சக்தியும் மதியுடன் முன்னே நடக்க அவர்களை பார்த்து நிறைவாய் புன்னகைத்தாள்  சங்கமித்ரா ..

" எல்லாம் நல்லபடியா முடிஞ்சது தேனு .. லைப்ல நான் மறுபடியும் இவ்வளவு சந்தோஷமாய் இருப்பேன்னு எல்லாம் நினைக்கவே இல்ல .. வாழ்க்கையை மொத்தமாய் வாழ்ந்து முடிச்ச மாதிரி திருப்தியா இருக்கு .. என் ஷக்தி , என் கூடவே இருக்கான் .. அதுவும் அவனுக்கு புடிச்ச எதிர்காலத்தோடு .. " என்றாள்  கண்கலங்கிட ..

" நீ இவ்வளவு சுயநலமாய் பேசுவன்னு நான் நினைக்கவே இல்லை சங்கு " என்றாள்  நிலா .. அவள் குரலில் ஒரு தீவிரம் இருந்தது ..அதை உணர்ந்து துணுக்குற்று தோழியை அவள் பார்க்க , என்ன ஆச்சுன்னு அடுத்த எபிசோட்ல சொல்றேன் ;)

தொடரும்

Episode # 24

Episode # 26

{kunena_discuss:777}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.