(Reading time: 14 - 28 minutes)

"துநாள் வரைக்கும் தெரியாதுங்க!இப்போ தெரிந்து கொண்டேன்!"-என்று அவன் கரத்தை தன் மேலிருந்து எடுத்துவிட்டாள்.

"மன்னிச்சிடுங்க!தெரியாம பேசிட்டேன்!"-மன்னிப்பு ஒன்றை கூறிவிட்டு தனியாக அவனை விடுத்து அவ்விடம் நீங்கினாள்.

மனம் வலித்தது.ஒரு மாபெரும் பிரிவு இருவருக்குள்ளும் படர்ந்திருந்த காதலை உடைத்து நொறுக்கியது.

வீட்டிற்கு வந்தவள் நேராக தங்கள் அறைக்கு சென்று கதவை தாழிட்டு கொண்டாள்.

"என்னைப் பற்றி என்ன தெரியும் உனக்கு?"-அந்தக்கேள்வி அவளை வெகுவாக பாதித்து இருந்தது.

காதலின் வலிகள் மிக கொடியவை தான்!!நேசம் மிகு பந்தத்தை பிரிக்கும் ஊடகங்கள் எவ்வாறு நம்மை எதிர்கொள்ளும் என்பதை இறைவன் ஒருவனே அறிவான் போலும்!!

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

மீராவின் "கிருஷ்ணசகி" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்... 

"பாம்பேக்கு இன்னும் பத்துநாள்ல அந்த ஷிப் போகணும்!"-தனக்கு கீழ் பணியாற்றும் ஒருவனிடம் கூறினார் ரகுவரன்.

"மொத்தம் எத்தனை பொண்ணுங்க?"

"இருநூறு பேர்!"

"யாருக்கும் சந்தேகம் வர கூடாது!"

"எஸ் ச்சீப்!"

"முக்கியமா அந்த ராகுலுக்கு!"

"ம்..."

"மீறி வம்பு செய்தா கதையை முடித்திடுங்க!"

"ஓ.கே.ச்சீப்!"

"போகலாம்!"-அந்த தடியன் புறப்பட்டான்.

"இத்தனை வருஷம் என்னோட சாம்ராஜ்ஜியத்துல இதுவரைக்கும் என்னை எதிர்க்கிற துணிவு எவனுக்கும் இருக்கலை...யார்டா நீ?உன்னால முடிந்தா தடுத்துப்பார்!ராகுல்!"-என்று கண்ணாடியை பலமாக குத்தினார் அவர்.

"மா!பசிக்குது!"-இரண்டாவது முறையாக கூவினான் ராகுல்.

"ஸாரிடா!இதோ வந்துட்டேன்!"-அவர் உணவை பரிமாற ஆயத்தமாக,

"மா!எனக்கு இந்த சம் சொல்லித்தா!"-என்று உள்ளிலிருந்து ஒரு கூவல் வந்தது.

"இருடா!அண்ணனுக்கு சாப்பாடு போட்டுட்டு வரேன்!"

"மா!ப்ளீஸ்!இது முடிந்தா தூங்கிடுவேன்மா!"

"மா!அவனை போய் பாரு!"

"நீ சாப்பிடுடா!அவன் இருக்கிறான்!"

"மா!!போம்மா!அவன் படிக்கிறதே அதிசயம்!என் தம்பியை அரியர் கிளியர் பண்ண விட மாட்ட போலயே!"-அவர் புன்னகைத்தார்.

"தீக்ஷா!"-மௌனமாக சென்றவளை தடுத்தது அவர் குரல்.

"என்னம்மா?!"

"இவனுக்கு கொஞ்சம் பரிமாறு இதோ வந்துடுறேன்!"-பொறுப்பை அவளிடம் தந்துவிட்டு அவர் சென்றார்.

ஒரு நொடி மௌனம் காத்தவள் பரிமாற ஆயத்தமாக அவன் சாப்பிடாமல் எழுந்தான்.

அவள் கேள்வியாக பார்த்தாள்.

கையை கழுவிக்கொண்டு அமைதியாக தனது அறைக்கு சென்றான்.

"என்னம்மா?எங்கே அவன்?"-பதில் பேச இயலாமல் கண்ணீர் தடுத்தது.

அழுதுக்கொண்டே அந்த இடத்தை தியாகித்தாள்.

மதுவின் மனம் துணுக்குற்றது.

"இறைவா!இது என்ன புது சோதனை?"

-தாய் மனம் கலங்கியது.

ரவு...

தங்கள் அறைக்குள் வந்தாள் சதி.

ராகுல் உறங்கி கொண்டிருந்தான்.

அவள் கண்கள் கரைய ஆயத்தமாகின.

அமைதியாக ஒரு போர்வையை எடுத்து தரையில் விரித்து தலையணை போட்டு படுத்துக்கொண்டாள்.அவன் தான் அவள் அருகாமையை விரும்பவில்லையே!!!

சில நிமிடங்கள் கழித்து கண்விழித்தான் அவன்.திரும்பி அவளை பார்த்தான்.

ஏதோ சிந்தித்தவன் அவன் கரம் அழுந்த பற்றிய இடத்தைக் கண்டான்.அது நன்றாக சிவந்திருந்தது.சற்றே மனம் வலித்தது.பின்,திரும்பி படுத்துக்கொண்டான்.

எதற்காக இப்படி எல்லாம் செய்கிறான்??காரணம் உண்டு..!!விரைவிலே புலப்படும்!!!

"நான் நாளைக்கு டெல்லி கிளம்புறேன் மது!"-மதுவிடத்தில் கூறினாள் ஸ்ரேயா.

"ஏன்?வந்து கொஞ்ச நாள் தானே ஆகுது!"

"இல்லை...அங்கே கொஞ்சம் வேலை இருக்கு!அதான்..."

"திரும்ப எப்போ வருவ?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.