“அப்போ அவங்களும் பாவம் தானே… ஹ்ம்ம்ம் ஹூம்… எனக்கு வேண்டாம்…” என அவள் மறுக்க,
“இதோ பாரு… எங்கிட்ட பணம் இருக்கு… நான் அதை வச்சு வாங்கிப்பேன்… சரியா…” என அவன் அதை எடுத்து காட்ட, அவள் மனம் ஒருவழியாய் சமாதானம் அடைந்தது…
பின் அவன் டிபன்பாக்ஸை எடுத்து மூடியைத் திறந்து அதில் இருந்த சாதத்தைப் பார்த்து திகைத்தவள், “இதுல நிறைய இருக்கே… நான் எப்படி சாப்பிட முடியும்?...” என சொல்ல
“நீ சாப்பிட முடிஞ்ச அளவு சாப்பிடு… மிச்சத்தை வச்சிடு… பரவாயில்லை…” என அவனும் சிரித்துக்கொண்டே சொல்ல
சற்று நேரம் யோசித்தவள், தன் லஞ்ச் பாக்ஸில் இருந்த ஸ்பூனை எடுத்து தனக்கு வேண்டியதை மூடியில் எடுத்து வைத்துவிட்டு மிச்சத்தை கைபடாமல் அந்த டிபன்பாக்ஸிலேயே வைத்துவிட, அவனிடம் மெச்சுதலான பார்வை ஒன்று உண்டானது…
சாப்பிட்டு முடித்தவள், அந்த மூடியை கழுவ போக, அவளிடமிருந்து அதை வாங்கி, “நான் கழுவிக்கிறேன்… நீ போய் கை கழுவு…” என்றான் அவன்…
“இல்லை நான் சாப்பிட்டதை நான் தான கழுவணும்… கொடுங்க… நான் கழுவித்தரேன்…” என அவள் பிடிவாதம் பிடிக்க, வேறு வழியில்லாமல் அவன் அதை அவளிடமே கொடுத்தான்…
பின்னர் அப்படியே பேசிக்கொண்டே வந்த போது, அவளின் ஸ்கூல் வந்துவிட, “என் ஸ்கூல் வந்துடுச்சு… நான் வரேன்…” என்றவள், இரண்டடி எடுத்து வைத்துவிட்டு பின் அவனிடமே வந்தாள்…
“எனக்கு க்ளோஸ் ப்ரெண்ட்ஸ் யாருமே கிடையாது… நீங்க எனக்கு ப்ரெண்டா இருப்பீங்களா?...” எனக் கேட்டு கை நீட்ட,
அவளின் அந்த வார்த்தை அவனை தானாகவே அவளுடன் கை குலுக்க செய்தது “ப்ரெண்ட்ஸ்….” என….
“தேங்க்யூ….” என அவள் சொல்லிவிட்டு சிரிக்க
“பார்த்தீயா?... இப்போ தான ப்ரெண்ட் சொன்ன… அதுக்குள்ள தேங்க்ஸ் சொல்லுற?... ப்ரெண்ட்ஸ்க்குல்ல தேங்க்ஸ் சொல்லுவாங்களா?... ஹ்ம்ம்…” என்றபடி அவன் பார்க்க
“அய்யோ… ஆமால்ல… நான் மறந்துட்டேன்…” என அவள் அசடு வழிய,
“பரவாயில்லைடா… இனி சொல்லாத… சரியா…” என அவன் மென்மையாக கேட்க, அவள் தலை தானாகவே அசைந்தது சரி என….
“ப்ரெண்ட்னு சொல்லுறீங்க?... இப்போ வர என் நேம் கூட நீங்க கேட்கலையே?... ஏன்… என்னோட நேம் சீக்ரெட் உங்களுக்கும் தெரிஞ்சி போச்சா?...” என அவள் கவலையோடு கேட்க
“என்ன சீக்ரெட் உன்னோட நேம்ல… எனக்கு தெரியாதே நிஜமா….” என்றான் அவனும் அவளின் பெயர் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தோடு…
“என்னோட பேரில் பையன் பேரும் கலந்து இருக்கும்… ஆளாளுக்கு ஒவ்வொரு நேம் சொல்லி கூப்பிடுவாங்க… கடுப்பா இருக்கும்… அதான்…”
“சரி… உன் பேரென்னடா?...”
“சொன்னா கிண்டல் பண்ண மாட்டீங்கல்ல?...”
“நான் கிண்டல் பண்ணுவேன்னு தோணுதா உனக்கு?...” என அவனும் சற்றே வருத்தமாய் கேட்க, அது அவளுக்கு பொறுக்காமல்,
“கிருஷ்ண ப்ராணாதிகா….” என்றாள்…
“ரொம்ப அழகா இருக்கு உன் பேரு….” என அவன் நிஜமாகவே ரசித்து சொல்ல, ஏனோ அவன் சொல்வதில் பொய் இருக்கும் என தோன்றவில்லை அவளுக்கு… அவன் சொன்ன விதமே அவளின் இதழில் புன்னகையை வரவழைத்தது… அதை மாற்றாமலே, “உங்க பேரென்ன?...” என அவள் வினவ,
“மகத்ரு சகி…” என்றான் அவன்….
தொடரும்
{kunena_discuss:907}