(Reading time: 21 - 41 minutes)

ன்ன சார் இது.?????- ராம் & பரணி

ம்ம்ம்ம் எனக்கும் இது பெரிய ஷாக்கா தான் இருந்தது அத விட ரொம்ப கோவமா இருந்தது எங்க டிப்பார்ட்மெண்ட்லயே இதுக்கு துணையா ஆட்கள் இருக்காங்களேநு தான்..ரொம்ப சென்ஸிடிவ்வான மேட்டர் க்கைஸ்..அதனால தான் இப்போ வர இத நா யார்கிட்டயும் ஷேர் பண்ணல..பல முக்கிய புள்ளிகள் மாட்டுவாங்கநு மட்டும் உறுதி..இந்த ஆடியோ ரெக்கார்டிங்கும் கேளுங்க மூணு பேர் வாய்ஸ் ரெக்கார்ட் ஆயிருக்கு அந்த பொண்ணோட லெட்டர்படி ஒண்ணு அந்த ஹாஸ்பிட்டல் டீன்னா இருக்கும் இன்னொரு வாய்ஸ் எனக்கு ரொம்பவே பரிட்சையமா இருக்கு பட் யாருநு தெரில அண்ட் த தர்ட் பேர்ஸன் ஆல்சோ நாம கண்டுபிடிக்கனும்இது விஷயமா என்ன ஹெல்ப் வேணும்னாலும் என்ன கேளுங்க……பட் ரொம்பவே ஸீக்ரெட்டா இருக்கனும்       

ஷுவர் சார்..கண்டிப்பா கூடிய சீக்கிரம் முடிச்சுடலாம்…-பரணி..

ஆல்சோ நாம கம்யுனிகேட் பண்ணிக்குறதுக்கு ப்ரைவேட் நம்பர்ஸ் வாங்கிகலாம் சார்..-ராம்

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

சகியின் "சதி என்று சரணடைந்தேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

.கே ராம் அண்ட் பரணி அப்பப்போ கேஸ் பத்தின டீடெய்ல்ஸ் எனக்கு அப்டேட் பண்ணுங்க,மோஸ்ட்லி நேர்ல மீட் பண்ணிக்க வேண்டாம்…   

இதுதான் நா இப்போ இங்க இருக்குறதுக்கு காரணம் மகி..50% இன்வெஸ்டிகேஷன்ஸ் முடிஞ்சுது அந்த நிலைமைல தான்..எங்களபத்தி அவங்களுக்கு டவுட் வர ஆரம்பிச்சது அதனால ACP சார் அவசரமா எங்களை இங்க அனுப்பிவச்சுட்டாரு..இப்போ வர என் அப்பா அம்மாக்கு கூட இது எதுவுமே தெரியாது..ஏதோ ஒரு காரணத்துக்காக தான் இப்படி இருக்கேன்னு புரிஞ்சுகிட்டாங்க..அப்பாக்கு இதெல்லாம் உனக்கு தெரியாம கல்யாணத்த நடத்துரதுல விருப்பமில்லை..நானும் உன்கிட்ட மறைக்கனும்நு நெனைக்கல குட்டிமா,..இப்போ எல்லாத்தையும் சொல்லிட்டேன்.ஆனா உன்ன வர ட்ரேஸ் பண்ணிட்டாங்கனா விஷயம் ரொம்ப சீரியஸ்னு தோனுது..இதுக்கு அப்புறமும் என்ன ஏத்துப்பியாநு உன்ன கேக்க மாட்டேன்..இனி முடிவு உன் கைல நீ என்ன சொன்னாலும் நா ஏத்துக்குறேன்,- குரல் உள்ளேயே போயிருந்தது ராமிற்கு

எவ்ளோ சீக்கிரம் முடியுமோ கல்யாணம் பண்ணிக்கலாம் ராம் நா அம்மாகிட்ட பேசுறேன்..-மகி

குட்டிமா….

ஆமா ராம் உங்க அப்பாகிட்டயும் நா பேசனும் வீட்டுக்கு கூட்டிட்டு போறீங்களா?

அவளது கைகளை இறுகப் பற்றிக் கொண்டான்..தேங்க் யு சோ சோ சோ மச் மகி..ஏதோ ஒரு வேகத்துல உன் முடிவு தான்னு சொல்லிட்டேன்..ஆனா நீ இல்லாத ஒரு லைப்ப என்னால நினைக்ககூட முடில டா..இருந்தாலும் அந்த போன்கால்அ ஈஸியா எடுத்துக்க முடில மகி..

என் ராமை மீறி என்ன யாரு என்ன பண்ணிட முடியும்ப்பா,..உங்கள தாண்டி யாரையாவது வர விட்ருவீங்களா என்ன? புன்னகையோடு கேட்டாள்..

ராம் அசந்துதான் போனான்..எவ்வளவு அன்பும் நம்பிக்கையும் இருந்தால் இந்த மாதிரியான பதில் கூறுவாள்..என் உயிரை கொடுத்தாவது இவளை காப்பேன் என உறுதி பூண்டான்

அடுத்து இருவரும் சென்ற இடம் ராமின் வீடு..

ராமின் அப்பா அம்மா இருவரும் ஹாலில் டீவி பார்த்துக் கொண்டிருந்தனர்..தயக்கத்தோடே உள்ளே நுழைந்தாள் மகி..ராஜி அவளை வரவேற்று அமரச் சொன்னார்..

சாரிம்மா இப்போவே வீட்டுக்கு வரது தப்புநு தெரியும் அப்பாகிட்ட பேசனும் அவர அலைய வச்சா நல்லாயிருக்காது போன்ல பேசுறதும் சரிப்படாது அதான்…………

ராஜசேகர் புன்னகையோடு அமர்ந்திருந்தார்..ராஜி தான் இது உன் வீடு மகி நீ எப்போ வேணா வரலாம்..சரி என்ன சாப்டுற..

அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்மா பேசிட்டு நா கிளம்புறேன்..ஹாஸ்ட்டல்ல லேட் ஆன விட மாட்டாங்க..

ராஜி கணவரிடம்,ஏங்க மகி உங்ககிட்டதான் பேச வந்துருக்கா..

தெரியுது ராஜி..அவ கொஞ்சம் ரிலாக்ஸ்ட் ஆகட்டும்நு தான் அமைதியா இருந்தேன்..ஹாய் மகி சொல்லு என்ன பேசனும்..

ராஜி,ராம் இருவருமே ஒருவித எதிர்பார்ப்போடு காத்திருந்தனர்..

நா என்னோட மீதி வாழ்க்கைய உங்க பையனோட அவரோட மனைவியா வாழனும்நு ஆசைப்பட்றேன்..இந்த வீட்டோட இன்னொரு மகளா என்னை ஏத்துப்பீங்களாப்பா?

ராம் வாயடைத்து நின்றான்..அவனது தந்தை நண்பணாக பழகுபவர்தான் இருந்தாலும் அவரின் தோற்றத்தை கண்டே சில விஷயங்களை பேச யோசிப்பான்..ஆனால் மகி அவரை அப்பா என்று அழைத்ததோடு தன்னை மகளாக ஏற்றுக்கொள்ள கேட்கிறாள்..நடப்பதெல்லாம் கனவோ என்று தோன்றியது..

ராஜசேகரோ பலமாக சிரித்துவிட்டு.சபாஷ் மருமகளே!!!!இந்த வீட்ல என்னோட பேசி ஜெய்க்க ஆள் வந்தாச்சு போல இருக்கேநல்லா பேசுற,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.