(Reading time: 9 - 18 minutes)

"ன்ன நீ?நம்ம பையன்கிட்ட குறை எப்படி?"

"இதோப்பாரு...ராகுல் என் பையன் எந்த கஷ்டமே அவன் தாங்குவான்!ஆனா,தீக்ஷா எங்களை நம்பி வந்த பொண்ணு அவளுக்கு எக்காரணத்துக்காகவும் தலைகுனிவு ஏற்பட நாங்க விட மாட்டோம்!"-இந்த உரையாடலை மறைந்திருந்து கேட்டதனால் எழுந்த கேள்வி தான் அது!!

ராகுல் ஒரு பெருமூச்சு விட்டான்.

"எனக்கு கொஞ்ச குடிக்க தண்ணி எடுத்துட்டு வா சதி!!"

"ம்..."-அவள் நகர்ந்தாள்.

உண்மையில் அவன் மனம் மாற்றம் கண்டிருந்தது...

அவன் அவளை காதலிப்பதை அறிந்திருந்தான்.

அவன் காதலை சொல்ல துடித்து கொண்டிருந்தான்.

மனம் எச்சரித்தது...

"பொறுமையா இருடா!ரகுவரன் விஷயம் ஒரு முடிவுக்கு வரட்டும்!அப்பறமா சொல்லுவ!"-அதுவும் சரியான முடிவு தான்.

"வாட்?கௌதமுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?"

"எஸ்!அக்ஷயா!இரண்டு நாள் முன்னாடி தான்!"

"வாட் தி ஹெல்!"

"உனக்கு தெரியாதா?நான் உங்களுக்குள்ள பிரேக் அப் ஆயிடுத்துன்னு நினைத்தேன்!ஸாரி டூ சே திஸ்!பொண்ணு நல்லா ஹோம்லியா அழகா இருக்கா!"

"ஷட் அப்!"-இணைப்பை துண்டித்தவள் தன் கைப்பேசியை போட்டு உடைத்தாள்.

'அவன் எப்படி என்னை நிராகரித்தான் ?என்னிடம் என்ன இல்லை??யாரவள்??எங்களுக்குள் நுழைந்தவள்??விட மாட்டேன்!!கௌதம் எனக்கு மட்டும் தான் சொந்தம்!"-அவள் அவளது காதலை இழந்ததற்காக வருத்தப்பட்டாளோ?இல்லயோ...அவளை வேறொருத்தி தோற்கடித்தாள் என்று பொறாமை கொண்டாள்.

"மா!வெளியே போயிட்டு வரேன்!"-வேகவேகமாக வெளியே வந்தவனின் எதிர்பட்டாள் அனு.

அவளை பார்த்து திடுக்கிட்டான் அவன்.அவள் அவனை மேழும்,கீழும் பார்த்தாள்.

"என்ன?"அவள் திருதிருவென விழித்தாள்.

"ஹலோ!என்ன?"

"இங்கே இருக்கிற குட்டி பசங்க உங்க ஃப்ரண்ட்ஸா?"

"என்ன?"

"சொல்லுங்க!"

"இல்லை..."

"அப்போ!உங்களுக்கு பிரச்சனை இல்லை!யாராவது என்னை கேட்டா நான் இல்லைன்னு சொல்லிடுங்க!"-என்று ஓடியவளின் கரத்தை பற்றினான் கௌதம்.

முதல் ஸ்பரிசம் அவனது தீண்டலில் நுட்பமாக செயலிழந்து போனாள்அனு.

ஏதோ உணர்ந்தவன் அவளை விட்டான்.

"அது...ஏன் சொல்லணும்!"

"ப்ளீஸ் சொல்லுங்க!"

"நீ ஏன்னு சொல்லு!"அவர்கள் பேசுவதற்குள் சில வாண்டுகள் வந்து இருவர் மீது வண்ணங்களை தூவினர்.

ஆம்...!!அன்று ஹோலி!!

"ஐயயோ!சாரி...அண்ணா!நான் அக்கா மேலே தான் தூவ வந்தேன்!"

"டேய்!"-அவன் கோபமாக அவர்கள் ஓடிவிட்டனர்.

அனு சற்று பயத்தோடு அவனை பார்த்தாள்.

"இங்கே வந்து இரண்டு நாள் தான் ஆகுது!என்ன இதெல்லாம்?"

"இல்லைங்க...நான்!!"

"உன்னை..."-என்று அவன் மீதிருந்த வண்ணங்களை அவள் மேல் பூசிவிட்டான்.

அவள் சிறு குழந்தையை போல அழ ஆரம்பித்தாள்.

"வாயை மூடு!"-சட்டென அழுகை நின்றது.

"எல்லாம் உன்னால தான்!!"-என்று மீண்டும் குளிக்க சென்றான் அவன்.அவன் செல்வதையே பார்த்து கொண்டிருந்தவளின் முகத்தில் புன்னகையோடு கலந்த நாணம் வெளிப்பட்டது.

தே சமயத்தில்....

"ஏ...சதி!இப்படி வா!"-சிவனே என்று சென்று கொண்டிருந்தவளின் கரத்தை பற்றி இழுத்தான் ராகுல்.

"என்னங்க?என்னாச்சு?"

"உஷ்!சத்தம் போடாதே!உன்னை யார் இன்னிக்கு வயிட் கலர் சுடிதார் போட சொன்னது?"

"ஏன்?என்னாச்சு?"

"உஷ்!சத்தம் போடாதே!"-அவர்கள் நின்றிருந்த இடம் மிகவும் குறுகலானது.அவர்கள் இருவருக்கும் இடையே இடைவெளி என்பது மூச்சு காற்று சென்று வரும் வழி அவ்வளவு தான்!!!"-எதிர்நோக்கா இந்த நெருக்கம் அவளது இதயத்துடிப்பை நொடியில் உயர்த்தியது.

அவனது கரங்கள் அவளை அணைத்திருந்தன.

திடீரென ஒரு சிறுவன் வந்து அவர்களை பார்த்து

"ஐயயோ!ஷேம்!ஷேம்!"என்று கூற தங்களின் நிலை உணர்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.தீக்ஷா விலகி வெளியே வர அவள் மேல் வண்ணங்கள் தூவப்பட்டன.

அவளை தொடர்ந்து வந்தவன் மேலும் நிறங்கள் பூசப்பட்டன.ஆனால் இருவரும் அதை கவனிக்கவில்லை.

பின்னால் திரும்பி ராகுலை பார்த்தாள் சதி.அவன் அவளையே பார்த்து கொண்டிருக்க தலைக்குனிந்தப்படி அங்கிருந்து வந்துவிட்டாள் அவள்.

காதல் இரு இணைகளுக்குள்ளும் கண்ணாமூச்சி ஆடி கொண்டிருந்தது.

தொடரும்

Episode # 16

Episode # 18

{kunena_discuss:877}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.